சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வண்ண
வண்ண     வண்ணான்     வண்ணச்     வண்ணம்
அஞ்சுதலை
    வண்ணநீள்     வண்ணவெம்     வண்ணங்     வண்ணம்     வண்ணமும்     வண்ணங்கள்    
1.086   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்ண மலரானும் வையம் அளந்தானும்
நண்ணல் அரியானை, நல்லூர்ப் பெருமானை,
தண்ணமலர் தூவித் தாள்கள் தொழுது ஏத்த
எண்ணும் அடியார்கட்கு இல்லை, இடுக்கணே.

1.109   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்ண நல்மலர் உறை மறையவனும்
கண்ணனும் கழல் தொழ, கனல் உரு ஆய்
விண் உற ஓங்கிய விமலன் இடம்
திண்ண நல்மதில் அணி சிரபுரமே.

1.133   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து,
பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம்,
விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்-
திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.

2.095   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்ண மால்வரை தன்னை மறித்திடல் உற்ற வல் அரக்கன்
கண்ணும் தோளும் நல்வாயும் நெரிதரக் கால்விரல் ஊன்றி,
பண்ணின் பாடல் கைந்நரம்பால் பாடிய பாடலைக் கேட்டு,
அண்ணலாய் அருள் செய்த அடிகளுக்கு இடம் அரசிலியே.

3.034   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட,
அண்ணலார் ஆயிழையாளொடும் அமர்வு இடம்
விண்ணின் மா மழை பொழிந்து இழிய, வெள் அருவி சேர்
திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே.

3.074   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு, சுண்ணம் மலி வண்ணம் மலர்மேல்
நண் அவனும், எண் அரிய விண்ணவர்கள் கண்ணவன் நலம் கொள் பதிதான்-
வண்ண வன நுண் இடையின், எண் அரிய, அன்ன நடை, இன்மொழியினார்
திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே.

5.035   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை
திண்ணம் ஆகத் திருச்சடைச் சேர்த்தியே
பண்ணும் ஆகவே பாடும், பழனத்தான்;
எண்ணும், நீர் அவன் ஆயிரம் நாமமே!

5.040   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான், இவள் தன்மையே!

6.009   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று, வலி செய்து,
  வளை கவர்ந்தார்-வகையால் நம்மைக்
கண் அம்பால் நின்று எய்து, கனலப் பேசி, கடியது
  ஓர் விடை ஏறி-காபாலி(ய்)யார்;
சுண்ணங்கள் தாம் கொண்டு துதையப் பூசித்தோல்
 உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற
அண்ணலார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
  ஆமாத்தூர் ஐயனாரே!.

8.105.03   8 st/nd Thirumurai   Song # 25   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
வண்ணம் தான் சேயது அன்று; வெளிதே அன்று;
அநேகன்; ஏகன்; அணு; அணுவில் இறந்தாய்;என்று அங்கு
எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம்
எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன் தன்
வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி,
மலர்க் கழல்கள் அவை காட்டி, வழிஅற்றேனை,
திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்;
எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே?

10.318   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே. 

11.008   11 st/nd Thirumurai   Song # 193   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் அண்ணலே

11.024   11 st/nd Thirumurai   Song # 7   இளம்பெருமான் அடிகள்   சிவபெருமான் திருமும்மணிக்கோவை  
வண்ணம்
அஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமின் விலகிப் பகல்செகுக் கும்மே
என்னை
பழமுடைச் சிறுகலத் திடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே
அஃதான்று
முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும்கொடும்பிறைத்
தேமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.

12.000   12 st/nd Thirumurai   Song # 47   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால்
எண்ணில்பே ரறங்களும் வளர்க்கும் ஈகையால்
அண்ணல்பா கத்தையா ளுடைய நாயகி
உண்ணெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது.
12.100   12 st/nd Thirumurai   Song # 42   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
வண்ணவெம் சிலையு மற்றப்
படைகளும் மலரக் கற்றுக்
கண்ணகன் சாயல் பொங்கக்
கலைவளர் திங்க ளேபோல்
எண்ணிரண் டாண்டின் செவ்வி
எய்தினார் எல்லை யில்லாப்
புண்ணியந் தோன்றி மேன்மேல்
வளர்வதன் பொலிவு போல்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 296   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வண்ணங் கண்டு நான்உம்மை
வணங்கி யன்றிப் போகேனென்
றெண்ண முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது செய்யாதே
அண்ண லாரும் அதுவுணர்ந்தங்
கரசு தம்மைப் பணிவதற்குத்
திண்ண மாக மன்னனுக்குக்
கனவில் அருளிச் செய்கின்றார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3