சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

This page was last modified on Fri, 10 May 2024 14:07:45 +0000
 
விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை குனிய வாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே! பரம யோகி!
கடைத்தலைப் புகுந்து நின்றோம்; கலிமறைக் காடு(ட்) அமர்ந்தீர்!
அடைத்திடும், கதவு தன்னை அப்படித் தாளி னாலே!


[ 1 ]


முடைத்தலைப் பலிகொள் வானே! முக்கணா! நக்க மூர்த்தீ!
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காடு(ட்) அமர்ந்தாய்!
அடைத்திடும், கதவை! என்று(று) இங்கு(கு) அடியனேன் சொல்ல, வல்லே
அடைத்தனை கதவு(வ்); இது(து) அன்றோ, எம்மை ஆள் உகக்கும் ஆறே!


[ 2 ]


கொங்கு(கு) அணா மலர்கள் மேவும் குளிர்பொழில் இமையப் பாவை
பங்கு(கு) அணா(வ்) உருவினானே! பருமணி உமிழும் வெம்மைச்
செங்கண் ஆர் அரவம் பூண்ட திகழ்மறைக் காடு(டு) அமர்ந்தாய்!
அங்கணா! இது அன்றோதான், எம்மை ஆள் உகக்கும் ஆறே!


[ 3 ]


இருள் உடை மிடற்றினானே! எழில்மறைப் பொருள்கள் எல்லாம்
தெருள் பட முனிவர்க்கு(கு) ஈந்த திகழ்மறைக் காடு(டு) அமர்ந்தாய்!
மருள் உடைமனத்த னேனும் வந்து அடி பணிந்து நின்றேற்கு(கு)
அருள் அது புரிவது(து) அன்றோ, எம்மை ஆள் உகக்கும் ஆறே!


[ 4 ]


பெருந்தகை வேழம் தன்னைப் பிளிறிட உரி செய் தானே!
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
கருத்தில னேனும் நின் தன் கழல் அடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவது(து) அன்றோ, எம்மை ஆள் உகக்கும் ஆறே!


[ 5 ]


Go to top
செப்பு(பு) அமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளும் தேசோடு(டு)
ஒப்பு(பு) அம்நர் பலிகொள் வானே! ஒளிமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
அப்பு(பு) அமர் சடையினானே! அடியனேன் பணி உகந்த
அப்பனே! அளவில் சோதீ! அடிமையை உகக்கும் ஆறே!


[ 6 ]


மதி துன்றும் இதழி, மத்தம், மன்னிய சென்னி யானே!
கதி ஒன்றும் ஏற்றி னானே! கலிமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
விதி ஒன்று பாவின் மாலை கேட்டருள் வியக்கும் தன்மை
இது அன்றோ, உலகில் நம்பி எம்மை ஆள் உகக்கும் ஆறே!


[ 7 ]


நீசன் ஆம் அரக்கன் திண்தோள் நெரிதர விரலால் ஊன்றும்
தேசனே! ஞானமூர்த்தீ! திருமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
ஆசையை அறுக்க உய்ந்திட்டு(டு) அவன் அடி பரவ, மெய்யே
ஈசனார்க்(கு) ஆள் அது(து) ஆனேன் என்பதை அறிவித்தாயே.


[ 8 ]


மைதிகழ் உருவினானும், மலரவன் தானும், மெய்ம்மை
எய்து மா(று) அறிய மாட்டார்; எழில்மறைக் காடு அமர்ந்தாய்!
பொய்தனை இன்றி நின்னைப் போற்றினார்க்(கு) அருளைச் சேரச்
செய்தனை, எனக்கு நீ இன்று அருளிய திறத்தினாலே.


[ 9 ]


மண் தலத்து(து) அமணர் பொய்யும், தேரர்கள் பொழியும், மாறக்
கண்டனை; அடிகள்! என்றும் கலிமறைக் காடு(டு) அமர்ந்தாய்!
தண்டியைத் தானா வைத்தான் என்னும் அத் தன்மை யாலே
எண்திசைக்கு(கு) அறிய வைத்தாய், இக்கதவு(வு) அடைப்பித்து(து) அன்றே!


[ 10 ]


Go to top
மதம் உடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு(டு) உளானைக்
கதவு(வு) அடைத் திறமும் செப்பிக் கடிபொழில் காழி வேந்தன்
தகவு(வு) உடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன்சொன்ன
பதம் உடைப் பத்தும் வல்லார், பரமனுக்கு(கு) அடியர் தாமே.


[ 11 ]


   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song