மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங் கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர் உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய வொருவன் கழலேத்த இடர்தொட ராவினை யானசிந்தும் மிறைவன் னருளாமே.
|
1
|
மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங் கைவரை யால்வளர் சங்கமெங்கும் மிகுக்குங் கலிக்காமூர் மெய்வரை யான்மகள் பாகன்றன்னை விரும்ப வுடல்வாழும் ஐவரை யாசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.
|
2
|
தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்க டொழுதேத்தக் காவியி னேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர் மேவிய வீசனை யெம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கல னாதிமூர்த்தி யமரர் பெருமானே.
|
3
|
குன்றுகள் போற்றிரை யுந்தியந்தண் மணியார் தரமேதி கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர் என்றுண ரூழியும் வாழுமெந்தை பெருமா னடியேத்தி நின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்றமரே.
|
4
|
வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங் கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர் ஆனிடை யைந்துகந் தாடினானை யமரர் தொழுதேத்த நானடை வாம்வண மன்புதந்த நலமே நினைவோமே.
|
5
|
Go to top |
துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல் கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர் மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தா னினைந்தேத்த நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.
|
6
|
கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர்மங் கலியத்திற் காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர் ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி ஓலமி டாதவ ரூழியென்று முணர்வைத் துறந்தாரே.
|
7
|
ஊரர வந்தலை நீண்முடியா னொலிநீ ருலகாண்டு காரர வக்கடல் சூழவாழும் பதியாங் கலிக்காமூர் தேரர வல்குலம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான் ஆரர வம்பட வைத்தபாத முடையா னிடமாமே.
|
8
|
அருவரை யேந்திய மாலுமற்றை யலர்மே லுறைவானும் இருவரு மஞ்ச வெரியுருவா யெழுந்தான் கலிக்காமூர் ஒருவரை யான்மகள் பாகன்றன்னை யுணர்வாற் றொழுதேத்தத் திருமரு வுஞ்சிதை வில்லைச்செம்மைத் தேசுண் டவர்பாலே.
|
9
|
மாசு பிறக்கிய மேனியாரு மருவுந் துவராடை மீசு பிறக்கிய மெய்யினாரு மறியா ரவர்தோற்றங் காசினி நீர்த்திரண் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர் ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.
|
10
|
Go to top |
ஆழியு ணஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ண ஊழிதொறும்முள ராவளித்தா னுலகத் துயர்கின்ற காழியுண் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர் வாழி யெம்மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.
|
11
|