சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  
அநுமன் திருப்புகழ்

திருப்புகழ் # 9   - கருவடைந்து  (திருப்பரங்குன்றம்)  
திருப்புகழ் # 161   - சுருளளக பார  (பழநி)  
திருப்புகழ் # 373   - முருகு செறிகுழல் சொரு  (திருவருணை)  
திருப்புகழ் # 1153   - குனகியொரு மயில்  (பொதுப்பாடல்கள்)  

கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி!
நம பார்வதி பதயே ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி!
எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி போற்றி

வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி

அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி

# 9 கருவடைந்து   (திருப்பரங்குன்றம்)  
தனனதந்த தத்தத்த தந்த
     தனனதந்த தத்தத்த தந்த
          தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான

கருவடைந்து பத்துற்ற திங்கள்
     வயிறிருந்து முற்றிப்ப யின்று
          கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
     முலையருந்து விக்கக்கி டந்து
          கதறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
     இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
          அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
     பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
          தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
     னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
          யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற்சி றந்த
     அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
          எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப டைக்கர்த்த ரென்று
     அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
          அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு டைத்துச்சி னந்து
     உலகமும்ப டைத்துப்ப ரிந்து
          அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
Back to Top

# 161 சுருளளக பார   (பழநி)  
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
     சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே
சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
     தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல்
அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
     அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
     அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
     பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
     படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
     ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே
இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
     இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.
Back to Top

# 373 முருகு செறிகுழல் சொரு   (திருவருணை)  
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முருகு செறிகுழல் சொருகிய விரகிகள்
     முலைக ளளவிடு முகபட பகடிகள்
          முதலு முயிர்களு மளவிடு களவியர் ...... முழுநீல
முழுகு புழுககில் குழைவடி வழகியர்
     முதிர வளர்கனி யதுகவ ரிதழியர்
          முனைகொ ளயிலென விழியெறி கடைசிய ...... ரநுராகம்
மருவி யமளியி னலமிடு கலவியர்
     மனது திரவிய மளவள வளவியர்
          வசன மொருநொடி நிலைமையில் கபடியர் ...... வழியேநான்
மருளு மறிவின னடிமுடி யறிகிலன்
     அருணை நகர்மிசை கருணையொ டருளிய
          மவுன வசனமு மிருபெரு சரணமு ...... மறவேனே
கருதி யிருபது கரமுடி யொருபது
     கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது
          கடிய வியனகர் புகவரு கனபதி ...... கனல்மூழ்கக்
கவச அநுமனொ டெழுபது கவிவிழ
     அணையி லலையெறி யெதிரமர் பொருதிடு
          களரி தனிலொரு கணைவிடு மடலரி ...... மருகோனே
சருவு மவுணர்கள் தளமொடு பெருவலி
     யகல நிலைபெறு சயிலமு மிடிசெய்து
          தரும னவர்பதி குடிவிடு பதனிசை ...... மயில்வீரா
தருண மணியவை பலபல செருகிய
     தலையள் துகிலிடை யழகிய குறமகள்
          தனது தனமது பரிவொடு தழுவிய ...... பெருமாளே.
Back to Top

# 1153 குனகியொரு மயில்   (பொதுப்பாடல்கள்)  
தனதனன தனதான தானான தானான
     தனதனன தனதான தானான தானான
          தனதனன தனதான தானான தானான ...... தனதான

குனகியொரு மயில்போல வாராம னோலீலை
     விளையவினை நினையாம லேயேகி மீளாத
          கொடியமன தநியாய மாபாத காபோதி ...... யெனஆசைக்
கொளுவஅதில் மயலாகி வீறொடு போய்நீள
     மலரமளி தனிலேறி யாமாறு போமாறு
          குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ...... முலைமூழ்கி
மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்
     விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள
          மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி ...... யநுராக
வகைவகையி லதிமோக வாராழி யூடான
     பொருளளவ தளவாக யாரோடு மாலான
          வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற ...... அருள்வாயே
எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி
     லெனவிரகு குலையாத மாதாவு நேரோத
          இசையுமொழி தவறாம லேயேகி மாமாது ...... மிளையோனும்
இனிமையொடு வருமாய மாரீச மானாவி
     குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள
          இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி ...... யுயிர்சீறி
அநுமனொடு கவிகூட வாராக நீராழி
     யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி
          அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப ...... நிருதேசன்
அருணமணி திகழ்பார வீராக ராமோலி
     யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி
          அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ...... பெருமாளே.
Back to Top


This page was last modified on Thu, 09 May 2024 05:33:07 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

hanuman thiruppugazh