தேவாரப்பண்களை யாழிசையில் வகுத்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவராவார் . இவர்
திருஞானசம்பந்தரோடு தலப்பயணம் மேற்கொண்டு அவர்தம் பாடல்களுக்கு யாழில்
இசையமைத்தார் . பிற்காலத்தில் மாமன்னன் இராசராசன் என்னும் திருமுறைகண்ட
சோழனால் திருமுறைகள் நம்பியாண்டார் நம்பிகளால் திருமுறைப்பதிகங்கள் தொகுக்கப்பட்டன.
அக்காலத்தில் திருநீலகண்டயாழ்ப்பாணர் மரபில் வந்த மாதரசியின் (பாடினி) உதவியால் பண்கள்
மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன.
மாணிக்கசாகர் பாடிய திருவாசம் முல்லைத்தீம்பாணி (மோகன ராகம் ) என்னும் பண்ணிலும் ,
திருவிசைப்பா- ஒன்பதாம் திருமுறை சாளரபாணி (ஆனந்த பைரவி) என்ற பண்ணிலும்
தொன்றுதொட்டு மரபாகப்பாடப்பட்டு வருகின்றன.
கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால்,
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்-- திருஞானசம்பந்த சுவாமிகள் 3.071.1
கோழை பொருந்திய குரல் உடையராயினும் , பாடும் கவிகளைப் பொருளுணரும்படி நிறுத்திப் பாடாவிடினும் , தங்களால் இயன்ற இசையில் , பக்தியுடன் பாடுகின்ற பாடல்கள் எவையாய் இருந்தாலும் , அவற்றிற்கு மகிழ்கின்றவன் சிவபெருமான்