திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவிபாகம் பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்தசெல்வர் இருந்த விடம்வினவி லேலங்கமழ் சோலையின வண்டியாழ்செய் குருந்த மணநாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.
|
1
|
நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பானம்மை ஆட்பலவுந் தானுடைய வம்மா னிடம்போலும் அந்தண்சாரல் கீட்பலவுங் கீண்டுகிளை கிளையன் மந்திபாய்ந் துண்டுவிண்ட கோட்பலவின் றீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்பலாவே.
|
2
|
வாடற் றலைமாலை சூடிப் புலித்தோல் வலித்துவீக்கி ஆட லரவசைத்த வம்மா னிடம்போலும் அந்தண்சாரல் பாடற் பெடைவண்டு போதலர்த்தத் தாதவிழ்ந்து பசும்பொனுந்திக் கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.
|
3
|
பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடியாடிக் கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ்வெற்பில் நீல மலர்க்குவளை கண்டிறக்க வண்டரற்றும் நெடுந்தண்சாரல் கோல மடமஞ்ஞை பேடையொ டாட்டயருங் குறும்பலாவே.
|
4
|
தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித்தேவி முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய்சூழ்ந்த மலைவா யசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்குசாரல் குலைவாழைத் தீங்கனியு மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்பலாவே.
|
5
|
Go to top |
நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக்கண்ணர் கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ்வெற்பில் ஏற்றேன மேன மிவையோ டவைவிரவி யிழிபூஞ்சாரற் கோற்றே னிசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்பலாவே.
|
6
|
பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ்சூடிப் பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந்தாங்கி மன்றத்து மண்முழவ மோங்கி மணிகொழித்து வயிரமுந்திக் குன்றத் தருவி யயலே புனறதும்புங் குறும்பலாவே.
|
7
|
ஏந்து திணிதிண்டோ ளிராவணனை மால்வரைக்கீழ் அடரவூன்றிச் சாந்தமென நீறணிந்த சைவ ரிடம்போலுஞ் சாரற்சாரல் பூந்தணறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலியவேந்திக் கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்பலாவே.
|
8
|
அரவி னணையானு நான்முகனுங் காண்பரிய அண்ணல்சென்னி விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ்சாரல் மரவ மிருகரையு மல்லிகையுஞ் சண்பகமு மலர்ந்துமாந்தக் குரவ முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்பலாவே.
|
9
|
மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூறுண்டு காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ்வெற்பில் நீடுயர் வேய்குனியப் பாய்கடுவ னீள்கழைமேல் நிருத்தஞ்செய்யக் கூடிய வேடுவர்கள் குய்விளியாக் கைமறிக்குங் குறும்பலாவே.
|
10
|
Go to top |
கொம்பார் பூஞ்சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற்றண்ணல் நம்பா னடிபரவு நான்மறையான் ஞானசம் பந்தன்சொன்ன இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக்கேட்பார் தம்பால தீவினைகள் போயகல நல்வினைகள் தளராவன்றே.
|
11
|