சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

4.014   திருநாவுக்கரசர்   தேவாரம்

பொது -தசபுராணம் - பழம்பஞ்சுரம் யாகப்பிரியா சங்கராபரணம் கலஹம்சா ராகத்தில் திருமுறை அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி
+ Show Meaning  https://www.youtube.com/watch?v=Y5yd2BE7cIw   Add audio link Add Audio

பருவரை யொன்றுசுற்றி யரவங்கைவிட்ட விமையோரிரிந்து பயமாய்த்
திருநெடு மானிறத்தை யடுவான்விசும்பு சுடுவானெழுந்து விசைபோய்ப்
பெருகிட மற்றிதற்கொர் பிதிகாரமொன்றை யருளாய்பிரானே யெனலும்
அருள்கொடு மாவிடத்தை யெரியாமலுண்ட வவனண்டரண்ட ரரசே.

1

நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்டமூட நிலநின்றுதம்ப மதுவப்
பரமொரு தெய்வமெய்த விதுவொப்பதில்லை யிருபாலுநின்று பணியப்
பிரமனு மாலுமேலை முடியோடுபாத மறியாமைநின்ற பெரியோன்
பரமுத லாயதேவர் சிவனாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே.

2

காலமு நாள்களூழி படையாமுனேக வுருவாகிமூவ ருருவில்
சாலவு மாகிமிக்க சமயங்களாறி னுருவாகிநின்ற தழலோன்
ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழுமுண்டு குறளாயொராலி னிலைமேல்
பாலனு மாயவற்கொர் பரமாயமூர்த்தி யவனாநமக்கொர் சரணே.

3

நீடுயர் விண்ணுமண்ணு நெடுவேலைகுன்றொ டுலகேழுமெங்கு நலியச்
சூடிய கையராகி யிமையோர்கணங்கள் துதியோதிநின்று தொழலும்
ஓடிய தாரகன்ற னுடலம்பிளந்தும் ஒழியாதகோப மொழிய
ஆடிய மாநடத்தெ மனலாடிபாத மவையாநமக்கொர் சரணே.

4

நிலைவலி யின்றியெங்கு நிலனோடுவிண்ணு நிதனஞ்செய்தோடு புரமூன்
றலைநலி வஞ்சியோடி யரியோடுதேவ ரரணம்புகத்த னருளால்
கொலைநலி வாளிமூள வரவங்கைநாணு மனல்பாயநீறு புரமா
மலைசிலை கையிலொல்க வளைவித்தவள்ள லவனாநமக்கொர் சரணே.

5
Go to top

நீலநன் மேனிசெங்கண் வளைவெள்ளெயிற்ற னெரிகேச னேடிவருநாள்
காலைநன் மாலைகொண்டு வழிபாடுசெய்யு மளவின்கண்வந்து குறுகிப்
பாலனை யோடவோடப் பயமெய்துவித்த வுயிர்வவ்வுபாசம் விடுமக்
காலனை வீடுசெய்த கழல்போலுமண்டர் தொழுதோதுசூடு கழலே.

6

உயர்தவ மிக்கதக்க னுயர்வேள்விதன்னி லவியுண்ணவந்த விமையோர்
பயமுறு மெச்சனங்கி மதியோனுமுற்ற படிகண்டுநின்று பயமாய்
அயனொடு மாலுமெங்க ளறியாமையாதி கமியென்றிறைஞ்சி யகலச்
சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணனெந்தை கழல்கண்டுகொள்கை கடனே.

7

நலமலி மங்கைநங்கை விளையாடியோடி நயனத்தலங்கள் கரமா
உலகினை யேழுமுற்று மிருண்மூடமூட விருளோடநெற்றி யொருகண்
அலர்தர வஞ்சிமற்றை நயனங்கைவிட்டு மடவாளிறைஞ்ச மதிபோல்
அலர்தரு சோதிபோல வலர்வித்தமுக்க ணவனாநமக்கொர் சரணே.

8

கழைபடு காடுதென்றல் குயில்கூவவஞ்சு கணையோனணைந்து புகலும்
மழைவடி வண்ணனெண்ணி மகவோனைவிட்ட மலரானதொட்ட மதனன்
எழில்பொடி வெந்துவீழ விமையோர்கணங்க ளெரியென்றிறைஞ்சி யகலத்
தழல்படு நெற்றியொற்றை நயனஞ்சிவந்த தழல்வண்ணனெந்தை சரணே.

9

தடமல ராயிரங்கள் குறைவொன்றதாக நிறைவென்றுதன்க ணதனால்
உடன்வழி பாடுசெய்த திருமாலையெந்தை பெருமானுகந்து மிகவும்
சுடரடி யான்முயன்று சுழல்வித்தரக்க னிதயம்பிளந்த கொடுமை
அடல்வலி யாழியாழி யவனுக்களித்த வவனாநமக்கொர் சரணே.

10
Go to top

கடுகிய தேர்செலாது கயிலாயமீது கருதேலுன்வீர மொழிநீ
முடுகுவ தன்றுதன்ம மெனநின்றுபாகன் மொழிவானைநன்று முனியா
விடுவிடு வென்றுசென்று விரைவுற்றரக்கன் வரையுற்றெடுக்க முடிதோள்
நெடுநெடு விற்றுவீழ விரலுற்றபாத நினைவுற்றதென்றன் மனனே.

11

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: பொது -தசபுராணம்
4.014   திருநாவுக்கரசர்   தேவாரம்   பருவரை ஒன்று சுற்றி அரவம்
Tune - பழம்பஞ்சுரம்   (பொது -தசபுராணம் )
     
send corrections and suggestions to admin-at-sivaya.org

This page was last modified on Tue, 27 Jan 2026 00:59:47 +0000