வீடலால வாயிலாய் விழுமியார்க ணின்கழல் பாடலால வாயிலாய் பரவநின்ற பண்பனே காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில் கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.
|
1
|
பட்டிசைந்த வல்குலாள் பாவையாளோர் பாகமா ஒட்டிசைந்த தன்றியும் முச்சியாளொ ருத்தியாக் கொட்டிசைந்த வாடலாய் கூடலால வாயிலாய் எட்டிசைந்த மூர்த்தியா யிருந்தவாறி தென்னையே.
|
2
|
குற்றநீ குணங்கணீ கூடலால வாயிலாய் சுற்றநீ பிரானுநீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்றநூற் கருத்துநீ யருத்தமின்ப மென்றிவை முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.
|
3
|
முதிருநீர்ச் சடைமுடி முதல்வன்நீ முழங்கழல் அதிரவீசி யாடுவா யழகன்நீ புயங்கன்நீ மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய் சதுரன்நீ சதுர்முகன் கபாலமேந்து சம்புவே.
|
4
|
கோலமாய நீண்மதிற் கூடலால வாயிலாய் பாலனாய தொண்டு செய்து பண்டுமின்று முன்னையே நீலமாய கண்டனே நின்னையன்றி நித்தலும் சீலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே.
|
5
|
| Go to top |
பொன்றயங் கிலங்கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை பின்றயங்க வாடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ கொன்றையம் முடியினாய் கூடலால வாயிலாய் நின்றயங்கி யாடலே நினைப்பதே நியமமே.
|
6
|
ஆதியந்த மாயினா யாலவாயி லண்ணலே சோதியந்த மாயினாய் சோதியுள்ளொர் சோதியாய் கீதம்வந்த வாய்மையாற் கிளர்தருக்கி னார்க்கலால் ஓதிவந்த வாய்மையா லுணர்ந்துரைக்க லாகுமே.
|
7
|
கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல் துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய் மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய் நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.
|
8
|
தாவணவ் விடையினாய் தலைமையாக நாடொறும் கோவணவ் வுடையினாய் கூடலால வாயிலாய் தீவணம் மலர்மிசைத் திசைமுகனு மாலுநின் தூவணம் மளக்கிலார் துளக்கமெய்து வார்களே.
|
9
|
தேற்றமில் வினைத்தொழிற் றேரருஞ் சமணரும் போற்றிசைத்து நின்கழல் புகழ்ந்து புண்ணியங்கொளார் கூற்றுதைத்த தாளினாய் கூடலால வாயிலாய் நாற்றிசைக்கு மூர்த்தியாகி நின்றதென்ன நன்மையே.
|
10
|
| Go to top |
போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான் பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால் ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயிலண்ணலைத் தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர் தேவரே.
|
11
|
Other song(s) from this location: திருஆலவாய் (மதுரை)
1.094
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்
Tune - குறிஞ்சி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.066
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திருநீற்று பதிகம், மந்திரம் ஆவது நீறு; வானவர்
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
2.070
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
Tune - காந்தாரம்
(திருஆலவாய் (மதுரை) பிரமபுரீசர் திருநிலைநாயகி)
|
3.032
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வன்னியும் மத்தமும் மதி பொதி
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) )
|
3.039
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மானின் நேர் விழி மாதராய்!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.047
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காட்டு மா அது உரித்து,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.051
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.052
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வீடு அலால் அவாய் இலாஅய்,
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.054
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வாழ்க அந்தணர், வானவர், ஆன்
Tune - கௌசிகம்
(திருஆலவாய் (மதுரை) )
|
3.087
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தளிர் இள வளர் ஒளி
Tune - சாதாரி
(திருஆலவாய் (மதுரை) தெர்ப்பாரணியர் போகமார்த்தபூண்முலையம்மை)
|
3.108
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.115
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
திரு இயமகம் பதிகம், ஆல நீழல் உகந்தது இருக்கையே;
Tune - பழம்பஞ்சுரம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
3.120
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,
Tune - புறநீர்மை
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
4.062
திருநாவுக்கரசர்
தேவாரம்
வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!
Tune - கொல்லி
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|
6.019
திருநாவுக்கரசர்
தேவாரம்
முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
Tune - திருத்தாண்டகம்
(திருஆலவாய் (மதுரை) சொக்கநாதசுவாமி மீனாட்சியம்மை)
|