சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வெங்க
வெங்கதி     வெங்கதிரோன்     வெங்கட்     வெங்கண்     வெங்கதிர்     வெங்கணைபடு     வெங்கட்களிற்     வெங்க     வெங்குரு     வெங்குரு,     வெங்கடுங்     வெங்கோல்    
2.070   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெங்குரு, தண்புகலி, வேணுபுரம், ச்ண்பை, வெள்ளம்
கொள்ளத்
தொங்கிய தோணிபுரம், பூந்தாய், தொகு பிரமபுரம், தொல்
காழி,
தங்கு பொழில் புறவம், கொச்சைவயம், தலி பண்டு ஆண்ட
மூதூர்,
கங்கை சடைமுடிமேல் ஏற்றான் கழுமலம் - நாம் கருதும்
ஊரே.

3.104   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வெங்கடுங் காட்டு அகத்து ஆடல் பேணி, விரிபுன்சடை தாழ,
திங்கள் திருமுடி மேல் விளங்க, திசை ஆர் பலி தேர்வார்
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம்போலும்
பைங்கொடி முல்லை படர் புறவின் பரிதி(ந்)நியமமே.

9.020   9 st/nd Thirumurai   Song # 8   கண்டராதித்தர்   திருவிசைப்பா  
வெங்கோல் வேந்தன் தென்னன்
   நாடும் ஈழமும் கொண்டதிறல்
செங்கோற் சோழன் கோழி
   வேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி
   யாடும் அணிதில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம்மி
   றையை என்றுகொல் எய்துவதே.
10.319   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தம்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனம்
திங்களிற் செவ்வாய் புதைத்திருந் தாரே. 

11.037   11 st/nd Thirumurai   Song # 30   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
வெங்கதிரோன் தேர்விலங்க மிக் குயர்ந்த மேருப் போன்று
அங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் பொங்கிகொளிசேர்

12.090   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வெங்கட் புலிகிடந்த
வெம்முழையிற் சென்றழைக்கும்
பைங்கட் குறுநரியே
போல்வான் படைகொண்டு
பொங்கிப் புறஞ்சூழ்ந்து
போர்குறித்து நேர்நின்றே
அங்கட் கடைநின்
றழைத்தா னொலிகேளா.
12.090   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வெங்கண் விறற்சிலை வீரர்கள்
வேறிரு கையிலும் நேர்பவர்
தங்கள் சிலைக்குலம் உந்தின
தாவில் சரங்கள் நெருங்குவ
பொங்கு சினத்தெரி யிற்புகை
போகு கொடிக்கள் வளைத்தெதிர்
செங்கண் விழிக்கனல் சிந்திய
சீறு பொறிச்செல வொத்தன.
12.100   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வெங்கதிர் விசும்பின் உச்சி
மேவிய பொழுதில் எங்கும்
மங்கல வாழ்த்து மல்க 
மருங்குபல் லியங்க ளார்ப்பத்
தங்கள்தொல் மரபின் விஞ்சைத்
தனுத்தொழில் வலவர் தம்பால்
பொங்கொளிக் கரும்போர் ஏற்றைப் 
பொருசிலை பிடிப்பித் தார்கள்.
12.100   12 st/nd Thirumurai   Song # 80   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வெங்கணைபடு பிடர்கிழிபட  
விசையுருவிய கயவாய்
செங்கனல்பட அதனொடுகணை
செறியமுன்இரு கருமா
அங்கெழுசிர முருவியபொழு  
தடலெயிறுற அதனைப்
பொங்கியசின மொடுகவர்வன
புரைவனசில புலிகள்.
12.150   12 st/nd Thirumurai   Song # 37   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வெங்கட்களிற் றின்மிசை நின்றும்
இழிச்சி வேரித்
தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி
சூடு சாலை
அங்கட்கொடு புக்கரி யாசனத்
தேற்றி ஒற்றைத்
திங்கட்குடைக் கீழ்உரி மைச்செயல்
சூழ்ந்து செய்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 356   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வெங்க திர்ப்பக லக்க டத்திடை
வெய்ய வன்கதிர் கைபரந்
தெங்கு மிக்கபி ளப்பி னாகர்தம்
எல்லை புக்கெரி கின்றன
பொங்க ழல்தெறு பாலை வெந்நிழல்
புக்க சூழல் புகும்பகல்
செங்க திர்க்கனல் போலும் அத்திசை
திண்மை மெய்த்தவர் நண்ணினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 247   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடைவ லங்கொடு
செங்கைகள் சென்னிமேற் குவித்துச் சென்றுபுக்
கங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 294   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வெங்கண் விடைமேல் வருவார்
வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடுந்
தமிழ்ப்பதி கத்தொடை சாத்தி
அங்க ணமர்வார்தம் முன்னே
அருள்வே டங்காட்டத் தொழுது
செங்கண்மா லுக்கரி யார்தந்
திருந்துதே வன்குடி சேர்ந்தார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95