![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.001  
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
Tune - காந்தாரபஞ்சமம் (Location: கோயில் (சிதம்பரம்) God: திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர் Goddess: சிவகாமியம்மை)
ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத சிற்றம்பலம் நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே! பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர் வெண்திங்கள் சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே! | [1] |
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் நான்ம றைவல்ல ஞானசம் பந்தன் ஊறும் இன்தமி ழால்உயர்ந் தார்உறை தில்லைதன்னுள் ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத் தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை கூறு மாறுவல் லார்உயர்ந் தாரொடும் கூடுவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.002  
பந்து சேர் விரலாள், பவளத்துவர்
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருப்பூந்தராய் God: Goddess: )
பந்து சேர் விரலாள், பவளத்துவர் வாயினாள், பனி மா மதி போல் முகத்து அந்தம் இல் புகழாள், மலைமாதொடும் ஆதிப்பிரான் வந்து சேர்வு இடம் வானவர் எத்திசையும் நிறைந்து, வலம்செய்து, மாமலர் புந்தி செய்து இறைஞ்சிப் பொழி பூந்தராய் போற்றுதுமே. | [1] |
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்வு இடம், தேன் அமர் பூம்பொழில் திகழ், பொன் பதி பூந்தராய் போற்றுதும்! என்று ஓம்பு தன்மையன்-முத்தமிழ் நால்மறை ஞானசம்பந்தன்-ஒண் தமிழ்மாலை கொண்டு ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா, வினையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.003  
இயல் இசை எனும் பொருளின்
Tune - கொல்லி (Location: திருப்புகலி -(சீர்காழி ) God: மந்திரபுரீசுவரர் Goddess: பெரியநாயகியம்மை)
இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம் புயல் அன மிடறு உடைப் புண்ணியனே! கயல் அன வரி நெடுங்கண்ணியொடும் அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே! கலன் ஆவது வெண்தலை; கடிபொழில் புகலி தன்னுள், நிலன் நாள்தொறும் இன்பு உற, நிறை மதி அருளினனே. | [1] |
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர், விண்ணவர் அடி தொழ விளங்கினானை, நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார், நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர், சிவன் உலகம்; இடர் ஆயின இன்றித் தாம் எய்துவர், தவநெறியே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.004  
இடரினும், தளரினும், எனது உறு
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருவாவடுதுறை God: மாசிலாமணியீசுவரர் Goddess: ஒப்பிலாமுலையம்மை)
இடரினும், தளரினும், எனது உறு நோய் தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்; கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே! இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! | [1] |
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த இலை நுனை வேல்படை எம் இறையை, நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார், வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம் நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.005  
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருப்பூந்தராய் God: Goddess: )
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய மிக்க செம்மை விமலன், வியன் கழல் சென்று சிந்தையில் வைக்க, மெய்க்கதி நன்று அது ஆகிய நம்பன்தானே. | [1] |
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய் அந்தம் இல் எம் அடிகளை, ஞானசம் பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும்! நும் பந்தம் ஆர் வினை பாறிடுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.006  
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருக்கொள்ளம்பூதூர் God: வில்வவனேசுவரர் Goddess: சவுந்தராம்பிகையம்மை)
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய நம்பனை உள்க, செல்ல உந்துக சிந்தையார் தொழ, நல்கும் ஆறு அருள் நம்பனே! | [1] |
கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர், நன்று காழியுள் ஞானசம்பந்தன் இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார், போய், என்றும் வானவரோடு இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.007  
கண் நுதலானும், வெண் நீற்றினானும்,
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருப்புகலி -(சீர்காழி ) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும் புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர், பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே! | [1] |
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்) நகர்ப் பாங்கனை, ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை, ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக, இசை வல்லவர், ஓங்கு அமராவதியோர் தொழச் செல்வதும் உண்மையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.008  
சடை உடையானும், நெய் ஆடலானும்,
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருக்கடவூர் வீரட்டம் God: அமிர்தகடேசுவரர் Goddess: அபிராமியம்மை)
சடை உடையானும், நெய் ஆடலானும், சரி கோவண- உடை உடையானும், மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வனும், கடை உடை நன்நெடு மாடம் ஓங்கும் கடவூர்தனுள் விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே? | [1] |
வெந்த வெண்நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை, அந்தணர் தம் கடவூர் உளானை, அணி காழியான் சந்தம் எல்லாம் அடிச் சாத்த வல்ல மறை ஞானசம்- பந்தன செந்தமிழ் பாடி ஆட, கெடும், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.009  
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர் கேடு இலா வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார், வாழியர்; தோற்றமும் கேடும் வைப்பார், உயிர்கட்கு எலாம்; ஆழியர்; தம் அடி போற்றி! என்பார்கட்கு அணியரே. | [1] |
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய ஆதியை, வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து, ஓதிய ஒண்தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர், மாது இயல் பங்கன் மலர் அடி சேரவும் வல்லரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.010  
அலை, வளர் தண்மதியோடு அயலே
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருஇராமேச்சுரம் God: இராமநாதேசுவரர் Goddess: பர்வதவர்த்தனி)
அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி, உமை முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன்; முனி; இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம், தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே. | [1] |
பகலவன் மீது இயங்காமைக் காத்த பதியோன்தனை இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம், புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ், புந்தியால், அகலிடம் எங்கும் நின்று, ஏத்த வல்லார்க்கு இல்லை, அல்லலே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.011  
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருப்புனவாயில் God: புனவாயிலீசுவரர் Goddess: கருணையீசுவரியம்மை)
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன், பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய், அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம் புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே. | [1] |
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை, கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்- நல்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன தமிழ், நன்மையால் அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள் சேர்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.012  
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருக்கோட்டாறு God: ஐராபதேசுவரர் Goddess: வண்டமர்பூங்குழலம்மை)
வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான், விளங்கும் மறை ஓதிய ஒண்பொருள் ஆகி நின்றான், ஒளி ஆர் கிளி கோதிய தண்பொழில் சூழ்ந்து அழகு ஆர் திருக்கோட்டாற்றுள் ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே. | [1] |
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள் அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை, கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்- படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.013  
மின் அன எயிறு உடை
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருப்பூந்தராய் God: Goddess: )
மின் அன எயிறு உடை விரவலோர்கள் தம் துன்னிய புரம் உகச் சுளிந்த தொன்மையர் புன்னை அம்பொழில் அணி பூந்தராய் நகர் அன்ன அன்ன(ந்) நடை அரிவை பங்கரே. | [1] |
புரம் எரி செய்தவர், பூந்தராய் நகர்ப் பரம் மலி குழல் உமை நங்கை பங்கரைப் பரவிய பந்தன் மெய்ப் பாடல் வல்லவர் சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.014  
ஆரிடம் பாடலர், அடிகள், காடு
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருப்பைஞ்ஞீலி God: நீலகண்டேசுவரர் Goddess: விசாலாட்சியம்மை)
ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால் ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம், நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும் பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே. | [1] |
கண் புனல் விளை வயல் காழிக் கற்பகம் நண்பு உணர் அருமறை ஞானசம்பந்தன் பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார் உண்பின உலகினில், ஓங்கி வாழ்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.015  
மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருவெண்காடு God: சுவேதாரணியேசுவரர் Goddess: பிரமவித்தியாநாயகியம்மை)
மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன், வழிபட நின்ற எம் இறை; வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய, அந்தமும் முதல் உடை, அடிகள் அல்லரே! | [1] |
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன், செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல், சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர் அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.016  
நிணம் படு சுடலையில், நீறு
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருக்கொள்ளிக்காடு God: அக்கினீசுவரர் Goddess: பஞ்சினுமெல்லடியம்மை)
நிணம் படு சுடலையில், நீறு பூசி நின்று, இணங்குவர், பேய்களோடு; இடுவர், மாநடம்; உணங்கல் வெண் தலைதனில் உண்பர்; ஆயினும், குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே. | [1] |
நல்-தவர் காழியுள் ஞானசம்பந்தன், குற்றம் இல் பெரும் புகழ்க் கொள்ளிக்காடரைச் சொல்-தமிழ் இன் இசைமாலை, சோர்வு இன்றிக் கற்றவர், கழல் அடி காண வல்லரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.017  
மரு அமர் குழல் உமை
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருவிசயமங்கை God: விசயநாதேசுவரர் Goddess: மங்கைநாயகியம்மை)
மரு அமர் குழல் உமை பங்கர், வார்சடை அரவு அமர் கொள்கை எம் அடிகள், கோயில் ஆம் குரவு, அமர் சுரபுனை, கோங்கு, வேங்கைகள் விரவிய பொழில் அணி விசயமங்கையே. | [1] |
விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை, நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன், பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் புண்ணியர்; சிவகதி புகுதல் திண்ணமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.018  
துள மதி உடை மறி
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருவைகல்மாடக்கோயில் God: வைகனாதேசுவரர் Goddess: வைகலம்பிகையம்மை)
