கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை விண்ணவர்கோன் செய்யினி னீல மணங்கம ழுந்திரு வேதிகுடி ஐயனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.
|
1
|
கைத்தலை மான்மறி யேந்திய கையன் கனன்மழுவன் பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து பலிதிரிவான் செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு வேதிகுடி அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.
|
2
|
முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை வினைகழித்தான் அன்பி னிலையி லவுணர் புரம்பொடி யானசெய்யும் செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி அன்பனை நம்மை யுடையனை நாமடைந் தாடுதுமே.
|
3
|
பத்தர்க ணாளு மறவார் பிறவியை யொன்றறுப்பான் முத்தர்கண் முன்னம் பணிசெய்து பாரிட முன்னுயர்த்தான் கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு வேதிகுடி அத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.
|
4
|
ஆனணைந் தேறுங் குறிகுண மாரறி வாரவர்கை மானணைந் தாடு மதியும் புனலுஞ் சடைமுடியன் தேனணைந் தாடிய வண்டு பயிறிரு வேதிகுடி ஆனணைந் தாடு மழுவனை நாமடைந் தாடுதுமே.
|
5
|
Go to top |
எண்ணு மெழுத்துங் குறியு மறிபவர் தாமொழியப் பண்ணி னிசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு வேதிகுடி நண்ண வரிய வமுதினை நாமடைந் தாடுதுமே.
|
6
|
ஊர்ந்தவிடை யுகந் தேறிய செல்வனை நாமறியோம் ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக மகிழ்ந்துடையான் சேர்ந்த புனற்சடைச் செல்வப்பிரான்றிரு வேதிகுடிச் சார்ந்த வயலணி தண்ணமு தையடைந் தாடுதுமே.
|
7
|
எரியு மழுவின னெண்ணியு மற்றொரு வன்றலையுள் திரியும் பலியினன் றேயமும் நாடுமெல் லாமுடையான் விரியும் பொழிலணி சேறுதிகழ்திரு வேதிகுடி அரிய வமுதினை யன்பர்க ளோடடைந் தாடுதுமே.
|
8
|
மையணி கண்டன் மறைவிரி நாவன் மதித்துகந்த மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு வாட்படையான் செய்ய கமல மணங்கம ழுந்திரு வேதிகுடி ஐயனை யாராவமுதினை நாமடைந் தாடுதுமே.
|
9
|
வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பத்திறுத்த பொருத்தனைப் பொய்யா வருளனைப் பூதப் படையுடைய திருத்தனைத் தேவர்பி ரான்றிரு வேதி குடியுடைய அருத்தனை யாரா வமுதினை நாமடைந் தாடுதுமே.
|
10
|
Go to top |