சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.078   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -குறைந்த நேரிசை - திருநேரிசை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=0q7NJVbvNjk   Add audio link Add Audio
வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள்
சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன்
நின்றுளே துளும்பு கின்றே னீசனே னீச னேயோ
இன்றுளே னாளை யில்லே னென்செய்வான் றோன்றி னேனே.


1


கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும்
உற்றிலே னாத லாலே யுணர்வுக்குஞ் சேய னானேன்
பெற்றிலேன் பெருந்த டங்கட் பேதைமார் தமக்கும் பொல்லேன்
எற்றுளே னிறைவ னேநா னென்செய்வான் றோன்றி னேனே.


2


மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை யுணர மாட்டேன்
மூட்டிநான் முன்னை நாளே முதல்வனே வணங்க மாட்டேன்
பாட்டினாய் போல நின்று பற்றதாம் பாவந் தன்னை
ஈட்டினேன் களைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.


3


கரைக்கடந் தோத மேறுங் கடல்விட முண்ட கண்டன்
உரைக்கடந் தோது நீர்மை யுணர்ந்திலே னாத லாலே
அரைக்கிடந் தசையு நாக மசைப்பனே யின்ப வாழ்க்கைக்
கிரைக்கடைந் துருகு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.


4


செம்மைவெண் ணீறு பூசுஞ் சிவனவன் றேவ தேவன்
வெம்மைநோய் வினைக டீர்க்கும் விகிர்தனுக் கார்வ மெய்தி
அம்மைநின் றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக்
கிம்மைநின் றுருகு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.


5


Go to top
பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக்
கூச்சிலே னாத லாலே கொடுமையை விடுமா றோரேன்
நாச்சொலி நாளு மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன்
ஏச்சுளே நின்று மெய்யே யென்செய்வான் றோன்றி னேனே.


6


தேசனைத் தேச மாகுந் திருமாலோர் பங்கன் றன்னைப்
பூசனைப் புனிதன் றன்னைப் புணரும்புண் டரிகத் தானை
நேசனை நெருப்பன் றன்னை நிவஞ்சகத் தகன்ற செம்மை
ஈசனை யறிய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.


7


விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும்
முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலே னியல வெள்ளம்
திளைக்கின்ற முடியி னான் தன்றிருவடி பரவ மாட்டா
திளைக்கின்றே னிருமி யூன்றி யென்செய்வான் றோன்றி னேனே.


8


விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியி லாழ்ந்து
களைகணு மில்லே னெந்தாய் காமரங் கற்று மில்லேன்
தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த
இளையனு மல்லே னெந்தா யென்செய்வான் றோன்றி னேனே.


9


வெட்டன வுடைய னாகி வீரத்தான் மலையெ டுத்த
துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதங் கேட்ட
அட்டமா மூர்த்தி யாய வாதியை யோதி நாளும்
எட்டனை யெட்ட மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.


10


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -குறைந்த நேரிசை
4.078   திருநாவுக்கரசர்   தேவாரம்   வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்
Tune - திருநேரிசை   (பொது -குறைந்த நேரிசை )
4.079   திருநாவுக்கரசர்   தேவாரம்   தம் மானம் காப்பது ஆகித்
Tune - திருநேரிசை   (பொது -குறைந்த நேரிசை )

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal orig pathigam no 4.078