![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
Easy version Classic version
https://www.youtube.com/watch?v=MZTHaYJyPyE Add audio link
4.079
திருநாவுக்கரசர்
தேவாரம்
பொது -குறைந்த நேரிசை - திருநேரிசை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
தம்மானங் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்து
அம்மானை யமுதன் றன்னை யாதியை யந்த மாய
செம்மான வொளிகொண் மேனிச் சிந்தையு ளொன்றி நின்ற
எம்மானை நினைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.
1
மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்பும்
சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்
கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும்
இக்களே பரத்தை யோம்ப வென்செய்வான் றோன்றி னேனே.
2
கூழையே னாக மாட்டேன் கொடுவினைக் குழியில் வீழ்ந்து
ஏழினின் னிசையி னாலு மிறைவனை யேத்த மாட்டேன்
மாழையொண் கண்ணி னல்ல மடந்தைமார் தமக்கும் பொல்லேன்
ஏழையே னாகி நாளு மென்செய்வான் றோன்றி னேனே.
3
முன்னையென் வினையி னாலே மூர்த்தியை நினைய மாட்டேன்
பின்னைநான் பித்த னாகிப் பிதற்றுவன் பேதை யேனான்
என்னுளே மன்னி நின்ற சீர்மைய தாயி னானை
என்னுளே நினைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.
4
கறையணி கண்டன் றன்னைக் காமரங் கற்று மில்லேன்
பிறைநுதற் பேதை மாதர் பெய்வளை யார்க்கு மல்லேன்
மறைநவி னாவி னானை மன்னிநின் றிறைஞ்சி நாளும்
இறையேயு மேத்த மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.
5
Go to top
வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத்
தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன்
இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.
6
Thevaaram Link
- Shaivam Link
Other song(s) from this location: பொது -குறைந்த நேரிசை
4.078
திருநாவுக்கரசர்
தேவாரம்
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்
Tune - திருநேரிசை
(பொது -குறைந்த நேரிசை )
4.079
திருநாவுக்கரசர்
தேவாரம்
தம் மானம் காப்பது ஆகித்
Tune - திருநேரிசை
(பொது -குறைந்த நேரிசை )
This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000