![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
கற்பக விநாயகர் மலரடி! போற்றி போற்றி! Thiruppugazh long Verse Songs
நம பார்வதி பதயே! ஹர ஹர மஹா தேவா
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி
வெற்றி வேல் முருகனுக்கு! அரோகரா
ஆதி பராசக்திக்கு! போற்றி போற்றி
அருணகிரி நாதருக்கு! போற்றி போற்றி
Back to Top
# 115
இத் தாரணிக்குள்
(பழநி)
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன ...... தனதனதான
இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி
இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச்
சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும்
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித்
திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பா
மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய ...... மருமகனாகி
வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி
யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி ...... வருபெருமாளே.
# 150 குன்றுங் குன்றும் (பழநி) |
தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும் படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர் இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங் கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர் கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ் சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் ...... விரகாலும் கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர் கடியவர் எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந் தனதுரி மையதென நலமுட னணைபவர் கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன் பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் ...... மயலாலும் என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண் டுனதிரு மலரடி பரவிட மனதினில் நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந் தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந் தமுமிக வருள்பெற விடைதரு விதமுன ...... மருள்வாயே எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன்விடு மதிசய வினையுறு மலகையை வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ் செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர் நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண் துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் ...... மருகோனே ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந் தொளைபட மதகரி முகனுடல் நெரிபட டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடியென விழுமெழு படிகளு மதிர்பட ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென் றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ...... யடுவோனே உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ் சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென் றொலிபட நடமிடு பரனரு ளறுமுக உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும் விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை ...... புயவீரா அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங் கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில் அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும் படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட அன்பின் பண்பெங் குங்கண் டென்பின் அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு ...... திறலோனே அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங் கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங் கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே. |
# 154 சகடத்திற் குழை (பழநி) |
தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான |
சகடத்திற் குழையிட் டெற்றிக் குழலுக்குச் சரம்வைத் தெற்றிப் புளகித்துக் குவளைக் கட்பொற் கணையொத்திட் டுழலச் சுத்தித் தரளப்பற் பவளத் தொட்டக் களபப்பொட் டுதலிட் டத்திக் ...... குவடான தனதுத்திப் படிகப் பொற்பிட் டசையப்பெட் பசளைத் துப்புக் கொடியொத்திட் டிடையிற் பட்டைத் தகையிற்றொட் டுகளப் பச்சைச் சரணத்துக் கியலச் சுற்றிச் சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர் சுகமுற்றுக் கவலைப் பட்டுப் பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற் குளறிட்டுத் தடிதொட் டெற்றிப் பிணியுற்றுக் கசதிப் பட்டுச் சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத் தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் ...... கிடைநாளிற் சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட் டிறுகக்கட் டுயிரைப் பற்றிக் கொளுகப்பற் பலரைக் கட்டிக் கரம்வைத்துத் தலையிற் குத்திச் சுடுகட்டைச் சுடலைக் கட்டைக் கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் ...... சடமாமோ திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி திமிலைக்கைத் துடிதட் டெக்கைப் பகடிட்டுப் பறையொத் தக்கட் டிகையெட்டுக் கடல்வற் றித்தித் தரவுக்கக் கிரியெட் டுத்தைத் தியருக்குச் சிரமிற் றுட்கச் சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட் ...... டிடும்வேலா பகலைப்பற் சொரியத் தக்கற் பதிபுக்கட் டழலிட் டுத்திட் புரமட்கிக் கழைவிற் புட்பச் சரனைச்சுட் டயனைக் கொத்திப் பவுரிக்கொட் பரமர்க் குச்சற் குருவொத்துப் பொருளைக் கற்பித் ...... தருள்வோனே பவளப்பொற் கிரிதுத் திப்பொற் றனகொச்சைக் கிளிசொற் பற்றிப் பரிவுற்றுக் கமலப் புட்பத் திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற் படிகத்துப் பவளப் பச்சைப் பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே. |
