சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் கங்கையென்னும் காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேல் பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
|
1
|
உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த வுத்தமர்கள் இடும்பைப் படாம லிரங்குகண் டாயிரு ளோடச் செந்தீ அடும்பொத் தனைய வழன்மழு வாவழ லேயுமிழும் படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் பசுபதியே.
|
2
|
தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும் மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால் வேரித்தண் பூஞ்சுட ரைங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப் பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே.
|
3
|
ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார் அருவினைச் சுற்ற மகல்விகண் டாயண்ட மேயணவும் பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப் பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே.
|
4
|
இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க் கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்ட மெண்டிசையும் சுடர்த்திங்கள் சூடிச் சுழல்கங்கை யோடுஞ் சுரும்புதுன்றிப் படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
|
5
|
| Go to top |
அடலைக் கடல்கழி வானின் னடியிணை யேயடைந்தார் நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் கொன்றைதிங்கள் சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா மணிகிடந்து படரச் சுடர்மகு டாவெம்மை யாளும் பசுபதியே.
|
6
|
துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார் மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் மூன்றுடைய அறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு மந்திரத்தேர்ப் பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.
|
7
|
இப்பாடல் கிடைக்கவில்லை.
|
8
|