துள மதி உடை மறி தோன்று கையினர் இளமதி அணி சடை எந்தையார், இடம் உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய, வள மதி தடவிய, மாடக்கோயிலே. | [1] |
மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை, சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம்- பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை சிந்தை செய்பவர், சிவலோகம் சேர்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.019  
எரிதர அனல் கையில் ஏந்தி,
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்) God: பிரமபுரிநாதேசுவரர் Goddess: பூங்குழனாயகியம்மை)
எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில், நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர் அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர் குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே. | [1] |
அழகரை, அடிகளை, அம்பர் மேவிய நிழல் திகழ் சடைமுடி நீலகண்டரை, உமிழ் திரை உலகினில் ஓதுவீர்! கொண்மின்- தமிழ் கெழு விரகினன் தமிழ்செய்மாலையே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.020  
மாது அமர் மேனியன் ஆகி,
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருப்பூவணம் God: பூவணநாதர் Goddess: மின்னாம்பிகையம்மை)
மாது அமர் மேனியன் ஆகி, வண்டொடு போது அமர் பொழில் அணி பூவணத்து உறை வேதனை, விரவலர் அரணம் மூன்று எய்த நாதனை, அடி தொழ, நன்மை ஆகுமே. | [1] |
புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை அண்ணலை அடி தொழுது, அம் தண் காழியுள நண்ணிய அருமறை ஞானசம்பந்தன் பண்ணிய தமிழ் சொல, பறையும், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.021  
நனவிலும் கனவிலும், நாளும், தன்
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருக்கருக்குடி (மருதாந்தநல்லூர்) God: சற்குணலிங்கேசுவரர் Goddess: சர்வாலங்கிரதமின்னம்மை)
நனவிலும் கனவிலும், நாளும், தன் ஒளி நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன்- கனைகடல் வையகம் தொழு கருக்கு அனல்-எரி ஆடும் எம் அடிகள்; காண்மினே! | [1] |
கானலில் விரைமலர் விம்மு காழியான், வானவன் கருக்குடி மைந்தன் தன் ஒளி ஆன, மெய்ஞ் ஞானசம்பந்தன், சொல்லிய ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும், இன்பமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.022  
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு
Tune - காந்தாரபஞ்சமம் (Location: சீர்காழி God: Goddess: )
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும், நெஞ்சு அகம் நைந்து, நினைமின், நாள்தொறும், வஞ்சகம் அற்று! அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே. | [1] |
நல்-தமிழ் ஞானசம்பந்தன்-நால்மறை கற்றவன், காழியர் மன்னன்-உன்னிய அற்றம் இல் மாலைஈர் ஐந்தும், அஞ்சு எழுத்து உற்றன, வல்லவர் உம்பர் ஆவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.023  
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி
Tune - காந்தாரபஞ்சமம் (Location: திருவிற்கோலம் (கூவம்) God: புராந்தகேசுவரர் Goddess: புராந்தரியம்மை)
உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் திருவினான்; வளர்சடைத் திங்கள் கங்கையான்; வெருவி வானவர் தொழ, வெகுண்டு நோக்கிய செருவினான்; உறைவு இடம் திரு விற்கோலமே. | [1] |
கோடல் வெண்பிறையனை, கூகம் மேவிய சேடன செழு மதில் திரு விற்கோலத்தை, நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன பாடல் வல்லார்களுக்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.024  
மண்ணின் நல்ல வண்ணம் வாழல்
Tune - கொல்லி (Location: திருக்கழுமலம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்; எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை கண்ணின் நல்ல(ஃ)து உறும் கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே! | [1] |
கருந் தடந் தேன் மல்கு கழுமல வள நகர்ப் பெருந்தடங் கொங்கையொடு இருந்த எம்பிரான் தனை அருந்தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் விரும்புவார் அவர்கள், போய், விண்ணுலகு ஆள்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.025  
மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்)
Tune - கொல்லி (Location: திருந்துதேவன்குடி God: கர்க்கடகேசுவரர் Goddess: அருமருந்துநாயகியம்மை)
மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை; புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே | [1] |
சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை, மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான்- நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.026  
பிடி எலாம் பின் செல,
Tune - கொல்லி (Location: திருக்கானப்பேர் (திருக்காளையார்கோயில்) God: காளையீசுவரர் Goddess: மகமாயியம்மை)
பிடி எலாம் பின் செல, பெருங்கை மா மலர் தழீஇ, விடியலே தடம் மூழ்கி, விதியினால் வழிபடும் கடி உலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல்! நின் அடி அலால் அடை சரண் உடையரோ, அடியரே? | [1] |
காட்டு அகத்து ஆடலான் கருதிய கானப்பேர் கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான்- நாட்டு அகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன் பாட்டு அகத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.027  
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல்
Tune - கொல்லி (Location: திருச்சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை) God: ஆலந்துறைஈசுவரர் Goddess: அல்லியங்கோதையம்மை)
படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை உடையினார்; உமை ஒரு கூறனார்; ஊர்வது ஓர் விடையினார்; வெண்பொடிப் பூசியார்; விரிபுனல் சடையினார்; உறைவு இடம் சக்கரப்பள்ளியே. | [1] |
தண்வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம் கண் நுதலவன் அடி, கழுமல வள நகர் நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் பண்ணிய இவை சொல, பறையும், மெய்ப் பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.028  
காலை ஆர் வண்டு இனம்
Tune - கொல்லி (Location: திருமழபாடி God: வச்சிரத்தம்பேசுவரர் Goddess: அழகாம்பிகையம்மை)
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும், சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே, வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே. | [1] |
ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும் சீலத்தான், மேவிய திரு மழபாடியை ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல் கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.029  
வாரு மன்னும் முலை மங்கை
Tune - கொல்லி (Location: மேலைத்திருக்காட்டுப்பள்ளி God: தீயாடியப்பர் Goddess: வார்கொண்டமுலையம்மை)
வாரு மன்னும் முலை மங்கை ஓர் பங்கினன்; ஊரு மன்னும் பலி உண்பதும் வெண்தலை காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி நீரு மன்னும் சடை நிமலர் தம் நீர்மையே! | [1] |
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன்- அருமறை அவை வல அணி கொள் சம்பந்தன்-சொல், கருமணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி பரவிய தமிழ் சொல, பறையும், மெய்ப் பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.030  
பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,
Tune - கொல்லி (Location: திருஅரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்) God: பரதேசுவரர் Goddess: அலங்காரநாயகியம்மை)
பைத்த பாம்போடு, அரைக் கோவணம், பாய் புலி, மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டு இடை, நித்தம் ஆக(ந்) நடம் ஆடி, வெண் நீறு அணி பித்தர் கோயில்(ல்) அரதைப் பெரும்பாழியே. | [1] |
நீரின் ஆர் புன்சடை நிமலனுக்கு இடம் என, பாரினார் பரவு அரதைப் பெரும்பாழியை, சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய் ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.031  
திரை தரு பவளமும், சீர்
Tune - கொல்லி (Location: திருமயேந்திரப்பள்ளி God: திருமேனியழகர் Goddess: வடிவாம்பிகையம்மை)
திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும், கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும், வரைவிலால் எயில் எய்த, மயேந்திரப்பள் அரவு அரை, அழகனை அடி இணை பணிமினே! | [1] |
வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள் நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல், நம் பரம் இது என, நாவினால் நவில்பவர் உம்பரார் எதிர்கொள, உயர் பதி அணைவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.032  
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி (Location: திருஆலவாய் (மதுரை) God: Goddess: )
வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன், பொன் இயல் திருவடி புதுமலர் அவைகொடு மன்னிய மறையவர் வழிபட, அடியவர் இன் இசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே. | [1] |
கோடு, சந்தனம், அகில், கொண்டு இழி வைகை நீா ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை, நாடு தென்புகலியுள் ஞானசம்பந்தன பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.033  
நீர் இடைத் துயின்றவன், தம்பி,
Tune - கொல்லி (Location: திருவுசாத்தானம் (கோவிலூர்) God: மந்திரபுரீசுவரர் Goddess: பெரியநாயகியம்மை)
நீர்இடைத் துயின்றவன், தம்பி,நீள் சாம்புவான், போர்உடைச் சுக்கிரீவன்,அனு மான்தொழ; கார்உடை நஞ்சுஉண்டு, காத்து;அருள் செய்தஎம் சீர்உடைச் சேடர்வாழ் திருஉசாத் தானமே. | [1] |
வரைதிரிந்து இழியும்நீர் வளவயல் புகலிமன், திரைதிரிந்து எறிகடல்- திருஉசாத் தானரை உரைதெரிந்து உணரும்சம் பந்தன்,ஒண் தமிழ்வல்லார் நரைதிரை இன்றியே நன்நெறி சேர்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.034  
வண்ண மா மலர் கொடு
Tune - கொல்லி (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட, அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம் விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர் திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே. | [1] |
திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை நண்ணினான், காழியுள் ஞானசம்பந்தன், சொல் எண்ணினார், ஈர் ஐந்து மாலையும் இயலுமாப் பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.035  
முன்னை நால் மறை அவை
Tune - கொல்லி (Location: திருத்தென்குடித்திட்டை God: பசுபதீசுவரர் Goddess: உலகநாயகியம்மை)
முன்னை நால் மறை அவை முறை முறை, குறையொடும், தன்ன தாள் தொழுது எழ நின்றவன் தன் இடம் மன்னு மா காவிரி வந்து அடி வருட, நல் செந்நெல் ஆர் வளவயல்-தென்குடித்திட்டையே. | [1] |
தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை, கானல் ஆர் கடிபொழில் சூழ்தரும் காழியுள ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ் பால் நல் ஆர் மொழி வலார்க்கு, இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.036  
சந்தம், ஆர், அகிலொடு, சாதி,
Tune - கொல்லி (Location: திருக்காளத்தி God: காளத்திநாதர் Goddess: ஞானப்பூங்கோதையாரம்மை)
சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்) மரம், உந்தும் மா முகலியின் கரையினில், உமையொடும், மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி எந்தையார் இணை அடி, என் மனத்து உள்ளவே. | [1] |
அட்ட மாசித்திகள் அணை தரு காளத்தி வட்ட வார் சடையனை, வயல் அணி காழியான்- சிட்ட நால்மறை வல ஞானசம்பந்தன்-சொல் இட்டமாப் பாடுவார்க்கு இல்லை ஆம், பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.037  
கரம் முனம் மலரால், புனல்
Tune - கொல்லி (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
கரம் முனம் மலரால், புனல் மலர் தூவியே கலந்து ஏத்துமின்- பரமன் ஊர் பலபேரினால் பொலி, பத்தர் சித்தர்கள் தாம் பயில், வரம் முன்ன(வ்) அருள் செய்ய வல்ல எம் ஐயன் நாள்தொறும் மேய சீர்ப் பிரமன் ஊர், பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன்(ன்) அருள் பேணியே! | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.038  
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!
