சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  

Thirumurai Pann
திருஞானசம்பந்தர் 22 பண்களும் , திருநாவுக்கரசர் 10 பண்களும் , சுந்தரர் 17 பண்களும் பாடியுள்ளனர் . யாழ்முரிப்பண் , அந்தாளிக்குறிஞ்சிப்பண் திருஞானசம்பந்தர் மட்டுமே பாடியுள்ளார் . செந்துருத்திப்பண் சுந்தரர் மட்டுமே பாடியுள்ளார் .

தேவாரப்பண்களை யாழிசையில் வகுத்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவராவார் . இவர் திருஞானசம்பந்தரோடு தலப்பயணம் மேற்கொண்டு அவர்தம் பாடல்களுக்கு யாழில் இசையமைத்தார் . பிற்காலத்தில் மாமன்னன் இராசராசன் என்னும் திருமுறைகண்ட சோழனால் திருமுறைகள் நம்பியாண்டார் நம்பிகளால் திருமுறைப்பதிகங்கள் தொகுக்கப்பட்டன. அக்காலத்தில் திருநீலகண்டயாழ்ப்பாணர் மரபில் வந்த மாதரசியின் (பாடினி) உதவியால் பண்கள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன.

மாணிக்கசாகர் பாடிய திருவாசம் முல்லைத்தீம்பாணி (மோகன ராகம் ) என்னும் பண்ணிலும் , திருவிசைப்பா- ஒன்பதாம் திருமுறை சாளரபாணி (ஆனந்த பைரவி) என்ற பண்ணிலும் தொன்றுதொட்டு மரபாகப்பாடப்பட்டு வருகின்றன.

கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால்,
ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம்
-- திருஞானசம்பந்த சுவாமிகள் 3.071.1
கோழை பொருந்திய குரல் உடையராயினும் , பாடும் கவிகளைப் பொருளுணரும்படி நிறுத்திப் பாடாவிடினும் , தங்களால் இயன்ற இசையில் , பக்தியுடன் பாடுகின்ற பாடல்கள் எவையாய் இருந்தாலும் , அவற்றிற்கு மகிழ்கின்றவன் சிவபெருமான்