சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.069   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருக்கோவலூர் - திருநேரிசை அருள்தரு சிவானந்தவல்லியம்மை உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=KeSjq_YinCA   Add audio link Add Audio

செத்தையேன் சிதம்பன் நாயேன் செடியனே னழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிட மறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கே னிருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே கோவல் வீரட்ட னீரே.

1

தலைசுமந் திருகை நாற்றித் தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னு ணித்தலு மைவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன் வேண்டிற்றே வேண்டி யெய்த்தேன்
குலைகள்மாங் கனிகள் சிந்துங் கோவல்வீ ரட்ட னீரே.

2

வழித்தலைப் படவு மாட்டேன் வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப் பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை யென்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க் கோவல்வீ ரட்ட னீரே.

3

சாற்றுவ ரைவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக் கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவ ரலந்து போனே னாதியை யறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.

4

தடுத்திலே னைவர் தம்மைத் தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப் பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார வார்வலித் தன்பு திண்ணம்
கொடுத்திலேன் கொடிய வாநான் கோவல்வீ ரட்ட னீரே.

5
Go to top

மாச்செய்த குரம்பை தன்னை மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்த நாலு மைந்து நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னு ணித்தலு மைவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன் கோவல்வீ ரட்ட னீரே.

6

படைகள்போல் வினைகள் வந்து பற்றியென் பக்க னின்றும்
விடகிலா வாத லாலே விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலே னென்செய் கேனா னிரப்பவர் தங்கட் கென்றும்
கொடையிலேன் கொள்வதே நான் கோவல்வீ ரட்ட னீரே.

7

பிச்சிலேன் பிறவி தன்னைப் பேதையேன் பிணக்க மென்னும்
துச்சுளே யழுந்தி வீழ்ந்து துயரமே யிடும்பை தன்னுள்
அச்சனா யாதி மூர்த்திக் கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே கோவல்வீ ரட்ட னீரே.

8

நிணத்திடை யாக்கை பேணி நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை யாட்டம் பேசி மக்களே சுற்ற மென்னும்
கணத்திடை யாட்டப் பட்டுக் காதலா லுன்னைப் பேணும்
குணத்திடை வாழ மாட்டேன் கோவல்வீ ரட்ட னீரே.

9

விரிகட லிலங்கைக் கோனை விரிகயி லாயத்தின் கீழ்
இருபது தோளும் பத்துச் சிரங்களு நெரிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப் படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் வீரட்ட னாரே.

10
Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருக்கோவலூர்
4.069   திருநாவுக்கரசர்   தேவாரம்   செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,
Tune - திருநேரிசை   (திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் சிவானந்தவல்லியம்மை)
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000