பேருலகில் ஓங்குபுகழ்ப்
பெருந்தொண்டை நன்னாட்டு
நீருலவுஞ் சடைக்கற்றை
நிருத்தர்திருப் பதியாகும்
காருலவு மலர்ச்சோலைக்
கன்னிமதில் புடைசூழ்ந்து
தேருலவு நெடுவீதி
சிறந்ததிரு வொற்றியூர்.
|
1
|
பீடுகெழு பெருந்தெருவும்
புத்தருடன் பீலிஅமண்
வேடமுடை யவர்பொருள்போல்
ஆகாச வெளிமறைக்கும்
ஆடிகொடி மணிநெடுமா
ளிகைநிரைகள் அலைகமுகின்
காடனைய கடல்படப்பை
யெனவிளங்குங் கவின்காட்டும்.
|
2
|
பன்னுதிருப் பதிகஇசைப்
பாட்டுஓவா மண்டபங்கள்
அன்னநடை மடவார்கள்
ஆட்டு ஓவா அணியரங்கு
பன்முறைதூ ரியமுழங்கும்
விழவுஓவா பயில்வீதி
செந்நெல்லடி சிற்பிறங்கல்
உணவுஓவா திருமடங்கள்.
|
3
|
கெழுமலர்மா தவிபுன்னை
கிளைஞாழல் தளையவிழும்
கொழுமுகைய சண்பகங்கள்
குளிர்செருந்தி வளர்கைதை
முழுமணமே முந்நீரும்
கமழமலர் முருகுயிர்க்கும்
செழுநிலவின் துகளனைய
மணற்பரப்புந் திருப்பரப்பு.
|
4
|
எயிலணையும் முகில்முழக்கும்
எறிதிரைவே லையின்முழக்கும்
பயில்தருபல் லியமுழக்கும்
முறைதெரியாப் பதியதனுள்
வெயில்அணிபல் மணிமுதலாம்
விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபில்
சக்கரப்பா டித்தெருவு.
|
5
|
| Go to top |
அக்குலத்தின் செய்தவத்தால்
அவனிமிசை அவதரித்தார்
மிக்கபெருஞ் செல்வத்து
மீக்கூர விளங்கினார்
தக்கபுகழ்க் கலியனார்
எனும்நாமந் தலைநின்றார்
முக்கண்இறை வர்க்குஉரிமைத்
திருத்தொண்டின் நெறிமுயல்வார்.
|
6
|
எல்லையில்பல் கோடிதனத்
திறைவராய் இப்படித்தாம்
செல்வநெறிப் பயனறிந்து
திருவொற்றி யூரமர்ந்த
கொல்லைமழ விடையார்தம்
கோயிலின்உள் ளும்புறம்பும்
அல்லும்நெடும் பகலுமிடும்
திருவிளக்கின் அணிவிளைத்தார்.
|
7
|
எண்ணில்திரு விளக்குநெடு
நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல்
புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம்
உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல்
மாண்டதுமாட் சிமைத்தாக.
|
8
|
திருமலிசெல் வத்துழனி
தேய்ந்தழிந்த பின்னையுந்தம்
பெருமைநிலைத் திருப்பணியில்
பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர்பால்
எண்ணெய்மா றிக்கொணர்ந்து
தருமியல்பில் கூலியினால்
தமதுதிருப் பணிசெய்வார்.
|
9
|
வளமுடையார் பால்எண்ணெய்
கொடுபோய்மா றிக்கூலி
கொளமுயலும் செய்கையும்மற்
றவர்கொடா மையின்மாறத்
தளருமனம் உடையவர்தாம்
சக்கரஎந் திரம்புரியும்
களனில்வரும் பணிசெய்து
பெறுங்கூலி காதலித்தார்.
|
10
|
| Go to top |
செக்குநிறை எள்ளாட்டிப்
பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ மிகவுழந்தும்
பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழிற் பெறுங்கூலி
தாங்கொண்டு தாழாமை
மிக்கதிரு விளக்கிட்டார்
விழுத்தொண்டு விளக்கிட்டார்.
|
11
|
அப்பணியால் வரும்பேறும்
அவ்வினைஞர் பலருளராய்
எப்பரிசுங் கிடையாத
வகைமுட்ட இடருழந்தே
ஒப்பில்மனை விற்றெரிக்கு
முறுபொருளும் மாண்டதற்பின்
செப்பருஞ்சீர் மனையாரை
விற்பதற்குத் தேடுவார்.
|
12
|
மனமகிழ்ந்து மனைவியார்
தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்கும்
கிடையாமல் தளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயில்
திருவிளக்குப் பணிமுட்டக்
கனவினும்முன் பறியாதார்
கையறவால் எய்தினார்.
|
13
|
பணிகொள்ளும் படம்பக்க
நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப்
பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு
மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ்
வினைமுடிக்கத் தொடங்குவார்.
|
14
|
திருவிளக்குத் திரியிட்டங்கு
அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா
உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய
அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன்
நேர்வந்து பிடித்தருளி.
|
15
|
| Go to top |
மற்றவர்தம் முன்னாக
மழவிடைமேல் எழுந்தருள
உற்றவூ றதுநீங்கி
ஒளிவிளங்க வுச்சியின்மேல்
பற்றியஞ் சலியினராய்
நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியில்
பொலிந்திருக்க அருள்புரிந்தார்.
|
16
|
தேவர்பிரான் திருவிளக்குச்
செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார்
கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனாது அரனடியார்
தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார்
திருத்தொண்டின் நலமுரைப்பாம்.
|
17
|