கலைவாழு மங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல் அலைவாழுஞ் செஞ்சடையி லரவும்பிறையு மமர்வித்தீர் குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில் நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.
|
1
|
அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப வங்கையில் செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர் குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயில் படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.
|
2
|
கழலார்பூம் பாதத்தீ ரோதக்கடலில் விடமுண்டன் றழலாருங் கண்டத்தீ ரண்டர்போற்று மளவினீர் குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில் நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
|
3
|
மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந் தெறியாரு மாமழுவு மெரியுமேந்துங் கொள்கையீர் குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில் நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
|
4
|
இழையார்ந்த கோவணமுங் கீளுமெழிலா ருடையாகப் பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர் குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில் விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.
|
5
|
Go to top |
அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர் இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர் குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயில் திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
|
6
|
பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர் ஆடலார் மாநடத்தீ ரரிவைபோற்று மாற்றலீர் கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில் நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
|
7
|
கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும் அங்காந்து தள்ளாட வழலாய் நிமிர்ந்தீ ரிலங்கைக்கோன் தங்காதன் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில் பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.
|
8
|
தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும் ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொண்மாடக் குடவாயில் ஆசாரஞ் செய்மறையோ ரளவிற்குன்றா தடிபோற்றத் தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
|
10
|
Go to top |
நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன் குளிர்பூங் குடவாயிற் கோயின்மேய கோமானை ஒளிர்பூந் தமிழ்மாலை யுரைத்தபாட லிவைவல்லார் தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.
|
11
|