Tune - கொல்லி (Location: திருக்கண்டியூர் God: வீரட்டேசுவரர் Goddess: மங்கைநாயகியம்மை)
வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்! அருள் வேண்டுவீர் கனைவில் ஆர் புனல் காவிரிக் கரை மேய கண்டியூர் வீரட்டன், தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள, தான் வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப் பாடி, இவ் வையம் மாப் பலி தேர்ந்ததே? | [1] |
கருத்தனை, பொழில் சூழும் கண்டியூர் வீரட்டத்து உறை கள்வனை, அருத்தனை, திறம் அடியர்பால் மிகக் கேட்டு உகந்த வினா உரை திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் ஒருத்தர் ஆகிலும், பலர்கள் ஆகிலும், உரைசெய்வார் உயர்ந்தார்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.039  
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள் பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல்! ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே. | [1] |
எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன், திரு ஆலவாய்ச் சொக்கன் என் உள் இருக்கவே, துளங்கும் முடித் தென்னன்முன், இவை தக்க சீர்ப் புகலிக்கு மன்-தமிழ் நாதன், ஞானசம்பந்தன்-வாய் ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.040  
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார்
Tune - கொல்லி (Location: சீர்காழி God: Goddess: )
கல்லால் நீழல் அல்லாத் தேவை நல்லார் பேணார்; அல்லோம், நாமே. | [1] |
அம் தண் காழிப் பந்தன் சொல்லைச் சிந்தை செய்வோர் உய்ந்து உளோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.041  
கரு ஆர் கச்சித் திரு
Tune - கொல்லி (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)
கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து ஒருவா! என்ன, மருவா, வினையே. | [1] |
கொச்சை வேந்தன் கச்சிக் கம்பம் மெச்சும் சொல்லை, நச்சும், புகழே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.042  
நிறை வெண் திங்கள் வாள்முக
Tune - கொல்லிக்கௌவாணம் (Location: திருச்சிற்றேமம் God: பொன்வைத்தநாதர் Goddess: அகிலாண்டேசுவரியம்மை)
நிறை வெண் திங்கள் வாள்முக மாதர் பாட, நீள்சடைக் குறை வெண் திங்கள் சூடி, ஓர் ஆடல் மேய கொள்கையான்- சிறைவண்டு யாழ்செய் பைம்பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான்; இறைவன்! என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே. | [1] |
கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான் நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன் செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால் வல்லராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.043  
சந்தம் ஆர் முலையாள் தன
Tune - கௌசிகம் (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார் வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார் கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள் எந்தையார், அடி என் மனத்து உள்ளவே. | [1] |
கானல் வந்து உலவும் கடல் காழியு ஈனம் இ(ல்)லி இணை அடி ஏத்திடும் ஞானசம்பந்தன் சொல்லிய நல்-தமிழ், மானம் ஆக்கும், மகிழ்ந்து உரைசெய்யவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.044  
வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று
Tune - கௌசிகம் (Location: திருக்கழிப்பாலை God: பால்வண்ணநாதர் Goddess: வேதநாயகியம்மை)
வெந்த குங்கிலியப்புகை விம்மவே கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார் அந்தமும்(ம்) அளவும்(ம்) அறியாதது ஓர் சந்தமால், அவர் மேவிய சந்தமே. | [1] |
அம் தண் காழி அருமறை ஞானசம்- பந்தன், பாய் புனல் சூழ் கழிப்பாலையைச் சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் முந்தி வான் உலகு ஆடல் முறைமையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.045  
அந்தம் ஆய், உலகு ஆதியும்
Tune - கௌசிகம் (Location: திருவாரூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)
அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான், வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன், சிந்தையே புகுந்தான்-திரு ஆரூர் எம் எந்தைதான்; எனை ஏன்று கொளும்கொலோ? | [1] |
வன்னி, கொன்றை, மதியொடு, கூவிளம், சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை, மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்ப் பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.046  
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை
Tune - கௌசிகம் (Location: திருக்கருகாவூர் God: முல்லைவனேசுவரர் Goddess: கரும்பனையாளம்மை)
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே, மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக் கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே. | [1] |
கலவமஞ்ஞை உலவும் கருகாவூ நிலவு பாடல் உடையான் தன நீள்கழல் குலவு ஞானசம்பந்தன் செந்தமிழ் சொல வலார் அவர் தொல்வினை தீருமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.047  
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம் (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)
காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல், நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்; வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரை ஓட்டி வாது செயத் திரு உள்ளமே? | [1] |
செந்து எனா முரலும் திரு ஆலவாய் மைந்தனே! என்று, வல் அமண் ஆசு அற, சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்- பந்தன் சொல் பகரும், பழி நீங்கவே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.048  
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு
Tune - கௌசிகம் (Location: திருமழபாடி God: வச்சிரத்தம்பேசுவரர் Goddess: அழகாம்பிகையம்மை)
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக் கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய மங்கையான், உறையும் மழபாடியைத் தம் கையால்-தொழுவார் தகவாளரே. | [1] |
மந்தம் உந்து பொழில் மழபாடி எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான், கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்- பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.049  
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர்
Tune - கௌசிகம் (Location: நல்லூர்ப்பெருமணம் -நமசிவாயத் திருப்பதிகம் God: Goddess: )
காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது; வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே. | [1] |
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும் சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.050  
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும்
Tune - கௌசிகம் (Location: திருத்தண்டலைநீணெறி God: நீணெறிநாதேசுவரர் Goddess: ஞானாம்பிகையம்மை)
விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே, சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம் கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் நெருங்கும் தண்டலை நீணெறி; காண்மினே! | [1] |
நீற்றர், தண்டலை நீணெறி நாதனை, தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை சாற்று ஞானசம்பந்தன்-தமிழ் வலார் மாற்று இல் செல்வர்; மறப்பர், பிறப்பையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.051  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம் (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை; பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே! | [1] |
அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால், வெப்பம் தென்னவன் மேல் உற, மேதினிக்கு ஒப்ப, ஞானசம்பந்தன் உரைபத்தும், செப்ப வல்லவர் தீது இலாச் செல்வரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.052  
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம் (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)
வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள் நின்கழல் பாடல் ஆலவாய் இலாய்! பரவ நின்ற பண்பனே! காடு அலால் அவாய் இலாய்! கபாலி! நீள்கடி(ம்) மதில் கூடல் ஆலவாயிலாய்! குலாயது என்ன கொள்கையே? | [1] |
போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான்- பாய கேள்வி ஞானசம்பந்தன்-நல்ல பண்பினால், ஆய சொல்லின் மாலைகொண்டு, ஆலவாயில் அண்ணலைத் தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர், தேவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.053  
வானைக் காவல் வெண்மதி மல்கு
Tune - கௌசிகம் (Location: திருவானைக்கா God: சம்புகேசுவரர் Goddess: அகிலாண்டநாயகியம்மை)
வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை, தேனைக் காவில் இன்மொழித் தேவி பாகம் ஆயினான், ஆனைக்காவில் அண்ணலை, அபயம் ஆக வாழ்பவர் ஏனைக் காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே. | [1] |
ஊழி ஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும், ஆழியானும், காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை, காழி ஞானசம்பந்தன் கருதிச் சொன்ன பத்து இவை வாழி ஆகக் கற்பவர் வல்வினைகள் மாயுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.054  
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம் (Location: திருஆலவாய் (மதுரை) God: Goddess: )
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்! வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக! ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! | [1] |
அற்று அன்றி அம் தண் மதுரைத் தொகை ஆக்கினானும், தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர்ப் பற்று இன்றிப் பாங்கு எதிர்வின் ஊரவும், பண்பு நோக்கில், பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.055  
விரை ஆர் கொன்றையினாய்! விடம்
Tune - கௌசிகம் (Location: திருவான்மியூர் God: மருந்தீசுவரர் Goddess: சுந்தரமாது (அ) சொக்கநாயகி)
விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே! உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்! திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே. | [1] |
கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை, சென்றார் தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல், குன்றாது ஏத்த வல்லார் கொடுவல் வினை போய் அறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.056  
இறையவன், ஈசன், எந்தை, இமையோர்
Tune - பஞ்சமம் (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது ஏத்த நின்ற கறை அணி கண்டன், வெண்தோடு அணி காதினன், காலத்து அன்று மறை மொழி வாய்மையினான், மலையாளொடு மன்னு சென்னிப் பிறை அணி செஞ்சடையான், பிரமாபுரம் பேணுமினே! | [1] |
உரை தரு நால்மறையோர் புகழ்ந்து ஏத்த, ஒண் மாதினொடும் வரை என வீற்றிருந்தான், மலிகின்ற பிரமபுரத்து அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.057  
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ
Tune - பஞ்சமம் (Location: திருவொற்றியூர் God: மாணிக்கத்தியாகர் Goddess: வடிவுடையம்மை)
விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன், வெண்மழுவாள படையவன், பாய் புலித்தோல் உடை, கோவணம், பல்கரந்தைச் சடையவன், சாமவேதன், சசி தங்கிய சங்க வெண்தோடு உடையவ(ன்), ஊனம் இ(ல்)லி உறையும்(ம்) இடம் ஒற்றியூரே. | [1] |
ஒண்பிறை மல்கு சென்னி இறைவன்(ன்) உறை ஒற்றியூரை, சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன பண் புனை பாடல்பத்தும் பரவிப் பணிந்து ஏத்த வல்லார் விண் புனை மேல் உலகம் விருப்பு எய்துவர்; வீடு எளிதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.058  
திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும்
Tune - பஞ்சமம் (Location: திருச்சாத்தமங்கை God: அயவந்தீசுவரர் Goddess: மலர்க்கணம்பிகையம்மை)
திரு மலர்க்கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் இரு மலர்க் கண்ணி தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே? பெரு மலர்ச்சோலை மேகம் உரிஞ்சும் பெருஞ் சாத்தமங்கை அரு மலர் ஆதிமூர்த்தி! அயவந்தி அமர்ந்தவனே! | [1] |
மறையினார் மல்கு காழித் தமிழ் ஞானசம்பந்தன், மன்னும் நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்திமேல் ஆய்ந்த பத்தும், முறைமையால் ஏத்த வல்லார், இமையோரிலும் முந்துவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.059  
அர விரி கோடல் நீடல்
Tune - பஞ்சமம் (Location: திருகுடமூக்கு (கும்பகோணம்) God: கும்பேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே, மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும் குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா, இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே. | [1] |
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்- நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.060  
கறை அணி மா மிடற்றான்,
Tune - பஞ்சமம் (Location: திருவக்கரை God: சந்திரசேகரேசுவரர் Goddess: வடிவாம்பிகையம்மை)
கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான், பிறை அணி கொன்றையினான், ஒருபாகமும் பெண் அமர்ந்தான், மறையவன் தன் தலையில் பலி கொள்பவன்-வக்கரையில் உறைபவன், எங்கள் பிரான்; ஒலி ஆர் கழல் உள்குதுமே. | [1] |
தண்புனலும்(ம்) அரவும் சடைமேல் உடையான், பிறை தோய் வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன்(ன்), உறை வக்கரையை, சண்பையர் தம் தலைவன்-தமிழ் ஞானசம்பந்தன்-சொன்ன பண் புனை பாடல் வல்லார் அவர் தம் வினை பற்று அறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.061  
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய
Tune - பஞ்சமம் (Location: திருவெண்டுறை God: வெண்டுறைநாதேசுவரர் Goddess: வேனெடுங்கண்ணியம்மை)
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன், பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன், போது இயலும் முடிமேல் புனலோடு அரவம் புனைந்த வேதியன், மாதிமையால் விரும்பும்(ம்) இடம் வெண்டுறையே. | [1] |
திண் அமரும் புரிசைத் திரு வெண்டுறை மேயவனை, தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர் தம் தலைவன்- எண் அமர் பல்கலையான், இசை ஞானசம்பந்தன்-சொன்ன பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.062  
கண் பொலி நெற்றியினான், திகழ்
Tune - பஞ்சமம் (Location: திருப்பனந்தாள் God: சடையப்பஈசுவரர் Goddess: பெரியநாயகியம்மை)
கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான், பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான், விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர் தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே. | [1] |
தண்வயல் சூழ் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரத்துக் கண் அயலே பிறையான் அவன் தன்னை, முன் காழியர் கோன்- நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன்-நல்ல பண் இயல் பாடல் வல்லார் அவர்தம் வினை பற்று அறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.063  
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!
Tune - பஞ்சமம் (Location: திருச்செங்காட்டங்குடி God: கணபதீசுவரர் Goddess: திருக்குழல்மாதம்மை)
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊர, சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானே செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய, வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே. | [1] |
செந்தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய, வெந்த நீறு அணி மார்பன், சிறுத்தொண்டன் அவன் வேண்ட, அம் தண் பூங் கலிக் காழி அடிகளையே அடி பரவும் சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.064  
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை
Tune - பஞ்சமம் (Location: திருப்பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை) God: பிரியாவீசுவரர் Goddess: மின்னனையாளம்மை)
அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார் கண் ஆவார், உலகுக்குக் கருத்து ஆனார், புரம் எரித்த பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே. | [1] |
பைம் பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி, அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் நம்பன் தன் கழல் பரவி, நவில்கின்ற மறை ஞான- சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு, அருவினை நோய் சாராவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.065  
வார் அணவு முலை மங்கை
Tune - பஞ்சமம் (Location: திருக்கச்சிநெறிக்காரைக்காடு God: காரைத்திருநாதஈசுவரர் Goddess: காரார்குழலியம்மை)
வார் அணவு முலை மங்கை பங்கினராய், அம் கையினில் போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி, வெண்பொடி அணிவர் கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலிக் கச்சி, நீர் அணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்காட்டாரே. | [1] |
கண் ஆரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும் பெண் ஆரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி, தண் ஆரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன் பண் ஆரும் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.066  
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி
Tune - பஞ்சமம் (Location: திருவேட்டக்குடி God: திருமேனியழகீசுவரர் Goddess: சாந்தநாயகியம்மை)
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரி அரவம் கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள் தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச் சுடர்ப் பவளம் தெண்திரை(க்)கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக் குடியாரே. | [1] |
தெண்திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை, தண்டலை சூழ் கலிக் காழித் தமிழ் ஞானசம்பந்தன் ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார், போய், உண்டு உடுப்பு இல் வானவரோடு, உயர்வானத்து இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.067  
சுரர் உலகு, நரர்கள் பயில்
Tune - சாதாரி (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம், முரண் அழிய, அரண மதில் முப்- புரம் எரிய, விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் வரம் அருள வரல் முறையின் நிரல் நிறை கொள்வரு சுருதிசிர உரையினால், பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ, வளர் பிரமபுரமே. | [1] |
நச்சு அரவு கச்சு என அசைச்சு, மதி உச்சியின் மிலைச்சு, ஒரு கையால் மெய்ச் சிரம் அணைச்சு, உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் மச்சம் மதம் நச்சி மதமச் சிறுமியைச் செய் தவ அச்ச விரதக் கொச்சை முரவு அச்சர் பணிய, சுரர்கள் நச்சி மிடை கொச்சைநகரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.068  
வாள வரி கோள புலி
Tune - சாதாரி (Location: திருக்கயிலாயம் God: கயிலாயநாதர் Goddess: பார்வதியம்மை)
வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் ஆளுமவர் வேள் அநகர், போள் அயில கோள களிறு ஆளி, வர இல் தோள் அமரர் தாளம், மதர் கூளி, எழ மீளி, மிளிர் தூளி, வளர் பொன் காளமுகில் மூளும் இருள் கீள, விரி தாள கயிலாயமலையே. | [1] |
அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி, அகிலும் கந்தமலர் கொந்தினொடு மந்திபல சிந்து கயிலாயமலைமேல், எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலிப் பந்தன் உரை சிந்தை செய, வந்த வினை நைந்து, பரலோகம் எளிதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.069  
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது
Tune - சாதாரி (Location: திருக்காளத்தி God: காளத்திநாதர் Goddess: ஞானப்பூங்கோதையாரம்மை)
வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம் தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை தன்னை வினவில் ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர் கவணினால், கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்திமலையே. | [1] |
