சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.074   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -நினைந்த திருநேரிசை - கொல்லி கனகாங்கி நவரோசு கனகாம்பரி ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=l2iq7ggG6lA   Add audio link Add Audio
முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்கும்
கொத்தினை வயிர மாலைக் கொழுந்தினை யமரர் சூடும்
வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற
அத்தனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.


1


முன்பனை யுலகுக் கெல்லா மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை யிலங்கு சோதி யிறைவனை யரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த வெங்கள்
அன்பனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.


2


கரும்பினு மினியான் றன்னைக் காய்கதிர்ச் சோதி யானை
இருங்கட லமுதந் தன்னை யிறப்பொடு பிறப்பி லானைப்
பெரும்பொருட் கிளவி யானைப் பெருந்தவ முனிவ ரேத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.


3


செருத்தனை யருத்தி செய்து செஞ்சரஞ் செலுத்தி யூர்மேல்
கருத்தனைக் கனக மேனிக் கடவுளைக் கருதும் வானோர்க்
கொருத்தனை யொருத்தி பாகம் பொருத்தியு மருத்தி தீரா
நிருத்தனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.


4


கூற்றினை யுதைத்த பாதக் குழகனை மழலை வெள்ளே
றேற்றனை யிமையோ ரேத்த விருஞ்சடைக் கற்றை தன்மேல்
ஆற்றனை யடிய ரேத்து மமுதனை யமுத யோக
நீற்றனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.


5


Go to top
கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை யுரித்த கண்டன்
விருப்பனை விளங்கு சோதி வியன்கயி லாய மென்னும்
பொருப்பனைப் பொருப்பன் மங்கை பங்கனை யங்கை யேற்ற
நெருப்பனை நினைந்த நெஞ்ச நேர்பட நினைந்த வாறே.


6


நீதியா னினைப்பு ளானை நினைப்பவர் மனத்து ளானைச்
சாதியைச் சங்கவெண் ணீற் றண்ணலை விண்ணில் வானோர்
சோதியைத் துளக்க மில்லா விளக்கினை யளக்க லாகா
ஆதியை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.


7


பழகனை யுலகுக் கெல்லாம் பருப்பனைப் பொருப்போ டொக்கும்
மழகளி யானையின் றோன் மலைமக ணடுங்கப் போர்த்த
குழகனைக் குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த
அழகனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.


8


விண்ணிடை மின்னொப் பானை மெய்ப்பெரும் பொருளொப் பானைக்
கண்ணிடை மணியொப் பானைக் கடுவிருட் சுடரொப் பானை
எண்ணிடை யெண்ண லாகா விருவரை வெருவ நீண்ட
அண்ணலை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.


9


உரவனைத் திரண்ட திண்டோ ளரக்கனை யூன்றி மூன்றூர்
நிரவனை நிமிர்ந்த சோதி நீண்முடி யமரர் தங்கள்
குரவனைக் குளிர்வெண் டிங்கட் சடையிடைப் பொதியுமை வாய்
அரவனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -நினைந்த திருநேரிசை
4.074   திருநாவுக்கரசர்   தேவாரம்   முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல்
Tune - கொல்லி   (பொது -நினைந்த திருநேரிசை )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.074