![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=PNJ3u9OedBI Add audio link
3.107
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநாரையூர் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு திரிபுரசுந்தரியம்மை உடனுறை அருள்மிகு சௌந்தரேசர் திருவடிகள் போற்றி
கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லா னுமையோ டொருபாகன்
அடலிடை யிற்சிலை தாங்கியெய்த வம்மா னடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துகந்தானிட நாரை யூர்தானே.
1
விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமா னெரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்
றெண்ணுமி னும்வினை போகும்வண்ண மிறைஞ்சுந் நிறைவாமே.
2
தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையா னிழைதோன்றும்
பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதி
நாடொரு காலமுஞ் சேரநின்றதிரு நாரை யூரானைப்
பாடுமி னீர்பழி போகும்வண்ணம் பயிலு முயர்வாமே.
3
வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்
பெண்ணி லமர்ந்தொரு கூறதாய பெருமா னருளார்ந்த
அண்ணன் மன்னியுறை கோயிலாகு மணிநாரை யூர்தன்னை
நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே.
4
வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊனம ரின்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான் றிருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே.
5
Go to top
கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த வழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன்றிரு நாரை யூர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கடம்மைப் புணரும் புகறானே.
6
ஊழியு மின்பமுங் காலமாகி யுயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகிநளிர் நாரை யூர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.
7
கூசமிலா தரக்கன் வரையைக் குலுங்க வெடுத்தான்றோள்
நாசம தாகி யிறவடர்த்த விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோ னிடம்போலும்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை யூர்தானே.
8
பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்
ஆமள வுந்திரிந் தேத்திக்காண்ட லறிதற் கரியானூர்
பாமரு வுங்குணத் தோர்களீண்டிப் பலவும் பணிசெய்யும்
தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை யூர்தானே.
9
வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை
உற்றரை யோர்க ளுரைக்குஞ்சொல்லை யுணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் றொழிலாரப்
பெற்றர வாட்டிவரும் பெருமான்றிரு நாரை யூர்சேர்வே.
10
Go to top
பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை யூரான்மேல்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கு மவலக் கடல்தானே.
11
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: திருநாரையூர்
2.086
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
உரையினில் வந்த பாவம், உணர்
Tune - பியந்தைக்காந்தாரம்
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.102
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காம்பினை வென்ற மென்தோளி பாகம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
3.107
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கடல் இடை வெங்கடு நஞ்சம்
Tune - பழம்பஞ்சுரம்
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
5.055
திருநாவுக்கரசர்
தேவாரம்
வீறு தான் உடை வெற்பன்
Tune - திருக்குறுந்தொகை
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
6.074
திருநாவுக்கரசர்
தேவாரம்
சொல்லானை, பொருளானை, சுருதியானை, சுடர்
Tune - திருத்தாண்டகம்
(திருநாரையூர் சௌந்தரேசர் திரிபுரசுந்தரியம்மை)
11.031
நம்பியாண்டார் நம்பி
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
திருநாரையூர் விநாயகர் திருஇரட்டைமணிமாலை
Tune -
(திருநாரையூர் )
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000