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்திமலையை, மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன்- நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன்-உரை நல்ல தமிழின் பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்; பரலோகம் எளிதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.070  
ஏன எயிறு, ஆடு அரவொடு,
Tune - சாதாரி (Location: திருமயிலாடுதுறை God: மாயூரநாதர் Goddess: அஞ்சநாயகியம்மை)
ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை பூண்டு, இளைஞராய், கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி, அழகு ஆர் வானம் உறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே. | [1] |
நிணம் தரு மயானம், நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய்க்- கணம் தொழு கபாலி கழல் ஏத்தி, மிக வாய்த்தது ஒரு காதன்மையினால், மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன், மயிலாடுதுறையைப் புணர்ந்த தமிழ்பத்தும் இசையால் உரைசெய்வார், பெறுவர், பொன்னுலகமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.071  
கோழை மிடறு ஆக, கவி
Tune - சாதாரி (Location: திருவைகாவூர் God: வில்லவனேசர் Goddess: வளைக்கைவல்லியம்மை)
கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக, இசை கூடும் வகையால், ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் தாழை இளநீர் முதிய காய் கமுகின் வீழ, நிரை தாறு சிதறி, வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி, வயல் சேறு செயும் வைகாவிலே. | [1] |
முற்றும் நமை ஆள் உடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை, செற்ற மலின் ஆர் சிரபுரத் தலைவன்-ஞானசம்பந்தன் - உரைசெய் உற்ற தமிழ் மாலை ஈர்-ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் எனப்- பெற்று, அமரலோகம் மிக வாழ்வர்; பிரியார், அவர் பெரும் புகழொடே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.072  
விங்கு விளை கழனி, மிகு
Tune - சாதாரி (Location: திருமாகறல் God: அடைக்கலங்காத்தநாதர் Goddess: புவனநாயகியம்மை)
விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம், மங்குலொடு நீள்கொடிகள் மாடம் மலி, நீடு பொழில், மாகறல் உளான்- கொங்கு விரிகொன்றையொடு, கங்கை, வளர் திங்கள், அணி செஞ்சடையினான்; செங்கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும், உடனே. | [1] |
கடை கொள் நெடுமாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்கோன்- அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன்-உரையால், மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும், உடனே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.073  
பாடல் மறை, சூடல் மதி,
Tune - சாதாரி (Location: திருப்பட்டீச்சரம் God: பட்டீச்சரநாதர் Goddess: பல்வளைநாயகியம்மை)
பாடல் மறை, சூடல் மதி, பல்வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் கூட எரியூட்டி, எழில் காட்டி, நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய, கடி கட்டு அரவினார் வேடம் நிலை கொண்டவரை வீடுநெறி காட்டி, வினை வீடுமவரே. | [1] |
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன்சடையனை, அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.074  
காடு பயில் வீடு, முடை
Tune - சாதாரி (Location: திருத்தேவூர் God: தேவகுருநாதர் Goddess: தேன்மொழியம்மை)
காடு பயில் வீடு, முடை ஓடு கலன், மூடும் உடை ஆடை புலிதோல், தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான்- நாடகம் அது ஆட ம(ஞ்)ஞை, பாட அரி, கோடல் கைம் மறிப்ப, நலம் ஆர் சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே. | [1] |
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் செங்கயல்கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன்-அமர் தேவூர் அதன்மேல், பைங்கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன், உரைசெய் சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள், சங்கை இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.075  
எம் தமது சிந்தை பிரியாத
Tune - சாதாரி (Location: திருச்சண்பைநகர் (சீர்காழி) God: Goddess: )
எம் தமது சிந்தை பிரியாத பெருமான்! என இறைஞ்சி, இமையோா வந்து துதிசெய்ய, வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால், அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன், சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு, மேவு பதி சண்பைநகரே. | [1] |
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் சாரின் முரல் தெண்கடல் விசும்பு உற முழங்கு ஒலி கொள் சண்பைநகர்மேல், பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன், உரைசெய் சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர், சேர்வர், சிவலோக நெறியே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.076  
கல் பொலி சுரத்தின் எரி
Tune - சாதாரி (Location: திருமறைக்காடு (வேதாரண்யம்) God: வேதாரணியேசுவரர் Goddess: யாழைப்பழித்தமொழியம்மை)
கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை மாநடம் அது ஆடி, மடவார் இல் பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவிமேல் மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எனத் திரை கொழித்த மணியை வில் பொலி நுதல், கொடி இடை, கனிகைமார் கவரும் வேதவனமே. | [1] |
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழிபதி மன்னு கவுணி, வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன் அருளினால், சந்தம் இவை தண் தமிழின் இன் இசை எனப் பரவு பாடல் உலகில், பந்தன் உரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள், உயர் வான் உலகமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.077  
பொன் இயல் பொருப்பு அரையன்
Tune - சாதாரி (Location: திருமாணிகுழி God: மாணிக்கமேனியீசுவரர் Goddess: மாணிக்கவல்லியம்மை)
பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒரு பங்கர், புனல் தங்கு சடைமேல் வன்னியொடு மத்தமலர் வைத்த விறல் வித்தகர், மகிழ்ந்து உறைவு இடம் கன்னி இளவாளை குதிகொள்ள, இள வள்ளை படர் அள்ளல் வயல்வாய் மன்னி இள மேதிகள் படிந்து, மனை சேர் உதவி மாணிகுழியே. | [1] |
உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழிமேல், அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்- சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் முந்தி இசை செய்து மொழிவார்கள் உடையார்கள், நெடு வான நிலனே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.078  
நீறு, வரி ஆடு அரவொடு,
Tune - சாதாரி (Location: திருவேதிகுடி God: வேதபுரீசுவரர் Goddess: மங்கையர்க்கரசியம்மை)
நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்; இடபம், ஏறுவர்; யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர்; இருந்த இடம் ஆம் தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற, இணைவாளை மடுவில் வேறு பிரியாது விளையாட, வளம் ஆரும் வயல் வேதிகுடியே. | [1] |
கந்தம் மலி தண்பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம்- பந்தன் மலி செந்தமிழின் மாலைகொடு, வேதிகுடி ஆதி கழலே சிந்தை செய வல்லவர்கள், நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி, இமையோர் அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம்; ஆணை நமதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.079  
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல்
Tune - சாதாரி (Location: திருகோகர்ணம் (கோகர்ணா) God: மாபலநாதர் Goddess: கோகரணநாயகியம்மை)
என்றும் அரியான், அயலவர்க்கு; இயல் இசைப்பொருள்கள் ஆகி எனது உள் நன்றும் ஒளியான்; ஒளி சிறந்த பொன் முடிக் கடவுள்; நண்ணும் இடம் ஆம் ஒன்றிய மனத்து அடியர் கூடி, இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் குன்றுகள் நெருங்கி, விரி தண்டலை மிடைந்து, வளர் கோகரணமே. | [1] |
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே ஈடம் இனிது ஆக உறைவான் அடிகள் பேணி, அணி காழி நகரான்- நாடிய தமிழ்க்கிளவி இன் இசை செய் ஞானசம்பந்தன்-மொழிகள் பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர்; பரலோகம் எளிதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.080  
சீர் மருவு தேசினொடு தேசம்
Tune - சாதாரி (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய, தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம் கொள் பதிதான்- பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு வீழிநகரே. | [1] |
மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன், வீழிநகர் சேர் வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார் சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி, அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோகமொடு யோகு அவரதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.081  
சங்கு அமரும் முன்கை மட
Tune - சாதாரி (Location: சீர்காழி God: தோணியப்பர் Goddess: திருநிலைநாயகியம்மை)
சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி, அங்கம் உடல்மேல் உற அணிந்து, பிணி தீர அருள் செய்யும் எங்கள் பெருமான் இடம் எனத் தகும் முனைக் கடலின் முத்தம், துங்க மணி, இப்பிகள், கரைக்கு வரு தோணிபுரம் ஆமே. | [1] |
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல்மாலை, தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள், தடுமாற்றம் வஞ்சம் இலர்; நெஞ்சு இருளும் நீங்கி, அருள் பெற்று வளர்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.082  
கொம்பு இரிய வண்டு உலவு
Tune - சாதாரி (Location: திருஅவளிவணல்லூர் God: சாட்சிநாயகர் Goddess: சவுந்தரநாயகியம்மை)
கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி, தம் பரிசினோடு சுடுநீறு தடவந்து, இடபம் ஏறி, கம்பு அரிய செம்பொன் நெடுமாட மதில், கல்வரை வில் ஆக, அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே. | [1] |
ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளி வணலூர் மேல், போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன்- ஞான மொழிமாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன்- தேன மொழிமாலை புகழ்வார், துயர்கள் தீயது இலர், தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.083  
