தோன்றிஎன் னுள்ளே சுழன்றெழு கின்றதோர் மூன்று படிமண் டலத்து முதல்வனை ஏன்றெய்தி இன்புற் றிருந்த இளங்கொடி நான்று நலஞ்செய் நலஞ்செயு மாறே.
|
1
|
மன்று நிறைந்தது மாபரம் ஆயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின் குன்று நிறைந்த குணவிளக் காகுமே.
|
2
|
ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம் கூறா வுபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.
|
3
|
பற்றறப் பற்றில் பரம்பதி யாவது பற்றறப் பற்றில் பரன்அறி வேபரம் பற்றறப் பற்றினைப் பற்றவல் லோர்கட்கே பற்றறப் பற்றில் பரம்பரம் ஆகுமே.
|
4
|
பரம்பர மான பதி பாசம் பற்றாப் பரம்பர மாகும் பரம் சிவம் மேவப் பரம்பர மான பரசிவா னந்தம் பரம்பர மாகப் படைப்ப தறிவே.
|
5
|
| Go to top |
நனவில் கலாதியாம் நால்ஒன் றகன்று தனிஉற்ற கேவலந் தன்னில் தானாகி நினைவுற் றகன்ற அதீதத்துள் ஞேயந் தனையுற் றிடத்தானே தற்பரம் ஆமே.
|
6
|
தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும் பிற்காணும் தூடணந் தானும் பிறழ்வுற்றுத் தற்பர கால பரமும் கலந்தற்ற நற்பரா தீதமும் நாடக ராதியே. 21,
|
7
|