சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர் கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார் வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.
|
1
|
பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி ஏலுஞ் சுடுநீறு மென்பு மொளிமல்கக் கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம் ஆலும் வடுகூரி லாடும் மடிகளே.
|
2
|
சூடு மிளந்திங்கட் சுடர்பொற் சடைதன்மேல் ஓடுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு பாடும் வடுகூரி லாடும் மடிகளே.
|
3
|
துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம் கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார் கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார் பவரும் வடுகூரி லாடும் மடிகளே.
|
4
|
துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல் தணியா வழனாகந் தரியா வகைவைத்தார் பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த அணியார் வடுகூரி லாடும் மடிகளே.
|
5
|
Go to top |
தளருங் கொடியன்னா டன்னோ டுடனாகிக் கிளரு மரவார்த்துக் கிளரு முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட ஒளிரும் வடுகூரி லாடும் மடிகளே
|
6
|
நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும் முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார் கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட அடியர் வடுகூரி லாடும் மடிகளே.
|
7
|
பிறையு நெடுநீரும் பிரியா முடியினார் மறையும் பலபாடி மயானத் துறைவாரும் பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங் கறையும் வடுகூரி லாடும் மடிகளே.
|
8
|
சந்தம் மலர்வேய்ந்த சடையின் னிடைவிம்மு கந்தம் மிகுதிங்கட் சிந்து கதிர்மாலை வந்து நயந்தெம்மை நன்று மருள்செய்வார் அந்தண் வடுகூரி லாடும் மடிகளே.
|
9
|
திருமா லடிவீழத் திசைநான் முகனாய பெருமா னுணர்கில்லாப்பெருமா னெடுமுடிசேர் செருமால் விடையூருஞ் செம்மான் றிசைவில்லா அருமா வடுகூரி லாடும் மடிகளே.
|
10
|
Go to top |
படிநோன் பவையாவர் பழியில் புகழான கடிநா ணிகழ் சோலை கமழும் வடுகூரைப் படியா னசிந்தை மொழியார் சம்பந்தன் அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.
|
11
|