வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள் சென்றிலே னாத லாலே செந்நெறி யதற்குஞ் சேயேன் நின்றுளே துளும்பு கின்றே னீசனே னீச னேயோ இன்றுளே னாளை யில்லே னென்செய்வான் றோன்றி னேனே.
|
1
|
கற்றிலேன் கலைகள் ஞானங் கற்றவர் தங்க ளோடும் உற்றிலே னாத லாலே யுணர்வுக்குஞ் சேய னானேன் பெற்றிலேன் பெருந்த டங்கட் பேதைமார் தமக்கும் பொல்லேன் எற்றுளே னிறைவ னேநா னென்செய்வான் றோன்றி னேனே.
|
2
|
மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை யுணர மாட்டேன் மூட்டிநான் முன்னை நாளே முதல்வனே வணங்க மாட்டேன் பாட்டினாய் போல நின்று பற்றதாம் பாவந் தன்னை ஈட்டினேன் களைய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.
|
3
|
கரைக்கடந் தோத மேறுங் கடல்விட முண்ட கண்டன் உரைக்கடந் தோது நீர்மை யுணர்ந்திலே னாத லாலே அரைக்கிடந் தசையு நாக மசைப்பனே யின்ப வாழ்க்கைக் கிரைக்கடைந் துருகு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.
|
4
|
செம்மைவெண் ணீறு பூசுஞ் சிவனவன் றேவ தேவன் வெம்மைநோய் வினைக டீர்க்கும் விகிர்தனுக் கார்வ மெய்தி அம்மைநின் றடிமை செய்யா வடிவிலா முடிவில் வாழ்க்கைக் கிம்மைநின் றுருகு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே.
|
5
|
Go to top |
பேச்சொடு பேச்சுக் கெல்லாம் பிறர்தமைப் புறமே பேசக் கூச்சிலே னாத லாலே கொடுமையை விடுமா றோரேன் நாச்சொலி நாளு மூர்த்தி நன்மையை யுணர மாட்டேன் ஏச்சுளே நின்று மெய்யே யென்செய்வான் றோன்றி னேனே.
|
6
|
தேசனைத் தேச மாகுந் திருமாலோர் பங்கன் றன்னைப் பூசனைப் புனிதன் றன்னைப் புணரும்புண் டரிகத் தானை நேசனை நெருப்பன் றன்னை நிவஞ்சகத் தகன்ற செம்மை ஈசனை யறிய மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.
|
7
|
விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலே னியல வெள்ளம் திளைக்கின்ற முடியி னான் தன்றிருவடி பரவ மாட்டா திளைக்கின்றே னிருமி யூன்றி யென்செய்வான் றோன்றி னேனே.
|
8
|
விளைவறி விலாமை யாலே வேதனைக் குழியி லாழ்ந்து களைகணு மில்லே னெந்தாய் காமரங் கற்று மில்லேன் தளையவிழ் கோதை நல்லார் தங்களோ டின்ப மெய்த இளையனு மல்லே னெந்தா யென்செய்வான் றோன்றி னேனே.
|
9
|
வெட்டன வுடைய னாகி வீரத்தான் மலையெ டுத்த துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதங் கேட்ட அட்டமா மூர்த்தி யாய வாதியை யோதி நாளும் எட்டனை யெட்ட மாட்டே னென்செய்வான் றோன்றி னேனே.
|
10
|
Go to top |