முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம், சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர், பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி, எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடை மருதே.
அடியார்களது உள்ளமாகிய ஊரையே விரும்பிச் சென்று அடைபவனும் , எம் தந்தையும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` பழைய ஊராகிய முதுகுன்றம் , குரங்கணின்முட்டம் , ஆரூர் , மகளிரது பந்துகள் உலாவுகின்ற பழையாறு , பழனம் , பைஞ்ஞீலி , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .
சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம், தொண்டர் ஒற்றும் ஊர் ஒற்றியூர், திரு ஊறல், ஒழியாப் பெற்றம் ஊர்தி, பெண் பாதி இடம் பெண்ணைத் தெண்நீர் எற்றும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும் , பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும் , யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் , ` அடி யார்கள் சென்று சூழும் ஊராகிய சுழியல் , சோபுரம் , அவர்கள் ஆராய்கின்ற ஒற்றியூர் , ஊறல் , பெண்ணையாற்றின் தெளிவாகிய நீர் மோதுகின்ற இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .
கடங்களூர், திருக்காரிக்கரை, கயிலாயம், விடங்களூர், திரு வெண்ணி, அண்ணாமலை, வெய்ய படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான், பரஞ்சோதி, இடம் கொள் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
கொடிய , படங்களோடு ஊர்ந்து செல்கின்ற பாம்புகளை அரையில் உடையவனும் , மேலான ஒளியாய் உள்ளவனும் , யாவராலும் அடையப்படுபவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக் கொள்ளுகின்ற ஊர்கள் , ` செய்கடன்கள் நிரம்ப நிகழ்கின்ற காரிகரை , கயிலாயம் , நீரும் தேனும் மிக்குப் பாய்கின்ற வெண்ணி , அண்ணா மலை , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .
கச்சையூர், காவம், கழுக்குன்றம், காரோணம், பிச்சை ஊர் திரிவான்-கடவூர், வடபேறூர், கச்சி ஊர் கச்சி, சிக்கல், நெய்த்தானம், மிழலை, இச்சை ஊர் எமது அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
இறைவனை , ` தமிழில் விளங்குபவன் ` என்று கருதவல்ல யாங்கள் , எம்முள் அளவளாவுங்கால் , எம்மை நீக்கி , ` எம்மினும் உயர்ந்த அடியவர்கட்கு உரிய ஊர் ` என்றும் , யாவரையும் உளப்படுத்து , ` நங்கள் ஊர் ` என்றும் , பிறரொடு சொல்லாடுங்கால் , முன்னிலையாரை நீக்கி , ` எங்கள் ஊர் ` என்றும் சொல்லுமாறு , யாவராலும் அடையப்படும் பெருமானாகிய இறைவனுக்கு உரியதாய் உள்ள ஊர்கள் , ` திங்களூர் , திருவாதிரையான் பட்டினம் என்னும் ஊர் , நறையூர் , மிகவும் பரவிய புகழினையுடைய நாலூர் , இடையாறு , இடைமருது ` என்னும் இவைகளே .
கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன், கொல் ஏற்றன், தருக்கு அரக்கனைச் செற்று உகந்தான், தன் முடிமேல் எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி, இருக்கும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.