சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

7.002   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு

திருப்பரங்குன்றம் - இந்தளம் லதாங்கி மாயாமாளவகெளளை கீதப்ரியா ராகத்தில் திருமுறை அருள்தரு ஆவுடைநாயகியம்மை உடனுறை அருள்மிகு பரங்கிரிநாதர் திருவடிகள் போற்றி
நம்பியாரூரர் பாண்டி நாட்டிலுள்ள திருவாலவாய் முதலிய தலங்களை வழிபட எண்ணிச் சேரர்கோனுடன் புறப்பட்டார். திரு மறைக்காடு, அகத்தியான்பள்ளி, கோடிக்குழகர் முதலிய தலங்களைப் பணிந்து பாண்டிநாடடைந்து திருப்புத்தூரை வழிபட்டு மதுரையை அடைந்தார்கள். அப்பொழுது பாண்டியனும், பாண்டியன் மகளை மணம் புரிந்து வேட்டகத்திலிருந்த சோழனும் சுந்தரரையும் சேரமான் பெரு மாளையும் வரவேற்றுத் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். சுந்தரர் திருப்பதிகம் பாடிப் போற்றினார். சேரமான் தமக்குத் திருமுகமனுப்பிய ஆலவாயண்ணலை வழிபட்டார். பாண்டியன் இவ்விருவரையும் தம் அரண்மனைக்கு அழைத்து உபசரித்தான். இருவரும் சிலநாள் தங்கி ஆலவாயண்ணலை வழிபட்டினி துறைந்தனர். சுந்தரர் மூவேந்தருடன் திருப்பூவணம், திருவாப்பனூர், திருவேடகம் முதலிய தலங்களையிறைஞ்சித் திருப்பரங்குன்றத்தை யடைந்து திருப்பதிகம் பாடிப் பரவினார்.
https://www.youtube.com/watch?v=9hNg6XWc08I   Add audio link Add Audio
கோத்திட்டையுங் கோவலுங் கோயில்கொண்டீர்
உமைக்கொண்டுழல் கின்றதோர் கொல்லைச்சில்லைச்
சேத்திட்டுக்குத் தித்தெரு வேதிரியுஞ்
சிலபூதமும் நீரும் திசைதிசையன
சோத்திட்டுவிண் ணோர்பல ருந்தொழநும்
மரைக்கோவணத் தோடொரு தோல்புடைசூழ்ந்
தார்த்திட்டதும் பாம்புகைக் கொண்டதும்பாம்
படிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.


1


முண்டந்தரித் தீர்முது காடுறைவீர்
முழுநீறுமெய் பூசுதிர் மூக்கப்பாம்பைக்
கண்டத்திலுந் தோளிலுங் கட்டிவைத்தீர்
கடலைக்கடைந் திட்டதோர் நஞ்சையுண்டீர்
பிண்டஞ்சுமந் தும்மொடுங் கூடமாட்டோம்
பெரியாரொடு நட்பினி தென்றிருத்தும்
அண்டங்கடந் தப்புறத்தும் மிருந்தீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.


2


மூடாய முயலகன் மூக்கப்பாம்பு
முடைநாறிய வெண்டலை மொய்த்தபல்பேய்
பாடாவரு பூதங்கள் பாய்புலித்தோல்
பரிசொன்றறி யாதன பாரிடங்கள்
தோடார்மலர்க் கொன்றையும் துன்னெருக்குந்
துணைமாமணி நாகம் அரைக்கசைத்தொன்
றாடாதன வேசெய்தீர் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.


3


மஞ்சுண்டமா லைமதி சூடுசென்னி
மலையான்மடந் தைமண வாளநம்பி
பஞ்சுண்டவல் குற்பணை மென்முலையா
ளொடுநீருமொன் றாயிருத் தல்லொழியீர்
நஞ்சுண்டுதே வர்க்கமு தங்கொடுத்த
நலமொன்றறி யோம்உங்கை நாகமதற்
கஞ்சுண்டுப டம்மது போகவிடீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.


4


பொல்லாப்புறங் காட்டகத் தாட்டொழியீர்
புலால்வாயன பேயொடு பூச்சொழியீர்
எல்லாம்அறி வீர்இது வேயறியீர்
என்றிரங்குவேன் எல்லியும் நண்பகலும்
கல்லால்நிழற் கீழொரு நாட்கண்டதுங்
கடம்பூர்க்கரக் கோயிலின் முன்கண்டதும்
அல்லால்விர கொன்றிலம் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.


5


Go to top
தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்
சில்பூதமும் நீருந் திசைதிசையன
பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்
படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.


6


சிங்கத்துரி மூடுதிர் தேவர்கணந்
தொழநிற்றீர்பெற் றமுகந் தேறிடுதிர்
பங்கம்பல பேசிடப் பாடுந்தொண்டர்
தமைப்பற்றிக்கொண் டாண்டு விடவுங்கில்லீர்
கங்கைச்சடை யீர்உம் கருத்தறியோம்
கண்ணுமூன்றுடை யீர்கண்ணே யாய்இருந்தால்
அங்கத்துறு நோய்களைந் தாளகில்லீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.


7


பிணிவண்ணத்த வல்வினை தீர்த்தருளீர்
பெருங்காட்டகத் திற்பெரும் பேயும்நீரும்
துணிவண்ணத்தின் மேலும்ஓர் தோலுடுத்துச்
சுற்றுநாகத்த ராய்ச்சுண்ண நீறுபூசி
மணிவண்ணத்தின் மேலும்ஓர் வண்ணத்தராய்
மற்றும்மற்றும் பலபல வண்ணத்தராய்
அணிவண்ணத்த ராய்நிற்றீர் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.


8


கோளாளிய குஞ்சரங் கோளிழைத்தீர்
மலையின்தலை யல்லது கோயில்கொள்ளீர்
வேளாளிய காமனை வெந்தழிய
விழித்தீர்அது வன்றியும் வேய்புரையும்
தோளாள்உமை நங்கையொர் பங்குடையீர்
உடுகூறையுஞ் சோறுந்தந் தாளகில்லீர்
ஆளாளிய வேகிற்றீர் எம்பெருமான்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.


9


பாரோடுவிண் ணும்பக லுமாகிப்
பனிமால்வரை யாகிப் பரவையாகி
நீரோடுதீ யுந்நெடுங் காற்றுமாகி
நெடுவெள்ளிடை யாகி நிலனுமாகித்
தேரோட வரையெடுத் தவரக்கன்
சிரம்பத்திறுத் தீரும செய்கையெல்லாம்
ஆரோடுங்கூ டாஅடி கேள்இதுஎன்
அடியோம்உமக் காட்செய அஞ்சுதுமே.


10


Go to top
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமென்
றமரர்பெரு மானையா ரூரன்அஞ்சி
முடியால்உல காண்டமூ வேந்தர்முன்னே
மொழிந்தாறுமோர் நான்குமோ ரொன்றினையும்
படியாஇவை கற்றுவல் லவடியார்
பரங்குன்றமே யபர மன்னடிக்கே
குடியாகிவா னோர்க்கும்ஓர் கோவுமாகிக்
குலவேந்தராய் விண்முழு தாள்பவரே.


11



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருப்பரங்குன்றம்
1.100   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   நீடு அலர் சோதி வெண்பிறையோடு
Tune - குறிஞ்சி   (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)
7.002   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   கோத்திட்டையும் கோவலும் கோவில் கொண்டீர்;
Tune - இந்தளம்   (திருப்பரங்குன்றம் பரங்கிரிநாதர் ஆவுடைநாயகியம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 7.002