பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல் ஆடினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.
|
1
|
இலையினார்சூல மேறுகந் தேறியேயிமை யோர்தொழ நிலையினாலொரு காலுறச் சிலையினான்மதி லெய்தவன் அலையினார் புனல்சூடிய அண்ணலாரறை யணிநல்லூர் தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.
|
2
|
என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான் பின்பினாற்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் றாள்களுக் கன்பினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.
|
3
|
விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன் உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும் அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர் பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.
|
4
|
தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழு தேவன்நீ ஆயினாய்கொன்றை யாயன லங்கையாயறை யணிநல்லூர் மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப் பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.
|
5
|
Go to top |
விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர் நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர் உரையினாலுயர்ந் தார்களு முரையினாலுயர்ந் தார்களே.
|
6
|
வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின் ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற வெம்மிறை ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர் வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.
|
7
|
தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் றாழ்சடை முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ அக்கினோடெழி லாமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர் நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.
|
8
|
வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார் செய்வதேயலங் காரமா மிவையிவைதேறி யின்புறில் ஐயமேற்றுணுந் தொழிலரா மண்ணலாரறை யணிநல்லூர்ச் சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.
|
9
|
வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின் சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி ஆக்கியம்மழு வாட்படை யண்ணலாரறை யணிநல்லூர்ப் பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.
|
10
|
Go to top |
கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப் பழியிலாமறை ஞானசம் பந்தனல்லதோர் பண்பினார் மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் றாள்தொழக் கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.
|
11
|