வினவினேனறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர் கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன் தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான் வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே.
|
1
|
உள்ளவாறெனக் குரைசெய்மின்னுயர் வாயமாதவம் பேணுவீர் கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை காதலான் பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை வைத்ததும்பெரு நீரொலி வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு மங்கையா ளுடனாகவே.
|
2
|
அடியராயினீர் சொல்லுமின்அறி கின்றிலேன்அரன் செய்கையைப் படியெலாந்தொழு தேத்துகண்டியூர் வீரட்டத்துறை பான்மையான் முடிவுமாய்முத லாய்இவ்வைய முழுதுமாய்அழ காயதோர் பொடியதார்திரு மார்பினிற்புரி நூலும்பூண்டெழு பொற்பதே.
|
3
|
பழையதொண்டர்கள் பகருமின்பல வாயவேதியன் பான்மையைக் கழையுலாம்புனல் மல்குகாவிரி மன்னுகண்டியூர் வீரட்டன் குழையொர்காதினிற் பெய்துகந்தொரு குன்றின்மங்கை வெருவுறப் புழைநெடுங்கைநன் மாவுரித்தது போர்த்துகந்த பொலிவதே.
|
4
|
விரவிலாதுமைக் கேட்கின்றேன்அடி விரும்பியாட்செய்வீர் விளம்புமின் கரையெலாந்திரை மண்டுகாவிரிக் கண்டியூருறை வீரட்டன் முரவமொந்தை முழாவொலிக்க முழங்குபேயொடுங் கூடிப்போய்ப் பரவுவானவர்க் காகவார்கடல் நஞ்சமுண்ட பரிசதே.
|
5
|
Go to top |
இயலுமாறெனக் கியம்புமின்னிறை வன்னுமாய்நிறை செய்கையைக் கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி கண்டியூருறை வீரட்டன் புயல்பொழிந்திழி வானுளோர்களுக் காகஅன்றயன் பொய்ச்சிரம் அயனகவ்வ தரிந்துமற்றதில் ஊணுகந்த வருத்தியே.
|
6
|
திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச் செல்வன்றன்னது திறமெலாம் கருந்தடங்கண்ணி னார்கடாந்தொழு கண்டியூருறை வீரட்டன் இருந்துநால்வரொ டானிழல்லற முரைத்ததும்மிகு வெம்மையார் வருந்தவன்சிலை யாலம்மாமதின் மூன்றுமாட்டிய வண்ணமே.
|
7
|
நாவிரித்தரன் றொல்புகழ்பல பேணுவீரிறை நல்குமின் காவிரித்தடம் புனல்செய்கண்டியூர் வீரட்டத்துறை கண்ணுதல் கோவிரிப்பய னானஞ்சாடிய கொள்கையுங்கொடி வரைபெற மாவரைத்தலத் தாலரக்கனை வலியைவாட்டிய மாண்பதே.
|
8
|
பெருமையேசர ணாகவாழ்வுறு மாந்தர்காளிறை பேசுமின் கருமையார்பொழில் சூழுந்தண்வயற் கண்டியூருறை வீரட்டன் ஒருமையாலுயர் மாலுமற்றை மலரவன்உணர்ந் தேத்தவே அருமையாலவ ருக்குயர்ந்தெரி யாகிநின்றவத் தன்மையே.
|
9
|
நமரெழுபிறப் பறுக்குமாந்தர்காள் நவிலுமின்உமைக் கேட்கின்றேன் கமரழிவயல் சூழுந்தண்புனற் கண்டியூருறை வீரட்டன் தமரழிந்தெழு சாக்கியச்சமண் ஆதரோது மதுகொளா தமரரானவ ரேத்தவந்தகன் தன்னைச்சூலத்தில் ஆய்ந்ததே.
|
10
|
Go to top |
கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை திருத்தமாந்திகழ் காழிஞானசம் பந்தன்செப்பிய செந்தமிழ் ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே.
|
11
|