சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

3.071   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு

திருவைகாவூர் - சாதாரி பவப்ரியா பந்துவராளி காஞ்சனாவதி ராகத்தில் திருமுறை அருள்தரு வளைக்கைவல்லியம்மை உடனுறை அருள்மிகு வில்லவனேசர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=dG0p0SMb70U   Add audio link Add Audio
கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும்வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு மீசனிடமாம்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிக ளூறிவயல் சேறுசெயும் வைகாவிலே.


1


அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகவெழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில் வைகாவிலே.


2


ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்தவடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்க டோறுமழகார்
வானமதி யோடுமழை நீண்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.


3


இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது நீதிபலவும்
தன்னவுரு வாமெனமி குத்ததவ னீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போய்வகையி னான்முழு [ துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னவிரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.


4


வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கவழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில். வைகாவிலே.


5


Go to top
நஞ்சமுது செய்தமணி கண்டனமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவலோகனமர் கின்றவிடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழினிசை யெண்ணரிய வண்ணமுளவாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.


6


நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையால்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதிகொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.


7


கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடனெ ரித்தவழ கன்றனிடமாம்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.


8


அந்தமுத லாதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மானிறைவ னென்றுதொழ நின்றருள்செ யீசனிடமாம்
சிந்தைசெய்து பாடுமடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.


9


ஈசனெமை யாளுடைய வெந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடம்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.


10


Go to top
முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை காவிலதனை
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனு ரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ ருருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருவைகாவூர்
3.071   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கோழை மிடறு ஆக, கவி
Tune - சாதாரி   (திருவைகாவூர் வில்லவனேசர் வளைக்கைவல்லியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 3.071