# 412 காராடக் குழல் (திருவருணை) |
தானா தத்தன தானா தத்தன தந்தன தந்தன தான தந்தன தானா தத்தன தானா தத்தன தந்தன தந்தன தான தந்தன தானா தத்தன தானா தத்தன தந்தன தந்தன தான தந்தன ...... தந்ததான |
காரா டக்குழ லாலா லக்கணை கண்கள்சு ழன்றிட வேமு கங்களி னாலா பச்சிலை யாலே மெற்புசி மஞ்சள்க லந்தணி வாளி கொந்தள காதா டக்கலன் மேலா டக்குடி யின்பர சங்குட மார்ப ளிங்கொளி ...... கொங்கைமாதர் காசா சைச்செய லாலே சொக்கிடு விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் போலே நற்றெரு வூடா டித்துயல் தொங்கல்நெ கிழ்ந்திடை யேது வண்டிட கால்தா விச்சதி யோடே சித்திர மென்பந டம்புரி வாரு டன்செயல் ...... மிஞ்சலாகிச் சீரா டிச்சில நாள்போய் மெய்த்திரை வந்துக லந்துயி ரோட வங்கமொ டூடா டிப்பல நோயோ டுத்தடி கொண்டுகு ரங்கென வேந டந்துசொல் சீயோ டிக்கிடை பாயோ டுக்கிய டங்கிய ழிந்துயி ரோடு ளைஞ்சொளி ...... யுங்கண்மாறிச் சேரா மற்பொறி கேளா மற்செவி துன்பமொ டின்பமு மேம றந்துபின் ஊரார் சுற்றமு மாதோர் மக்களு மண்டியு மண்டையு டேகு விந்திது சீசீ சிச்சிசி போகா நற்சனி யன்கட வென்றிட வேகி டந்துடல் ...... மங்குவேனோ மாரோன் முப்புர நீறா யுற்றிட அங்கியு மிழ்ந்திடு வோரி பம்புலி தோல்சீ யத்தொடெ யேகா சர்ச்சடை கங்கையி ளம்பிறை யார ணிந்தவர் மாடே றிக்கட லாலா லத்தையு முண்டவ ரெந்தைசி வாநு பங்குறை ...... யென்றன்மாதா மாலோ னுக்கிளை யாள்மா பத்தினி யம்பிகை சங்கரி மோக சுந்தரி வேதா மக்கலை ரூபாள் முக்கணி ரம்பிய கொங்கையி னாள்ப யந்தருள் மாஞா னக்கும ராதோ கைப்பரி யின்பத வண்குரு வேயெ னஞ்சுரர் ...... தொண்டுபாடச் சூரார் மக்கிட மாமே ருக்கிட அங்கட லெண்கிரி யோடி பங்கொடு தீபே ழற்றிட பாதா ளத்துறை நஞ்சர வின்பண மாயி ரங்கெட சூழ்வா ளக்கிரி தூளா கிப்பொடி விண்கணி றைந்திட வேந டம்புரி ...... கின்றவேலா சோர்வே தத்தலை மேலா டிச்சுக பங்கய செங்கர மோட கம்பெற வாகா னக்குற மாதோ டற்புத மங்குல ணங்குட னேம கிழ்ந்துநல் தூணோ டிச்சுட ராகா சத்தைய ணைந்துவி ளங்கரு ணாச லந்திகழ் ...... தம்பிரானே. |
# 444 விந்துப் புளகித (திருவருணை) |
தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன தனத்த தனதன ...... தனதான |
விந்துப் புளகித இன்புற் றுருகிட சிந்திக் கருவினி லுண்பச் சிறுதுளி விரித்த கமலமெல் தரித்து ளொருசுழி யிரத்த குளிகையொ டுதித்து வளர்மதி விண்டுற் றருள்பதி கண்டுற் றருள்கொடு மிண்டிச் செயலினி ரம்பித் துருவொடு மெழுக்கி லுருவென வலித்து எழுமதி கழித்து வயிர்குட முகுப்ப வொருபதில் விஞ்சைச் செயல்கொடு கஞ்சச் சலவழி வந்துப் புவிமிசை பண்டைச் செயல்கொடு விழுப்பொ டுடல்தலை அழுக்கு மலமொடு கவிழ்த்து விழுதழு துகுப்ப அனைவரு ...... மருள்கூர மென்பற் றுருகிமு கந்திட் டனைமுலை யுண்டித் தரகொடு வுண்கிச் சொலிவளர் வளத்தொ டளைமல சலத்தொ டுழைகிடை துடித்து தவழ்நடை வளர்த்தி யெனதகு வெண்டைப் பரிபுர தண்டைச் சரவட முங்கட் டியல்முடி பண்பித் தியல்கொடு விதித்த முறைபடி படித்து மயல்கொள தெருக்க ளினில்வரு வியப்ப இளமுலை விந்தைக் கயல்விழி கொண்டற் குழல்மதி துண்டக் கரவளை கொஞ்சக் குயில்மொழி விடுப்ப துதைகலை நெகிழ்த்தி மயிலென நடித்த வர்கள்மயல் பிடித்தி டவர்வரு ...... வழியேபோய்ச் சந்தித் துறவொடு பஞ்சிட் டணைமிசை கொஞ்சிப் பலபல விஞ்சைச் சரசமொ டணைத்து மலரிதழ் கடித்து இருகர மடர்த்த குவிமுலை யழுத்தி யுரமிடர் சங்குத் தொனியொடு பொங்கக் குழல்மலர் சிந்தக் கொடியிடை தங்கிச் சுழலிட சரத்தொ டிகள்வெயி லெறிப்ப மதிநுதல் வியர்ப்ப பரிபுர மொலிப்ப எழுமத சம்பத் திதுசெய லின்பத் திருள்கொடு வம்பிற் பொருள்கள்வ ழங்கிற் றிதுபினை சலித்து வெகுதுய ரிளைப்பொ டுடல்பிணி பிடித்தி டனைவரும் நகைப்ப கருமயிர் ...... நரைமேவித் தன்கைத் தடிகொடு குந்திக் கவியென உந்திக் கசனம றந்திட் டுளமிக சலித்து வுடல்சல மிகுத்து மதிசெவி விழிப்பு மறைபட கிடத்தி மனையவள் சம்பத் துறைமுறை யண்டைக் கொளுகையில் சண்டக் கருநம னண்டிக் கொளுகயி றெடுத்து விசைகொடு பிடித்து வுயிர்தனை பதைப்ப தனிவழி யடித்து கொடுசெல சந்தித் தவரவர் பங்குக் கழுதுஇ ரங்கப் பிணமெடு மென்றிட் டறைபறை தடிப்ப சுடலையி லிறக்கி விறகொடு கொளுத்தி யொருபிடி பொடிக்கு மிலையெனு ...... முடலாமோ திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்பத் துடிகள்த வுண்டைக் கிடுபிடி பம்பைச் சலிகைகள் சங்கப் பறைவளை திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு டிடிக்கு நிகரென வுடுக்கை முரசொடு செம்பொற் குடமுழ வுந்தப் புடன்மணி பொங்கச் சுரர்மலர் சிந்தப் பதமிசை செழித்த மறைசிலர் துதிப்ப முநிவர்கள் களித்து வகைமனி முழக்க அசுரர்கள் ...... களமீதே சிந்திக் குருதிக ளண்டச் சுவரகம் ரம்பக் கிரியொடு பொங்கிப் பெருகியெ சிவப்ப அதில்கரி மதர்த்த புரவிகள் சிரத்தொ டிரதமு மிதப்ப நிணமொடு செம்புட் கழுகுக ளுண்பத் தலைகள்த தும்பக் கருடன டங்கொட் டிடகொடி மறைப்ப நரிகண மிகுப்ப குறளிகள் நடிக்க இருள்மலை கொளுத்தி யலைகடல் செம்பொற் பவளமு டங்கிக் கமர்விட வெந்திட் டிகமலை விண்டுத் துகள்பட சிமக்கு முரகனு முழக்கி விடபட மடைத்த சதமுடி நடுக்கி யலைபட ...... விடும்வேலா தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி சுழற்றி நடமிடு நிருத்த ரயன்முடி கரத்த ரரிகரி யுரித்த கடவுள்மெய் தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர் தொடுத்த மதனுரு பொடித்த விழியினர் மிகுத்த புரமதை யெரித்த நகையினர் தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர் தொந்திக் கடவுளை தந்திட் டவரிட சுகத்தி மழுவுழை கரத்தி மரகத நிறத்தி முயலக பதத்தி அருளிய ...... முருகோனே துண்டச் சசிநுதல் சம்பைக் கொடியிடை ரம்பைக் கரசியெ னும்பற் றருமகள் சுகிப்ப மணவறை களிக்க அணையறு முகத்தொ டுறமயல் செழித்த திருபுய செம்பொற் கரகம லம்பத் திருதல மம்பொற் சசியெழ சந்தப் பலபடை செறித்த கதிர்முடி கடப்ப மலர்தொடை சிறப்பொ டொருகுடில் மருத்து வனமகள் தொந்தப் புணர்செயல் கண்டுற் றடியெனி டைஞ்சற் பொடிபட முன்புற் றருளயில் தொடுத்து மிளநகை பரப்பி மயில்மிசை நடித்து அழல்கிரி பதிக்குள் மருவிய ...... பெருமாளே. |
# 456 மந்தரமென் குவடார் (சிதம்பரம்) |
தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன தந்தன தந்தன தான தந்தன தான தனந்தன தான தந்தன ...... தந்ததான |
மந்தர மென்குவ டார்த னங்களி லார மழுந்திட வேம ணம்பெறு சந்தன குங்கும சேறு டன்பனி நீர்கள் கலந்திடு வார்மு கஞ்சசி மஞ்சுறை யுங்குழ லார்ச ரங்கயல் வாள்வி ழிசெங்கழு நீர்த தும்பிய ...... கொந்தளோலை வண்சுழ லுஞ்செவி யார்நு டங்கிடை வாட நடம்புரி வார்ம ருந்திடு விஞ்சையர் கொஞ்சிடு வாரி ளங்குயில் மோக னவஞ்சியர் போல கம்பெற வந்தவ ரெந்தவுர் நீர றிந்தவர் போல இருந்ததெ னாம யங்கிட ...... இன்சொல்கூறிச் சுந்தர வங்கண மாய்நெ ருங்கிநிர் வாரு மெனும்படி யால கங்கொடு பண்சர சங்கொள வேணு மென்றவர் சேம வளந்துறு தேன ருந்திட துன்றுபொ னங்கையின் மீது கண்டவ ரோடு விழைந்துமெ கூடி யின்புறு ...... மங்கையோரால் துன்பமு டங்கழி நோய்சி ரங்கொடு சீபு ழுவுஞ்சல மோடி றங்கிய புண்குட வன்கடி யோடி ளஞ்சனி சூலை மிகுந்திட வேப றந்துடல் துஞ்சிய மன்பதி யேபு குந்துய ராழி விடும்படி சீர்ப தம்பெறு ...... விஞ்சைதாராய் அந்தர துந்துமி யோடு டன்கண நாதர் புகழ்ந்திட வேத விஞ்சைய ரிந்திர சந்திரர் சூரி யன்கவி வாணர் தவம்புலி யோர்ப தஞ்சலி அம்புய னந்திரு மாலொ டிந்திரை வாணி யணங்கவ ளோட ருந்தவர் ...... தங்கள்மாதர் அம்பர ரம்பைய ரோடு டன்திகழ் மாவு ரகன்புவி யோர்கள் மங்கையர் அம்புவி மங்கைய ரோட ருந்ததி மாதர் புகழ்ந்திட வேந டம்புரி அம்புய செம்பதர் மாட கஞ்சிவ காம சவுந்தரி யாள்ப யந்தருள் ...... கந்தவேளே திந்திமி திந்திமி தோதி மிந்திமி தீத திதிந்தித தீதி திந்திமி தந்தன தந்தன னாத னந்தன தான தனந்தன னாவெ னும்பறை செந்தவில் சங்குட னேமு ழங்கசு ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா செந்தினை யின்புன மேர்கு றிஞ்சியில் வாழு மிளங்கொடி யாள்ப தங்களில் வந்துவ ணங்கிநி ணேமு கம்பெறு தாள ழகங்கையின் வேலு டன்புவி செம்பொனி னம்பல மேல கம்பிர கார சமந்திர மீத மர்ந்தருள் ...... தம்பிரானே. |
# 461 தனத்தில் குங்குமத்தை (சிதம்பரம்) |
தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான |
தனத்திற்குங் குமத்தைச்சந் தனத்தைக்கொண் டணைத்துச்சங் கிலிக்கொத்தும் பிலுக்குப்பொன் தனிற்கொத்துந் தரித்துச்சுந் தரத்திற்பண் பழித்துக்கண் சுழற்றிச்சண் பகப்புட்பங் ...... குழல்மேவித் தரத்தைக்கொண் டசைத்துப்பொன் தகைப்பட்டுந் தரித்துப்பின் சிரித்துக்கொண் டழைத்துக்கொந் தளத்தைத்தண் குலுக்கிச்சங் கலப்புத்தன் கரத்துக்கொண் டணைத்துச்சம் ப்ரமித்துக்கொண் ...... டுறவாடிப் புனித்தப்பஞ் சணைக்கட்டிண் படுத்துச்சந் தனப்பொட்டுங் குலைத்துப்பின் புயத்தைக்கொண் டணைத்துப்பின் சுகித்திட்டின் புகட்டிப்பொன் சரக்கொத்துஞ் சிதைப்பப்பொன் தரப்பற்றும் ...... பொதுமாதர் புணர்ப்பித்தும் பிடித்துப்பொன் கொடுத்துப்பின் பிதிர்ச்சித்தன் திணிக்கட்டுஞ் சிதைத்துக்கண் சிறுப்பப்புண் பிடித்தப்புண் புடைத்துக்கண் பழுத்துக்கண் டவர்க்குக்கண் புதைப்பச்சென் ...... றுழல்வேனோ சினத்துக்கண் சிவப்பச்சங் கொலிப்பத்திண் கவட்டுச்செங் குவட்டைச்சென் றிடித்துச்செண் டரைத்துக்கம் பிடிக்கப்பண் சிரத்தைப்பந் தடித்துக்கொண் டிறைத்துத்தெண் கடற்றிட்டுங் ...... கொளைபோகச் செழித்துப்பொன் சுரர்ச்சுற்றங் களித்துக்கொண் டளிப்புட்பஞ் சிறக்கப்பண் சிரத்திற்கொண் டிறைத்துச்செம் பதத்திற்கண் திளைப்பத்தந் தலைத்தழ்த்தம் புகழ்ச்செப்புஞ் சயத்துத்திண் ...... புயவேளே பனித்துட்கங் கசற்குக்கண் பரப்பித்தன் சினத்திற்றிண் புரத்தைக்கண் டெரித்துப்பண் கயத்தைப்பண் டுரித்துப்பன் பகைத்தக்கன் தவத்தைச்சென் றழித்துக்கொன் றடற்பித்தன் ...... தருவாழ்வே படைத்துப்பொன் றுடைத்திட்பன் தனைக்குட்டும் படுத்திப்பண் கடிப்புட்பங் கலைச்சுற்றும் பதத்தப்பண் புறச்சிற்றம் பலத்திற்கண் களித்தப்பைம் புனத்திற்செங் குறத்திப்பெண் ...... பெருமாளே. |
# 495 இரசபா கொத்தமொழி (சிதம்பரம்) |
தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன தனதனா தத்ததன தனதனா தத்ததன தனதனா தத்ததன தானனந் தனன ...... தந்ததான |
இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை யிணையிலா சத்திவிழி யார்பசும் பொனிரர் எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர் எழுதுதோ டிட்டசெவி பவளநீ லக்கொடிக ளிகலியா டப்படிக மோடடும் பொனுரு ...... திங்கள்மேவும் இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட ரிகலியா ரத்தொடையு மாருமின் பரச ...... தங்கமார்பின் வரிகள்தா பித்தமுலை யிசையஆ லிற்றளிரின் வயிறுநா பிக்கமல மாமெனுஞ் சுழிய மடுவுரோ மக்கொடியென் அளிகள்சூழ் வுற்றநிரை மருவுநூ லொத்தஇடை யாரசம் பையல்குல் மணமெலா முற்றநறை கமலபோ துத்தொடையென் வளமையார் புக்கதலி சேருசெம் பொனுடை ...... ரம்பைமாதர் மயலதா லிற்றடியெ னவர்கள்பா லுற்றுவெகு மதனபா ணத்தினுடன் மேவிமஞ் சமிசை வதனம்வேர் வுற்றவிர முலைகள்பூ ரிக்கமிடர் மயில்புறா தத்தைகுயில் போலிலங் கமளி வசனமாய் பொத்தியிடை துவளமோ கத்துளமிழ் வசமெலாம் விட்டுமற வேறுசிந் தனையை ...... தந்துஆள்வாய் முரசுபே ரித்திமிலை துடிகள்பூ ரித்தவில்கள் முருடுகா ளப்பறைகள் தாரைகொம் புவளை முகடுபேர் வுற்றவொலி யிடிகள்போ லொத்தமறை முதுவர்பா டிக்குமுற வேயிறந் தசுரர் முடிகளோ டெற்றியரி யிரதமா னைப்பிணமொ டிவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...... யெங்குமோட முடுகிவேல் விட்டுவட குவடுவாய் விட்டமரர் முநிவரா டிப்புகழ வேதவிஞ் சையர்கள் முழவுவீ ணைக்கினரி யமுர்தகீ தத்தொனிகள் முறையதா கப்பறைய வோதிரம் பையர்கள் முலைகள்பா ரிக்கவுட னடனமா டிற்றுவர முடிபதா கைப்பொலிய வேநடங் குலவு ...... கந்தவேளே அரசுமா கற்பகமொ டகில்பலா இர்ப்பைமகி ழழகுவே யத்திகமு கோடரம் பையுடன் அளவிமே கத்திலொளிர் வனமொடா டக்குயில்க ளளிகள்தோ கைக்கிளிகள் கோவெனம் பெரிய அமுர்தவா விக்கழனி வயலில்வா ளைக்கயல்க ளடையுமே ரக்கனக நாடெனும் புலியுர் ...... சந்தவேலா அழகுமோ கக்குமரி விபுதையே னற்புனவி யளிகுலா வுற்றகுழல் சேர்கடம் புதொடை அரசிவே தச்சொருபி கமலபா தக்கரவி யரியவே டச்சிறுமி யாளணைந் தபுகழ் அருணரூ பப்பதமொ டிவுளிதோ கைச்செயல்கொ டணைதெய்வா னைத்தனமு மேமகிழ்ந் துபுணர் ...... தம்பிரானே. |
# 500 சகுட முந்தும் (சிதம்பரம்) |
தனனதந்தம் தனனதந்தம் தனனதந்தம் தானந்தம் தனனதந்தம் தனனதந்தம் தனனதந்தம் தானந்தம் தனனதந்தம் தனனதந்தம் தனனதந்தம் தானந்தம் ...... தனதான |
சகுடமுந்துங் கடலடைந்துங் குளமகிழ்ந்துந் தோய்சங்கங் கமுகடைந்தண் டமுதகண்டந் தரளகந்தந் தேர்கஞ்சஞ் சரமெனுங்கண் குமிழதுண்டம் புருவெனுஞ்செஞ் சாபம்பொன் ...... திகழ்மாதர் சலசகெந்தம் புழுகுடன்சண் பகமணங்கொண் டேய்ரண்டந் தனகனம்பொன் கிரிவணங்கும் பொறிபடுஞ்செம் பேர்வந்தண் சலனசம்பொன் றிடைபணங்கின் கடிதடங்கொண் டாரம்பொன் ...... தொடர்பார்வை புகலல்கண்டஞ் சரிகரம்பொன் சரணபந்தந் தோதிந்தம் புரமுடன்கிண் கிணிசிலம்பும் பொலியலம்புந் தாள்ரங்கம் புணர்வணைந்தண் டுவரொடுந்தொண் டிடர்கிடந்துண் டேர்கொஞ்சுங் ...... கடைநாயேன் புகழடைந்துன் கழல்பணிந்தொண் பொடியணிந்தங் காநந்தம் புனல்படிந்துண் டவசமிஞ்சுந் தவசர்சந்தம் போலுந்திண் புவனிகண்டின் றடிவணங்குஞ் செயல்கொளஞ்செஞ் சீர்செம்பொன் ...... கழல்தாராய் திகுடதிந்திந் தகுடதந்தந் திகுடதிந்திந் தோதிந்தம் டகுடடண்டண் டிகுடடிண்டிண் டகுடடண்டண் டோடிண்டிண் டிமுடடிண்டிண் டுமுடடுண்டுண் டிமுடடிண்டென் றேசங்கம் ...... பலபேரி செககணஞ்சஞ் சலிகைபஞ்சம் பறைமுழங்கும் போரண்டஞ் சிலையிடிந்துங் கடல்வடிந்தும் பொடிபறந்துண் டோர்சங்கஞ் சிரமுடைந்தண் டவுணரங்கம் பிணமலைந்தன் றாடுஞ்செங் ...... கதிர்வேலா அகிலஅண்டஞ் சுழலஎங்கும் பவுரிகொண்டங் காடுங்கொன் புகழ்விளங்குங் கவுரிபங்கன் குருவெனுஞ்சிங் காரங்கொண் டறுமுகம்பொன் சதிதுலங்குந் திருபதங்கந் தாஎன்றென் ...... றமரோர்பால் அலர்பொழிந்தங் கரமுகிழ்ந்தொண் சரணமுங்கொண் டோதந்தம் புனைகுறம்பெண் சிறுமியங்கம் புணர்செயங்கொண் டேயம்பொன் அமைவிளங்கும் புலிசரம்பொன் திருநடங்கொண் டார்கந்தம் ...... பெருமாளே. |
# 512 மருவு கடல்முகில் (சிதம்பரம்) |
தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தனன தனதன தனன தனதன தனன தனதன தனன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தனதான. |
மருவு கடல்முகி லனைய குழல்மதி வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி குமுத மலரித ழமுத மொழிநிரை தரள மெனுநகை மிடறு கமுகென வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர் வகைய விரலொடு கிளிகள் முகநக மெனவு மிகலிய குவடு மிணையென வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம் வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் ...... முலைமேவும் வடமு நிரைநிரை தரள பவளமொ டசைய பழுமர இலைவ யிறுமயி ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும் அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி மதன னுருதுடி யிடையு மினலென அரிய கடிதட மமிர்த கழைரச மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை மருவு தொடையிணை கதலி பரடுகொள் கணையு முழவென கமட மெழுதிய வட்டப் புத்தக மொத்துப் பொற்சர ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர் மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள் பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர் திலத மழிபட விழிகள் சுழலிட மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட திரையி லமுதென கழையில் ரசமென பலவில் சுளையென வுருக வுயர்மயல் சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும் வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென ...... நரைமேவிச் செவியொ டொளிர்விழி மறைய மலசல மொழுக பலவுரை குழற தடிகொடு தெத்திப் பித்தமு முற்றித் தற்செய லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி லுவரி நிறமுடை நமனு முயிர்கொள செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு செனன மிதுவென அழுது முகமிசை அறைய அணைபவ ரெடென சுடலையில் சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட ...... முழல்வேனோ குருவி னுருவென