சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
Easy version Classic version

6.040   திருநாவுக்கரசர்   தேவாரம்

திருமழபாடி - திருத்தாண்டகம் அருள்தரு அழகாம்பிகையம்மை உடனுறை அருள்மிகு வச்சிரத்தம்பேசுவரர் திருவடிகள் போற்றி
https://www.youtube.com/watch?v=s6naaNXL7j0   Add audio link Add Audio
அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு, அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன்
சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத்   திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்;
நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற
மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.


1


அறை கலந்த குழல், மொந்தை, வீணை, யாழும், அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த,
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆளக் கொடுத்தி அன்றே!
கறை கலந்த பொழில் கச்சிக் கம்பம் மேய கன   வயிரத் திரள் தூணே! கலி சூழ் மாடம்
மறை கலந்த மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.


2


உரம் கொடுக்கும் இருள் மெய்யர், மூர்க்கர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர் தமை உறவாக் கொண்ட
பரம் கெடுத்து, இங்கு அடியேனை ஆண்டு கொண்ட பவளத்தின் திரள் தூணே! பசும்பொன் முத்தே!
புரம் கெடுத்து, பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி, புவியோர்க்கு என்றும்
வரம் கொடுக்கும் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.


3


ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர், பொல்லா ஊத்தைவாய்ச் சமணர் உறவு ஆகக் கொண்டு
ஞான(அ)கம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனைப் பொருள் ஆக ஆண்டு கொண்ட,
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே! விண்ணவர் தம் பெருமான்! மேக
வானகம் சேர் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.


4


சிரம் ஏற்ற நான்முகன் தன் தலையும் மற்றைத் திருமால் தன் செழுந் தலையும் பொன்றச் சிந்தி,
உரம் ஏற்ற இரவி பல்-தகர்த்து, சோமன் ஒளிர்கலைகள் பட உழக்கி, உயிரை நல்கி,
நரை ஏற்ற விடை ஏறி, நாகம் பூண்ட நம்பியையே, மறை நான்கும் ஓலம் இட்டு
வரம் ஏற்கும் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.


5


Go to top
சினம் திருத்தும் சிறுப் பெரியார் குண்டர் தங்கள் செதுமதியார் தீவினைக்கே விழுந்தேன்; தேடிப்
புனம் திருத்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறி இலியேன் தனைப் பொருளா ஆண்டு கொண்டு,
தனம் திருத்துமவர் திறத்தை ஒழியப் பாற்றி, தயா மூலதன் மவழி எனக்கு நல்கி,
மனம் திருத்தும் மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.


6


சுழித் துணை ஆம் பிறவி வழித் துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே! தூய தெண்நீர்
இழிப்ப(அ)ரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என் துணையே! என்னுடைய பெம்மான்! தம்மான்!
பழிப்ப(அ)ரிய திருமாலும் அயனும் காணாப் பருதியே! சுருதி முடிக்கு அணி ஆய் வாய்த்த,
வழித்துணை ஆம், மழபாடி வயிரத்தூணே! என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.


7



Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருமழபாடி
2.009   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே!
Tune - இந்தளம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
3.028   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   காலை ஆர் வண்டு இனம்
Tune - கொல்லி   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
3.048   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அங்கை ஆர் அழலன்(ன்), அழகு
Tune - கௌசிகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
6.039   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீறு ஏறு திருமேனி உடையான்
Tune - திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
6.040   திருநாவுக்கரசர்   தேவாரம்   அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு
Tune - திருத்தாண்டகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பேசுவரர் அழகாம்பிகையம்மை)
7.024   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   பொன் ஆர் மேனியனே! புலித்தோலை
Tune - நட்டராகம்   (திருமழபாடி வச்சிரத்தம்பநாதர் அழகம்மை)

This page was last modified on Sun, 09 Mar 2025 21:48:18 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai song paadal paadal pathigam no 6.040