வண்டு இரிய விண்ட மலர்
Tune - சாதாரி (Location: திருநல்லூர் God: பெரியாண்டேசுவரர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி, பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே நண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம் தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே. | [1] |
திரைகள் இருகரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர்மேல் பரசு தரு பாணியை, நலம் திகழ் செய் தோணிபுர நாதன்- உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன்-இசை மாலை மொழிவார், போய், விரை செய் மலர் தூவ, விதி பேணு கதிபேறு பெறுவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.084  
பெண் இயல் உருவினர், பெருகிய
Tune - சாதாரி (Location: திருப்புறவம் God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக் கண்ணியர், கடு நடை விடையினர், கழல் தொழும் அடியவர் நண்ணிய பிணி கெட அருள்புரிபவர், நணுகு உயர் பதி புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே. | [1] |
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை, வேதியர் அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன்- ஓதிய ஒருபதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் நீதியர் அவர், இரு நிலன் இடை நிகழ்தரு பிறவியே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.085  
மட்டு ஒளி விரிதரு மலர்
Tune - சாதாரி (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல் பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா, கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசை விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே. | [1] |
உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய் இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை, மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண்தமிழ் சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.086  
முறி உறு நிறம் மல்கு
Tune - சாதாரி (Location: திருச்சேறை (உடையார்கோவில்) God: சென்னெறியப்பர் Goddess: ஞானவல்லியம்மை)
முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ, முன், வெறி உறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்; நறி உறும் இதழியின் மலரொடு, நதி, மதி, நகுதலை, செறி உறு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே. | [1] |
கற்ற நல்மறை பயில் அடியவர் அடி தொழு கவின் உறு சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறைமேல், குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன சொல்,-தகவு உற மொழிபவர் அழிவு இலர்; துயர் தீருமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.087  
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி (Location: திருஆலவாய் (மதுரை) God: தெர்ப்பாரணியர் Goddess: போகமார்த்தபூண்முலையம்மை)
தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின், நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர் தம் நாமமே, மிளிர் இள வளர் எரி இடில், இவை பழுது இலை; மெய்ம்மையே! | [1] |
சிற்றிடை அரிவை தன் வனமுலை இணையொடு செறிதரும் நல்-திறம் உறு, கழுமல நகர் ஞானசம்பந்தன கொற்றவன் எதிர் இடை எரியினில் இட, இவை கூறிய சொல்-தெரி ஒருபதும் அறிபவர் துயர் இலர்; தூயரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.088  
மத்தகம் அணி பெற மலர்வது
Tune - சாதாரி (Location: திருவிளமர் God: பதஞ்சலிமனோகரேசுவரர் Goddess: யாழினுமென்மொழியம்மை)
மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல், கரம் ஒத்து, அகம் நக, மணி மிளிர்வது ஒர் அரவினர்; ஒளி கிளா அத் தகவு அடி தொழ, அருள் பெறு கணனொடும் உமையவள் வித்தகர்; உறைவது விரி பொழில் வள நகர் விளமரே. | [1] |
வெந்த வெண்பொடி அணி அடிகளை, விளமருள் விகிர்தரை, சிந்தையுள் இடைபெற உரை செய்த தமிழ் இவை செழுவிய அந்தணர் புகலியுள் அழகு அமர் அருமறை ஞானசம்- பந்தன மொழி இவை உரை செயுமவர் வினை பறையுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.089  
திருந்து மா களிற்று இள
Tune - சாதாரி (Location: திருக்கொச்சைவயம் (சீர்காழி) God: Goddess: )
திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணிச் சந்தம் உந்தி, குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு, நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவிப் பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ், நெஞ்சமே! புகல் அது ஆமே. | [1] |
காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர், கடி கொள் கொச்சை ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை, ஆதரித்தே ஏய்ந்த தொல்புகழ் மிகும் எழில்மறை ஞானசம்பந்தன் சொன்ன வாய்ந்த இம் மாலைகள் வல்லவர் நல்லர், வான் உலகின் மேலே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.090  
ஓங்கி மேல் உழிதரும் ஒலி
Tune - சாதாரி (Location: திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் God: Goddess: )
ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடைமேல் தாங்கினார், இடு பலி தலை கலனாக் கொண்ட தம் அடிகள், பாங்கினால் உமையொடும் பகல் இடம் புகல் இடம், பைம்பொழில் சூழ் வீங்கு நீர்த் துருத்தியார்; இரவு இடத்து உறைவர், வேள்விக்குடியே. | [1] |
விண் உலாம் விரி பொழில் விரை மணல்-துருத்தி, வேள்விக்குடியும், ஒண் உலாம் ஒலிகழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை நண் உலாம் புகலியுள் அருமறை ஞானசம்பந்தன் சொன்ன பண் உலாம் அருந்தமிழ் பாடுவார் ஆடுவார்; பழி இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.091  
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப்
Tune - சாதாரி (Location: திருவடகுரங்காடுதுறை God: குலைவணங்குநாதர் Goddess: சடைமுடியம்மை)
கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே, கொகுடி, முல்லை, வேங்கையே, ஞாழலே, விம்மு பாதிரிகளே, விரவி எங்கும் ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை, வீங்கு நீர்ச் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே. | [1] |
தாழ் இளங் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை, போழ் இளமதி பொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனை, காழியான்-அருமறை ஞானசம்பந்தன கருது பாடல் கோழையா அழைப்பினும், கூடுவார், நீடுவான் உலகின் ஊடே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.092  
மருந்து அவை; மந்திரம், மறுமை
Tune - சாதாரி (Location: திருநெல்வேலி God: Goddess: )
மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை; மற்றும் எல்லாம்; அருந்துயர் கெடும்; அவர் நாமமே சிந்தை செய், நன் நெஞ்சமே! பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதர, துன்று பைம்பூஞ்- செருந்தி செம்பொன்மலர் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே. | [1] |
பெருந் தண் மா மலர்மிசை அயன் அவன் அனையவர், பேணு கல்வித் திருந்து மா மறையவர், திரு நெல்வேலி உறை செல்வர் தம்மை, பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன அருந்தமிழ் மாலைகள் பாடி ஆட, கெடும், அருவினையே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.093  
படியுள் ஆர் விடையினர், பாய்
Tune - சாதாரி (Location: திருஅம்பர்மாகாளம் God: காளகண்டேசுவரர் Goddess: பட்சநாயகியம்மை)
படியுள் ஆர் விடையினர், பாய் புலித்தோலினர், பாவநாசர் பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர், பூணநூலர், கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை மங்கையோடும் அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே. | [1] |
செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வருபுனல் அரிசில் சூழ்ந்த அம்பர் மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை, கம்பின் ஆர் நெடுமதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன நம்பி, நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம், வினை; நலம் பெறுவர், தாமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.094  
விண்ணவர் தொழுது எழு வெங்குரு
Tune - சாதாரி (Location: திருவெங்குரு (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய சுண்ண வெண்பொடி அணிவீரே; சுண்ண வெண்பொடி அணிவீர்! உம தொழு கழல் எண்ண வல்லார் இடர் இலரே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.095  
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர்
Tune - சாதாரி (Location: திருஇன்னம்பர் God: எழுத்தறிந்தவீசுவரர் Goddess: கொந்தார்பூங்குழலம்மை)
எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய வண்டு இசைக்கும் சடையீரே; வண்டு இசைக்கும் சடையீர்! உமை வாழ்த்துவார் தொண்டு இசைக்கும் தொழிலாரே. | [1] |
ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை, நாடு அமர் ஞானசம்பந்தன் நாடு அமர் ஞானசம்பந்தன நல்-தமிழ், பாட வல்லார் பழி இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.096  
நல் வெணெய் விழுது பெய்து
Tune - சாதாரி (Location: திருநெல்வெண்ணெய் God: வெண்ணையப்பர் Goddess: நீலமலர்க்கண்ணம்மை)
நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர், நாள்தொறும், நெல்வெணெய் மேவிய நீரே; நெல்வெணெய் மேவிய நீர்! உமை நாள்தொறும் சொல் வணம் இடுவது சொல்லே. | [1] |
நிலம் மல்கு தொல்புகழ் நெல்வெணெய் ஈசனை, நலம் மல்கு ஞானசம்பந்தன் நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ், சொல மல்குவார் துயர் இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.097  
திடம் மலி மதில் அணி
Tune - சாதாரி (Location: திருச்சிறுகுடி God: மங்களேசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)
திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய படம் மலி அரவு உடையீரே; படம் மலி அரவு உடையீர்! உமைப் பணிபவர் அடைவதும், அமருலகு அதுவே. | [1] |
தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய மான் அமர் கரம் உடையீரே; மான் அமர் கரம் உடையீர்! உமை வாழ்த்திய ஞானசம்பந்தன தமிழே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.098  