அருள்செய் துறையினில் குதிரை கொளவரு நிறைத வசிதலை கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு முதல்வ ரிளகலை மதிய மடைசடை அருண வுழைமழு மருவு திருபுயர் கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத குமர னெனவிரு தொலியு முரசொடு வளையு மெழுகட லதிர முழவொடு கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட லொப்பத் திக்கும டுத்துத் தத்திட ...... அமர்மேவிக் குருகு கொடிசிலை குடைகள் மிடைபட மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல் குமர குருபர குமர குருபர குமர குருபர எனவொ தமரர்கள் கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட குலவு நரிசிறை கழுகு கொடிபல கருட னடமிட குருதி பருகிட கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு ...... மயில்வீரா சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன் அரிய விழிகெட இருப தமுமுல கடைய நெடியவர் திருவு மழகியர் தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர செயமு மனவலி சிலைகை கொடுகர மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர ...... மருகோனே திலத மதிமுக அழகி மரகத வடிவி பரிபுர நடனி மலர்பத சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர சிவைகொள் திருசர சுவதி வெகுவித சொருபி முதுவிய கிழவி யியல்கொடு செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு திரையி லமுதென மொழிசெய் கவுரியி னரிய மகனென புகழ்பு லிநகரில் செப்புப் பொற்றன முற்றப் பொற்குற தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய ...... பெருமாளே. |
# 572 இதமுறு விரைபுனல் (விராலிமலை) |
தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன ...... தனதான |
இதமுறு விரைபுனல் முழுகி யகில்மண முதவிய புகையினி லளவி வகைவகை கொத்தலர்க ளின்தொடையல் வைத்துவளர் கொண்டலென அறலென இசையளி யெனந ளிருளென நிறமது கருகிநெ டுகிநெ றிவுபட நெய்த்துமுசு வின்திரிகை யொத்தசுருள் குந்தளமும் இலகிய பிறையென எயினர் சிலையென விலகிய திலதநு தலும திமுகமும் உற்பலமும் வண்டுவடு விற்கணைய மன்படரு ...... முனைவாளும் இடர்படு கவுநடு வனும்வ லடல்பொரு கடுவது மெனநெடி தடுவ கொடியன இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவநி றைந்தவிழி தளவன முறுவலு மமுத குமுதமும் விளைநற வினியமொ ழியுமி னையதென ஒப்பறுந கங்கள்விரல் துப்பெனவு றைந்துகமு கிடியொடி படவினை செயும்வின் மதகலை நெடியக வுடியிசை முரலு சுரிமுக நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய ...... எழில்தோளும் விதரண மனவித னமதை யருள்வன சததள மறைமுகி ழதனை நிகர்வன புத்தமிர்து கந்தகுடம் வெற்பெனநி ரம்புவன இமசல ம்ருகமத களப பரிமள தமனிய ப்ரபைமிகு தருண புளகித சித்ரவர மங்கலவி சித்ரவிரு துங்ககன விகலித மிருதுள ம்ருதுள நவமணி முகபட விகடின தனமு முயர்வட பத்திரமி ருந்தகடி லொத்தசுழி யுந்தியுள ...... மதியாத விபரித முடையிடை யிளைஞர் களைபட அபகட மதுபுரி யரவ சுடிகைய ரத்நபண மென்பவழ குற்றவரை யும்புதிய நுணியத ளிரெனவு லவிய பரிபுர அணிநட னபதமு முடைய வடிவினர் பொற்கலவி யின்பமதி துக்கமென லன்றியவர் விரகினி லெனதுறு மனம துருகிய பிரமையு மறவுன தருள்கை வரவுயர் பத்திவழி யும்பரம முத்திநெறி யுந்தெரிவ ...... தொருநாளே தததத தததத ததத தததத திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு தமிதமி தமிதக தமித திமிதக திமிதிமி செககண திமித திகதிக தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... யெனவேதான் தபலைகு டமுழவு திமிலை படகம தபுதச லிகைதவில் முரசு கரடிகை மத்தளித வண்டையற வைத்தகுணி துந்துமிகள் மொகுமொகு மொகுவென அலற விருதுகள் திகுதிகு திகுவென அலகை குறளிகள் விக்கிடநி ணம்பருக பக்கியுவ ணங்கழுகு சதிர்பெற அதிர்தர உததி சுவறிட எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட வப்புவின்மி தந்தெழுப தற்புதக வந்தமெழ ...... வெகுகோடி மதகஜ துரகர தமுமு டையபுவி யதலமு தல்முடிய இடிய நெடியதொர் மிக்கொலிமு ழங்கஇரு ளக்கணம்வி டிந்துவிட இரவியு மதியமு நிலைமை பெறஅடி பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல் அத்திறல ணங்குசெய சத்திவிடு கந்ததிரு வயலியி லடிமைய குடிமை யினலற மயலொடு மலமற அரிய பெரியதி ருப்புகழ்வி ளம்புவென்மு னற்புதமெ ழுந்தருள்கு ...... கவிராலி மலையுறை குரவந லிறைவ வருகலை பலதெரி விதரண முருக சரவண உற்பவக்ர வுஞ்சகிரி நிக்ரகஅ கண்டமய நிருபவி மலசுக சொருப பரசிவ குருபர வெளிமுக டுருவ வுயர்தரு சக்ரகிரி யுங்குலைய விக்ரமந டம்புரியு மரகத கலபமெ ரிவிடு மயில்மிசை மருவியெ யருமைய இளமை யுருவொடு சொர்க்கதல மும்புலவர் வர்க்கமும்வி ளங்கவரு ...... பெருமாளே. |
# 592 நீலமஞ்சான குழல் (திருச்செங்கோடு) |
தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன தானனந் தானதன ...... தந்ததான |
நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி நீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை நீலபொன் சாபநுத லாசையின் தோடசையு நீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி நேர்சுகம் போலகமு கானகந் தாரர்புய நேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையி ...... ரண்டுபோல நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை நீடலங் காரசர மோடடைந் தார்மருவி நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையி னீலவண் டேவியநல் காமனங் காரநிறை நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதை நேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர் ...... சம்பையாரஞ் சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரண தாள்சிலம் போலமிட வேநடந் தானநடை சாதிசந் தானெகின மார்பரந் தோகையென தானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவி தானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினை ...... யஞ்சியோடத் தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள் தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள் தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடு தானிருந் தோதஇரு வோரகம் பேறுறுக ...... விஞ்சைதாராய் சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய் தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும் ...... விந்தையோனே சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர் தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை தோளகண் டாபரம தேசிகந் தாவமரர் தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர் சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடன ...... முங்கொள்வேலா மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர் மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு மார்பகன் காணமுடி யோனணங் கானமதி ...... யொன்றுமானை மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடை வார்துவண் டாடமுக மோடுகந் தீரரச வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமண வாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி மாதுபங் காமறைகு லாவுசெங் கோடைநகர் வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே. |
# 622 எதிர்பொருது (கொடுங்குன்றம்) |
தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன தனதனன தனதனன தத்தத்த தந்ததன தத்தத்த தந்ததன ...... தந்ததான. |
எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது குத்தித்தி றந்துமலை யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி முத்துச்செ றிந்தவட மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி னிற்கொத்து மங்குசநெ ...... ருங்குபாகர் எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப தைக்கக்க டிந்துமிக இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு முட்கத்தி ரண்டிளகி யிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு டைத்துச்சி னந்துபொரு ...... கொங்கையானை பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி யொக்கத்து வண்டமளி புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள் செக்கச்சி வந்தமுது பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய முத்தத்து டன்கருணை ...... தந்துமேல்வீழ் புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர் தட்டுப்ப டுந்திமிர புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய சட்டைக்கு ரம்பையழி பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி னிர்த்தச்ச ரண்களைம ...... றந்திடேனே திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி தத்தத்த தந்ததத தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத திக்கட்டி கண்டிகட ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித தக்கத்த குந்தகுர்த ...... திந்திதீதோ திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட டக்கட்ட கண்டகட டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட டுட்டுட்டு டுண்டுடுடு திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு குக்குக்கு குங்குகுகு ...... என்றுதாளம் முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு டுக்கைப்பெ ரும்பதலை முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம கத்திக்க ளும்பரவ முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய மிக்கக்க வந்தநிரை ...... தங்கியாட முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர வுக்ரப்பெ ருங்குருதி முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ டிக்கத்து ணிந்ததிர முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி வெட்டிக்க ளம்பொருத ...... தம்பிரானே. |
# 624 ககுபநிலை குலைய (குன்றக்குடி) |
தனதனன தனதனன தனதனன தனதனன தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன தனதனன தனதனன தனதனன தனதனன தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன தனதனன தனதனன தனதனன தனதனன தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன ...... தனதானா |
ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய தந்தத்தி னைத்தடிவ தொந்தத்தி ரத்தையுள அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும் அம்பொற்ப தத்தர்தநு வம்பொற்பொ ருப்படர்வ களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி யஞ்சப்பு டைத்தெழுவ வஞ்சக்க ருத்துமத ...... னபிஷேகங் கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ இன்பச்சு டர்க்கனக கும்பத்த ரச்செருவ பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர் புந்திக்கி டர்த்தருவ பந்தித்த கச்சடர்வ கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர் சங்கிப்பி முத்தணிவ பொங்கிக்க னத்தொளிர்வ ...... முலைமாதர் வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல் அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ னும்புட்கு ரற்பகர வம்புற்ற மற்புரிய வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள் கன்றிச்சி வக்கமகிழ் நன்றிச்ச மத்துநக ...... நுதிரேகை வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ் உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற்ற ணைத்தவதி செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல் உந்திப்பி றப்பறநி னைந்திட்ட முற்றுனடி வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர துன்றட்ட சிட்டகுண குன்றக்கு டிக்கதிப ...... அருளாதோ தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு சகணசக சகசகண செகணசெக செகசெகெண சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண தனனதன தனதனன தெனனதென தெனதெனன தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... யெனதாளந் தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில் தம்பட்ட மத்தளமி னம்பட்ட டக்கைபறை பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை மண்டைத்தி ரட்பருகு சண்டைத்தி ரட்கழுகு துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென வந்துற்றி டக்குடர்நி ணந்துற்றி சைத்ததிர ...... முதுபேய்கள் சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய் வெங்குக்கு டத்தகொடி துங்குக்கு குக்குகென வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல் மிண்டைக்கு லைத்தமர்செய் தண்டர்க்கு ரத்தையருள் ...... பெருமாளே. |
# 702 விலையறுக்கவும் (மாடம்பாக்கம்) |
தனன தத்தன தனன தத்தன தனந்தந் தந்த தந்தா தனன தத்தன தனன தத்தன தனந்தந் தந்த தந்தா தனன தத்தன தனன தத்தன தனந்தந் தந்த தந்தா ...... தனதனா தனனா |
விலைய றுக்கவு முலைம றைக்கவு மணந்துன் றுஞ்செ ழுந்தார் புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும் விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர் விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு நிணந்துன் றுஞ்ச லம்பா ...... யுதிரநீ ருடனே வெளியி னிற்கவும் வலிய முட்டரை யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை திரும்பும் பண்ப ரன்றே யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா யலின்மேல் கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு நயங்கொண் டங்கி ருந்தே குணுகி யிட்டுள பொருள்ப றித்தற முனிந்தங் கொன்று கண்டே கலக மிட்டவ ரகல டித்தபின் வரும்பங் கங்கு ணங்கோர் ...... புதியபே ருடனே கதைகள் செப்பவும் வலச மர்த்திகள் குணங்கண் டுந்து ளங்கா மனித னிற்சிறு பொழுது முற்றுற நினைந்துங் கண்டு கந்தே கடிம லர்ப்பத மணுகு தற்கறி விலன் பொங் கும்பெ ரும்பா ...... தகனையா ளுவையோ சிலைத னைக்கொடு மிகஅ டித்திட மனந்தந் தந்த ணந்தா மரைம லர்ப்பிர மனைந டுத்தலை யரிந்துங் கொண்டி ரந்தே திரிபு ரத்தெரி புகந கைத்தருள் சிவன்பங் கங்கி ருந்தா ...... ளருளுமா முருகா செருவி டத்தல கைகள்தெ னத்தென தெனந்தெந் தெந்தெ னந்தா எனஇ டக்கைகள் மணிக ணப்பறை டிகுண்டிங் குண்டி குண்டா டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு டிகுண்டிங் குண்டி குண்டீ ...... யெனஇரா வணனீள் மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு மிரண்டஞ் சொன்ப தொன்றேய் பணைபு யத்தையு மொருவ கைப்பட வெகுண்டம் பொன்றெ றிந்தோன் மதலை மைத்துன அசுர ரைக்குடல் திறந்தங் கம்பி ளந்தே ...... மயிலின்மேல் வருவாய் வயல்க ளிற்கய லினமி குத்தெழு வரம்பின் கண்பு ரண்டே பெருக யற்கொடு சொரியு நித்தில நிறைந்தெங் குஞ்சி றந்தே வரிசை பெற்றுயர் தமனி யப்பதி யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ...... இளையநா யகனே. |
# 858 அறுகுநுனி பனி (திருவிடைமருதூர்) |
தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா தனதனன தனதனன தனதனன தனதனன தான தானனா தான தானனா ...... தனதன தனதான |
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு ஆக மாகியோர் பால ரூபமாய் அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய ஆயி தாதையார் மாய மோகமாய் அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி ஆவி யாயவோர் தேவி மாருமாய் விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென வீடு வாசலாய் மாட கூடமாய் அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில் மேலை வீடுகேள் கீழை வீடுகேள் திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய் விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும் வீணர் சேவையே பூணு பாவியாய் மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு வார்கள் போகுவார் காணு மோஎனா விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில் வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில வாத மூதுகா மாலை சோகைநோய் பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில் மாதர் சீயெனா வாலர் சீயெனா கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு காடு வாவெனா வீடு போவெனா வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ ஏழை மாதராள் மோதி மேல்விழா எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற ஈமொ லேலெனா வாயை ஆவெனா இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும் ஏசி டார்களோ பாச நாசனே இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயு நானுமாய் இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில் ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே. |
# 902 இகல்கடின முகபடவி (வயலூர்) |
தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான |
இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத மத்தக்க ளிற்றையெதிர் புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை கட்டிப்பி ணித்திறுகி யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி முத்தத்தை யிட்டுநக ...... தந்தமான இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில் எற்றிக்க லக்கமுற இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது தொட்டுத்தி ரித்துமிக இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி செக்கச்சி வக்கவளை ...... செங்கைசோர அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல கொத்துக்கு ழற்குலைய மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர நெக்குக்க ருத்தழிய அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண வர்க்கத்தி னிற்புணரு ...... மின்பவேலை அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர கட்டுப்பொ றிச்சியர்கள் மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை யுற்றுத்து திக்கும்வகை அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில் ரக்ஷித்த ளித்தருள்வ ...... தெந்தநாளோ திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட செகணசெக சகணசக செக்கச் செகச்செகண சத்தச்ச கச்சகண திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுட தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை பக்கக்க ணப்பறைத ...... வண்டைபேரி வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை பக்கத்தி னிற்சரிய எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி விட்டத்த மித்ததென வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது தொக்குக்கு னிப்புவிட ...... வென்றவேலா வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி சித்ரப்ர சித்தமுறு அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி தத்வத்தி றச்சிகர வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி தப்பற்று ரைக்கவல ...... தம்பிரானே. |
# 917 விகட பரிமளம் (வயலூர்) |
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான |
விகட பரிமள ம்ருகமத இமசல வகிர படிரமு மளவிய களபமு மட்டித்தி தழ்த்தொடைமு டித்துத்தெ ருத்தலையில் உலவி யிளைஞர்கள் பொருளுட னுயிர்கவர் கலவி விதவிய னரிவையர் மருள்வலை யிட்டுத்து வக்கியிடர் பட்டுத் தியக்கியவர் விரவு நவமணி முகபட எதிர்பொரு புரண புளகித இளமுலை யுரமிசை தைக்கக்க ழுத்தொடுகை யொக்கப்பி ணித்திறுகி ...... யன்புகூர விபுத ரமுதென மதுவென அறுசுவை அபரி மிதமென இலவிதழ் முறைமுறை துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின் வரையு முறைசெய்து முனிவரு மனவலி கரையு மரிசன பரிசன ப்ரியவுடை தொட்டுக்கு லைத்துநுதல் பொட்டுப்ப டுத்திமதர் விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி கற்றிட்ட புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு ...... வுந்திமூழ்கிப் புகடு வெகுவித கரணமு மருவிய வகையின் முகிலென இருளென வனமென ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை குமுத பதிகலை குறைகலை நிறைகலை சித்தத்த ழுத்தியநு வர்க்கத்து ருக்கியொரு பொழுதும் விடலரி தெனுமநு பவமவை முழுது மொழிவற மருவிய கலவியி தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் ...... நைந்துசோரப் புணரு மிதுசிறு சுகமென இகபரம் உணரு மறிவிலி ப்ரைமைதரு திரிமலம் அற்றுக்க ருத்தொருமை யுற்றுப்பு லத்தலையில் மறுகு பொறிகழல் நிறுவியெ சிறிதுமெய் உணர்வு முணர்வுற வழுவற வொருஜக வித்தைக்கு ணத்ரயமும் நிர்த்தத்து வைத்துமறை புகலு மநுபவ வடிவினை யளவறு அகில வெளியையு மொளியையு மறிசிவ தத்வப்ர சித்திதனை முத்திச்சி வக்கடலை ...... யென்றுசேர்வேன் திகுட திகுகுட திகுகுட திகுகுட தகுட தகுகுட தகுகுட தகுகுட திக்குத்தி குத்திகுட தக்குத்த குத்தகுட டுமிட டுமிமிட டுமிமிட டுமிமிட டமட டமமட டமமட டமமட டுட்டுட்டு டுட்டுமிட டட்டட்ட டட்டமட திகுர்தி திகுதிகு திகுகுர்தி திகுகுர்தி தகுர்தி தகுதகு தகுகுர்தி தகுகுர்தி திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி ...... என்றுபேரி திமிலை கரடிகை பதலைச லரிதவில் தமர முரசுகள் குடமுழ வொடுதுடி சத்தக்க ணப்பறைகள் மெத்தத்தொ னித்ததிர அசுரர் குலஅரி அமரர்கள் ஜயபதி குசல பசுபதி குருவென விருதுகள் ஒத்தத்தி ரட்பலவு முற்றிக்க லிக்கஎழு சிகர கொடுமுடி கிடுகிடு கிடுவென மகர சலநிதி மொகுமொகு மொகுவென எட்டுத்தி சைக்களிறு மட்டற்ற றப்பிளிற ...... நின்றசேடன் மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென அகில புவனமும் ஹரஹர ஹரவென நக்ஷத்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண நிருதர் தலையற வடிவெனு மலைசொரி குருதி யருவியின் முழுகிய கழுகுகள் பக்கப்ப ழுத்தவுடல் செக்கச்சி வத்துவிட வயிறு சரிகுடல் நரிதின நிணமவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் பக்ஷித்து நிர்த்தமிட ரக்ஷித்த லைப்பரவி ...... யும்பர்வாழ மடிய அவுணர்கள் குரகத கஜரத கடக முடைபட வெடிபட எழுகிரி அற்றுப்ப றக்கவெகு திக்குப்ப டித்துநவ நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற அமர்செய் தயில்கையில் வெயிலெழ மயில்மிசை அக்குக்கு டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன் வயலி நகருறை சரவண பவகுக இயலு மிசைகளு நடனமும் வகைவகை சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள் ...... தம்பிரானே. |