![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் விரை
விரையாலும்
விரைந்தன்று
விரையார்
விரையாரும்
விரைசெய்
விரையலங்கல்
விரையின்
விரை
விரைந்து
விரையுண்ட
1.119
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலும் எதிர் கொள்ள, ஊரார், அம் மாக்
கரை ஆர் பொன் புனல் வேலிக் கள்ளில் மேயான்
அரை ஆர் வெண் கோவணத்த அண்ணல் தானே.
2.077
2 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரையின் ஆர் கொன்றை சூடியும், வேக நாகமும் வீக்கிய
அரையினார், அறையணி நல்லூர் அண்ணலார், அழகு ஆயது ஓர்
நரையின் ஆர் விடை ஊர்தியார், நக்கனார், நறும்போது சேர்
உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்கே
3.055
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே!
உரை ஆர் பல்புகழாய்! உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
திரை ஆர் தெண்கடல் சூழ் திரு வான்மியூர் உறையும்
அரையா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
3.094
3 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய
அரை மல்கு புலி அதளீரே;
அரை மல்கு புலி அதளீர்! உமது அடி இணை
உரை மல்கு புகழவர் உயர்வே!
3.098
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரை மலி பொழில் அணி மிழலை உளீர், ஒரு
வரைமிசை உறைவதும் வலதே;
வரைமிசை உறைவது ஒர் வலது உடையீர்! உமை
உரை செயுமவை மறை ஒலியே.
3.098
3 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
விரை மலி பொழில் அணி மிழலை உளீர், செனி
நிரை உற அணிவது நெறியே;
நிரை உற அணிவது ஒர் நெறி உடையீர்! உமது
அரை உற அணிவன, அரவே.
4.067
4 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள
வெருவர, இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று,
பருவரை அனைய தோளும் முடிகளும் பாரி வீழத்
திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சுரத்து உளானே!
6.013
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
விரை ஏறு நீறு அணிந்து, ஓர் ஆமை பூண்டு, வெண்தோடு பெய்து, இடங்கை வீணை ஏந்தி,
திரை ஏறு சென்னிமேல்-திங்கள் தன்னைத் திசை விளங்க வைத்து, உகந்த செந்தீ வண்ணர்,
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன்
புரை ஏறு தாம் ஏறி, பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!.
6.027
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
விரைந்து ஆளும் நல்குரவே! செல்வே! பொல்லா வெகுட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள்
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்துத் தின்பீர்க்கு இல்லையே, நுகர் போகம்? யானேல், வானோர்
கரைந்து ஓட வரு நஞ்சை அமுதுசெய்த கற்பகத்தை, தற்பரத்தை, திரு ஆரூரில்
பரஞ்சோதிதனை, காண்பேன்; படேன், நும்
பண்பில்; பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்மி(ன்)னே!.
6.073
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான் கண்டாய்; வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்;
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய்; அழல் ஆடி கண்டாய்; அழகன் கண்டாய்;
வரு திரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய்
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
6.097
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
விரையுண்ட வெண் நீறு தானும் உண்டு; வெண்
தலை கை உண்டு; ஒரு கை வீணை உண்டு;
சுரை உண்டு; சூடும் பிறை ஒன்று உண்டு; சூலமும்
தண்டும் சுமந்தது உண்டு(வ்);
அரையுண்ட கோவண ஆடை உண்டு(வ்);
அலிக்கோலும் தோலும் அழகா உண்டு(வ்);
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு(வ்)
இமையோர் பெருமான் இலாதது என்னே?
7.021
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
விரை ஆர் கொன்றையினாய்! விமலா! இனி உன்னை அல்லால்,
உரையேன், நா அதனால், உடலில் உயிர் உள்ளளவும்;
திரை ஆர் தண்கழனித் திரு மேற்றளி உறையும்
அரையா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .
7.068
7 st/nd Thirumurai
Song # 2
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
விரை செய் மா மலர்க் கொன்றையினானை; வேத கீதனை; மிகச் சிறந்து உருகிப்
பரசுவார் வினைப் பற்று அறுப்பானை; பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை;
குரை கடல், வரை, ஏழ், உலகு உடைய கோனை; ஞானக் கொழுந்தினை; தொல்லை
நரை விடை உடை நள்ளாறனை; அமுதை; நாயினேன் மறந்து என் நினைக்கேனே? .
7.069
7 st/nd Thirumurai
Song # 11
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை,
திரை தரு புனல் சூழ் திரு முல்லை வாயில் செல்வனை, நாவல் ஆரூரன்
உரை தரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள்,
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர், விண்ணவர்க்கு அரசே .
10.737
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.
11.022
11 st/nd Thirumurai
Song # 65
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னா
விரையார் பொழிலுறந்தை மேயான் விரையாநீ
றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.
11.023
11 st/nd Thirumurai
Song # 41
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
விரையாரும் மத்தம் விரகாகச் சூடி
விரையாரும் வெள்ளெலும்பு பூண்டு விரையாரும்
நஞ்சுண்ட ஆதி நலங்கழல்கள் சேராதார்
நஞ்சுண்ட வாதி நலம்.
12.060
12 st/nd Thirumurai
Song # 1
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
விரைசெய் நறும்பூந் தொடையிதழி
வேணி யார்தங் கழல்பரவிப்
பரசு பெறுமா தவமுனிவன்
பரசு ராமன் பெறுநாடு
திரைசெய் கடலின் பெருவளனும்
திருந்து நிலனின் செழுவளனும்
வரையின் வளனும் உடன்பெருகி
மல்கு நாடு மலைநாடு.
12.210
12 st/nd Thirumurai
Song # 88
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
விரையலங்கல் பல்லவனும்
அதுகேட்டு வெகுண்டெழுந்து
புரையுடைய மனத்தினராய்ப்
போவதற்குப் பொய்ப்பிணிகொண்
டுரைசிறந்த சமயத்தை
அழித்தொழியப் பெறுவதே
கரையில்தவத் தீர்இதனுக்
கென்செய்வ தெனக்கனன்றான்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88