வெண்மதி தவழ் மதில் மிழலை
Tune - சாதாரி (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர், சடை ஒண்மதி அணி உடையீரே; ஒண்மதி அணி உடையீர்! உமை உணர்பவர் கண் மதி மிகுவது கடனே. | [1] |
விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை, சண்பையுள் ஞானசம்பந்தன் சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை, ஒண் பொருள் உணர்வதும் உணர்வே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.099  
முரசு அதிர்ந்து எழுதரு முது
Tune - சாதாரி (Location: திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) God: பழமலைநாதர் Goddess: பெரியநாயகியம்மை)
முரசு அதிர்ந்து எழுதரு முது குன்றம் மேவிய பரசு அமர் படை உடையீரே; பரசு அமர் படை உடையீர்! உமைப் பரவுவார் அரசர்கள் உலகில் ஆவாரே. | [1] |
மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை நாடிய ஞானசம்பந்தன் நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ் பாடிய அவர் பழி இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.100  
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,
Tune - சாதாரி (Location: சீர்காழி God: தோணியப்பர் Goddess: திருநிலைநாயகியம்மை)
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல் காரிகை மாட்டு அருள அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப(அ)ரிதால்; பெரும் பகலே வந்து, என் பெண்மை கொண்டு, பேர்ந்தவர் சேர்ந்த இடம் சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத் தோணிபுரம் தானே. | [1] |
தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை, மாமறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன்- வாய்மையினால் நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன்-சொன்ன பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.101  
திரிதரு மா மணி நாகம்
Tune - சாதாரி (Location: திருஇராமேச்சுரம் God: இராமநாதேசுவரர் Goddess: பர்வதவர்த்தனி)
திரிதரு மா மணி நாகம் ஆடத் திளைத்து, ஒரு தீ-அழல்வாய், நரி கதிக்க, எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய, விரி கதிர் வெண்பிறை மல்கு சென்னி, விமலர்; செயும் செயலே! | [1] |
தேவியை வவ்விய தென் இலங்கை அரையன் திறல் வாட்டி ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை, நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் பா இயல் மாலை வல்லார் அவர் தம் வினை ஆயின பற்று அறுமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.102  
காம்பினை வென்ற மென்தோளி பாகம்
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருநாரையூர் God: சௌந்தரேசர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம் தாங்கு தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய, பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்) உரி-தோல்மேல் பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே. | [1] |
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல், பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை போகி, மண் மதியாது போய், வான் புகுவர், வானோர் எதிர்கொளவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.103  
கொடி உடை மும்மதில் ஊடு
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருவலம்புரம் God: வலம்புரநாதர் Goddess: வடுவகிர்க்கணம்மை)
கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கி இடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத் துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும் வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே. | [1] |
நல் இயல் நால்மறையோர் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், வல்லியந் தோல் உடை ஆடையினான் வலம்புர நன்நகரைச் சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர், தொல்வினை போய், செல்வன சேவடி சென்று அணுகி, சிவலோகம் சேர்வாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.104  
விண் கொண்ட தூ மதி
Tune - பழம்பஞ்சுரம் (Location: பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்) God: பருதியப்பர் Goddess: மங்களநாயகியம்மை)
விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன்சடை தாழ, பெண் கொண்ட மார்பில் வெண்நீறு பூசி, பேண் ஆர் பலி தேர்ந்து, கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம்போலும் பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதி(ந்) நியமமே. | [1] |
பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதி(ந்) நியமத்துத் தையல் ஒர்பாகம் அமர்ந்தவனைத் தமிழ் ஞானசம்பந்தன் பொய் இலி மாலை புனைந்த பத்தும் பரவிப் புகழ்ந்து ஏத்த, ஐயுறவு இல்லை, பிறப்பு அறுத்தல்; அவலம் அடையாவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.105  
மடல் வரை இல் மது
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருக்கலிக்காமூர் God: சுந்தரேசுவரர் Goddess: அழகுவனமுலையம்மை)
மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து, அழகு ஆரும், கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர், உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த, இடர் தொடரா; வினை ஆன சிந்தும்; இறைவன்(ன்) அருள் ஆமே. | [1] |
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு, அன்று அமரர்க்கு அமுது உண்ண ஊழிதொறும்(ம்) உளரா அளித்தான், உலகத்து உயர்கின்ற காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால், கலிக்காமூர் வாழி எம்மானை வணங்கி ஏத்த, மருவா, பிணிதானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.106  
பள்ளம் அது ஆய படர்
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருவலஞ்சுழி God: காப்பகத்தீசுவரர் Goddess: மங்களநாயகியம்மை)
பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரைக் கங்கை வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன், விடை ஏறும் வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி, உள்ளம் உருக, உணருமின்கள்! உறு நோய் அடையாவே. | [1] |
வாழி எம்மான், எனக்கு எந்தை, மேய வலஞ்சுழி மா நகர்மேல், காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை, ஆழி இவ் வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும்; உருவும் உயர்வு ஆமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.107  
கடல் இடை வெங்கடு நஞ்சம்
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருநாரையூர் God: சௌந்தரேசர் Goddess: திரிபுரசுந்தரியம்மை)
கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி, உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு ஒருபாகன், அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார் மேல் நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர் தானே. | [1] |
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன், சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல், பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆக ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.108  
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே? பாதி மாது உடன் ஆய பரமனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்- ஆலவாயில் உறையும் எம் ஆதியே! | [1] |
கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட, மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப் பாடல் வல்லவர் பாக்கியவாளரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.109  
மண் அது உண்ட(அ)ரி மலரோன்
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருவானைக்கா God: Goddess: )
மண் அது உண்ட(அ)ரி மலரோன் காணா வெண்நாவல் விரும்பு மயேந்திரரும், கண்ணது ஓங்கிய கயிலையாரும், அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே. | [1] |
ஏனம்மால் அயன் அவர் காண்பு அரியார் கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும், ஆன ஆரூர், ஆதி ஆனைக்காவை ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.110  
வரம் அதே கொளா, உரம்
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
வரம் அதே கொளா, உரம் அதே செயும் புரம் எரித்தவன்-பிரமநல்புரத்து அரன்-நன்நாமமே பரவுவார்கள் சீர் விரவும், நீள் புவியே. | [1] |
விச்சை ஒன்று இலாச் சமணர் சாக்கியப் பிச்சர் தங்களைக் கரிசு அறுத்தவன் கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறுமினே! | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.111  
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன், மிழலை மா நகர் ஆல நீழலில் மேவினான்-அடிக்கு அன்பர் துன்பு இலரே. | [1] |
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச் சண்பை ஞானசம்பந்தன் வாய் நவில் பந்தம் ஆர் தமிழ்பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.112  
பரசு பாணியர், பாடல் வீணையர்,
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருப்பல்லவனீச்சரம் God: Goddess: )
பரசு பாணியர், பாடல் வீணையர், பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து அரசு பேணி நின்றார், இவர் தன்மை அறிவார் ஆர்? | [1] |
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை ஞானசம்பந்தன் நல்-தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.113  
உற்று உமை சேர்வது மெய்யினையே;
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
உற்று உமை சேர்வது மெய்யினையே; உணர்வதும் நின் அருள் மெய்யினையே; கற்றவர் காய்வது காமனையே; கனல் விழி காய்வது காமனையே; அற்றம் மறைப்பதும் உன் பணியே; அமரர்கள் செய்வதும் உன் பணியே; பெற்று முகந்தது கந்தனையே; பிரமபுரத்தை உகந்தனையே. | [1] |
கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி புண் தரி கத்தினனே, மண் நிகழும் பரிசு ஏனம் அதே, வானகம் ஏய் வகை சேனம் அதே, நண்ணி அடிமுடி எய்தலரே; நளிர் மலி சோலையில் எய்து அலரே பண் இயல் கொச்சை பசுபதியே, பசு மிக ஊர்வர், பசுபதியே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.114  
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;
Tune - பழம்பஞ்சுரம் (Location: கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்) God: ஏகாம்பரநாதர் Goddess: காமாட்சியம்மை)
பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே; பாவை தன் உருமேல் ஒரு பாகனே; தூய வானவர் வேதத் துவனியே; சோதி மால் எரி வேதத்து வ(ன்)னியே; ஆயும் நன்பொருள் நுண்பொருள் ஆதியே; ஆலநீழல் அரும்பொருள் ஆதியே; காய, வில் மதன் பட்டது கம்பமே; கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே. | [1] |
கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே; புந்தி செய்வது விரும்பிப் புகலியே பூசுரன் தன் விரும்பிப் புகலியே அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே, அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே, பந்தன் இன் இயல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின, பத்துமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.115  
ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)
ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன பாடல் உகந்தது இருக்கையே; பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே; பாதம் ஓதலர் சேர் புர பங்கனே; கோலம் நீறு அணி மே தகு பூதனே; கோது இலார் மனம் மேவிய பூதனே; ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே. | [1] |
ஈன ஞானிகள் தம்மொடு விரகனே! ஏறு பல்பொருள் முத்தமிழ் விரகனே, ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே! ஆன வானவர் வாயின் உளத்தனே! அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே! நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு, இவை நற்று அமிழ் பத்துமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.116  
துன்று கொன்றை நம் சடையதே;
Tune - பழம்பஞ்சுரம் (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
துன்று கொன்றை நம் சடையதே; தூய கண்டம் நஞ்சு அடையதே; கன்றின்மான் இடக் கையதே; கல்லின்மான் இடக்கை அதே; என்றும் ஏறுவது இடவமே; என் இடைப் பலி இட வ(ம்)மே! நின்றதும் மிழலையுள்ளுமே; நீர் எனைச் சிறிதும் உள்ளுமே! | [1] |
மேய செஞ்சடையின் அப்பனே! மிழலை மேவிய என் அப்பனே! ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே! காய வர்க்க(அ) சம்பந்தனே! காழி ஞானசம்பந்தனே வாய் உரைத்த தமிழ்பத்துமே வல்லவர்க்கும் இவை பத்துமே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.117  
யாமாமா நீ யாமாமா யாழீகாமா
Tune - கௌசிகம் (Location: திருப்பிரமபுரம் (சீர்காழி) God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மாயாழீ! காமா! காண் நாகா! காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா! | [1] |
நேர் அகழ் ஆம் இதய ஆசு அழி! தாய் ஏல் நன் நீயே; நன் நீள்! ஆய் உழி கா! காழி உளான் இன் நையே நினையே, தாழ் இசையா, தமிழ் ஆகரனே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.118  
மடல் மலி கொன்றை, துன்று
Tune - புறநீர்மை (Location: சீர்காழி God: பிரமபுரீசர் Goddess: திருநிலைநாயகி)
மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும், வன்னியும், மத்தமும், சடைமேல் படல் ஒலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார்தம் இடம் பகரில், விடல் ஒலி பரந்த வெண்திரை முத்தம் இப்பிகள் கொணர்ந்து, வெள் அருவிக் கடல் ஒலி ஓதம் மோத, வந்து அலைக்கும் கழுமலநகர் எனல் ஆமே. | [1] |
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார்மேல் ஞானசம்பந்தன் நல்-தமிழ்மாலை நன்மையால் உரை செய்து நவில்வார் ஊன சம்பந்தத்து உறு பிணி நீங்கி, உள்ளமும் ஒருவழிக் கொண்டு வான் இடை வாழ்வர்; மண்மிசைப் பிறவார்; மற்று இதற்கு ஆணையும் நமதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.119  
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
Tune - புறநீர்மை (Location: திருவீழிமிழலை God: வீழியழகர் Goddess: சுந்தரகுசாம்பிகை)
புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு சாந்தம் பொடி-நீறு; கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம் செய் கூத்து உடையோன்- அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க, முள்-தாழைகள் ஆனை வெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான் என, வினை கெடுமே. | [1] |
வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழிமிழலையுள், விண் இழிவிமானத்து ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானை, தோய்ந்த நீர்த் தோணிபுரத்து உறை மறையோன்-தூ மொழி ஞானசம்பந்தன்- வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.120  
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை (Location: திருஆலவாய் (மதுரை) God: சொக்கநாதசுவாமி Goddess: மீனாட்சியம்மை)
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை, வரி வளைக் கைம் மடமானி, பங்கயச்செல்வி, பாண்டிமாதேவி பணி செய்து நாள்தொறும் பரவ, பொங்கு அழல் உருவன், பூதநாயகன், நால்வேதமும் பொருள்களும் அருளி அம் கயல்கண்ணிதன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே. | [1] |
பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும் இவர் பணியும் அந் நலம் பெறு சீர் ஆலவாய் ஈசன் திருவடி ஆங்கு அவை போற்றி, கன்னல் அம் பெரிய காழியுள் ஞானசம்பந்தன் செந்தமிழ் இவை கொண்டு இன்நலம் பாட வல்லவர், இமையோர் ஏத்த, வீற்றிருப்பவர், இனிதே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.121  
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;
Tune - புறநீர்மை (Location: திருப்பந்தணைநல்லூர் God: Goddess: )
இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை; இவை சொல்லி லகு எழுந்து ஏத்த, கடறினார் ஆவர்; காற்று உளார் ஆவர்; காதலித்து உறைதரு கோயில் கொடிறனார்; யாதும் குறைவு இலார்; தாம் போய்க் கோவணம் கொண்டு கூத்து ஆடும் படிறனார் போலும்! பந்தணைநல்லூர் நின்ற எம் பசுபதியாரே. | [1] |
கல் இசை பூணக் கலை ஒலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில் நல் இசையாளன், புல் இசை கேளா நல்-தமிழ் ஞானசம்பந்தன், பல் இசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர் சொல் இசைப்பாடல் பத்தும் வல்லவர் மேல், தொல்வினை சூழகிலாவே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.122  
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம்
Tune - புறநீர்மை (Location: திருஓமாம்புலியூர் God: Goddess: )
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள் வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும் உறைவு இடம் வினவில் தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு இசை பாடும் ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே. | [1] |
விளைதரு வயலுள் வெயில் செறி பவளம் மேதிகள் மேய்புலத்து இடறி ஒளிதர மல்கும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அரனை, களி தரு நிவப்பின் காண்தகு செல்வக் காழியுள் ஞானசம்பந்தன், அளிதரு பாடல்பத்தும் வல்லார்கள், அமரலோகத்து இருப்பாரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.123  
நிரை கழல் அரவம் சிலம்பு
Tune - புறநீர்மை (Location: திருக்கோணமலை God: கோணீசர் Goddess: மாதுமையம்மை)
நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி வரை கெழு மகள் ஓர்பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி விடையர் கரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங் கன மணி வரன்றி, குரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே. | [1] |
குற்றம் இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை, கற்று உணர் கேள்விக் காழியர்பெருமான்-கருத்து உடை ஞானசம்பந்தன்- உற்ற செந்தமிழ் ஆர் மாலை ஈர்-ஐந்தும் உரைப்பவர், கேட்பவர், உயர்ந்தோர் சுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர்,வான் இடைப் பொலிந்தே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.124  
சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல்
Tune - அந்தாளிக்குறிஞ்சி (Location: திருக்குருகாவூர் வெள்ளடை God: வெள்ளிடையப்பர் Goddess: காவியங்கண்ணியம்மை)
சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் புனைந்து எண்ண(அ)ரும் பல்கணம் ஏத்த, நின்று ஆடுவர் விண் அமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே. | [1] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.125  
கல் ஊர்ப் பெரு மணம்
Tune - அந்தாளிக்குறிஞ்சி (Location: திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்) God: சிவலோகத்தியாகேசர் Goddess: நங்கையுமைநாயகியம்மை)
கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம் பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில? சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர் நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே! | [1] |
நறும்பொழில் காழியுள் ஞானசம்பந்தன், பெறும் பத நல்லூர்ப்பெருமணத்தானை, உறும் பொருளால் சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு அறும், பழி பாவம்; அவலம் இலரே. | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.901  
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத
Tune - (Location: திருவிடைவாய் God: Goddess: )
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும் பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர் பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கி வெறியார் மலரில் துயிலும் விடைவாயே. | [1] |
ஆறும் மதியும்பொதி வேணியன் ஊராம் மாறில் பெருஞ்செல்வம் மலிவிடை வாயை நாறும் பொழிற்காழியர் ஞானசம் பந்தன் கூறுந் தமிழ்வல்லவர் குற்றமற் றோரே. < | [11] |
Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கடைக்காப்பு
3 - Thirumurai
Pathigam 3.902  
தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி
Tune - (Location: திருக்கிளியன்னவூர் God: Goddess: )
தார்சி றக்கும் சடைக்கணி வள்ளலின் சீர்சி றக்கும் துணைப்பதம் உன்னுவோர் பேர்சி றக்கும் பெருமொழி உய்வகை ஏர்சி றக்கும் கிளியன்ன வூரனே. | [1] |
நிறைய வாழ்கிளி யன்னவூர் ஈசனை உறையும் ஞானசம் பந்தன்சொல் சீரினை அறைய நின்றன பத்தும்வல் லார்க்குமே குறையி லாது கொடுமை தவிர்வரே. | [11] |