சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் வண்டு
வண்டு     வண்டுலாங்     வண்டுகாள்!    
1.003   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு வைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயத்து
அண்டவாணன் அடி உள்குதலால், அருள்மாலைத் தமிழ் ஆக,
கண்டல் வைகு கடல் காழியுள் ஞானசம்பந்தன் தமிழ் பத்தும்
கொண்டு வைகி இசை பாட வல்லார் குளிர் வானத்து உயர் வாரே.

1.009   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா வகை பாகம்
பெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்
தண் தாமரை மலராள் உறை தவள நெடுமாடம்
விண் தாங்குவ போலும் மிகு வேணுபுரம் அதுவே.

1.075   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டு அணி சடையர்; விடையினர்; தம் கொடுகொட்டி குடமுழாக் கூடியும், முழவப்-
பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய் புனல் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள் வீற்றிருந்தாரே.

2.004   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த்
தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்,
தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர்
பண்டு இருக்கு ஒருநால்வருக்கு நீர் உரைசெய்ததே?

2.008   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு இரைத்து மது விம்மிய மா மலர்ப்பொய்கை சூழ்,
தெண்திரைக் கொள் புனல் வந்து ஒழுகும் வயல் சிக்கலுள்
விண்டு இரைத்த மலரால் திகழ் வெண்ணெய்ப்பிரான் அடி
கண்டு இரைத்து, மனமே! மதியாய், கதி ஆகவே!

2.029   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப்
பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர்
புண்டரிக வாசம் அது வீச, மலர்ச்சோலைத்
தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே.

2.031   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே
கொண்டு; அணைசெய் கோலம் அது, கோள் அரவினோடும்;
விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர, ஒர் அம்பால்;
கண்டவன் இருப்பது கருப்பறியலூரே.

2.083   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம் முழுது உண்ட மாலும், இகலி,
கண்டிட ஒண்ணும் என்று கிளறி, பறந்தும், அறியாத சோதி பதிதான்
நண்டு உண, நாரை செந்நெல் நடுவே இருந்து; விரை தேரை போதும் மடுவில்
புண்டரிகங்களோடு குமுதம் மலர்ந்து வயல் மேவு கொச்சைவயமே.

2.102   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு சென்று அணை மலர்மிசை நான்முகன், மாயன்,
என்று இவர் அன்று
கண்டு கொள்ள, ஓர் ஏனமோடு அன்னம் ஆய், கிளறியும்
பறந்தும், தாம்
பண்டு கண்டது காணவே நீண்ட எம் பசுபதி; பரமேட்டி;
கொண்ட செல்வத்துச் சிரபுரம் தொழுது எழ, வினை அவை
கூடாவே.

2.116   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு பாட(வ்) வளர் கொன்றை, மாலை(ம்) மதியோடு
உடன்
கொண்ட கோலம், குளிர்கங்கை தங்கும் குருள்குஞ்சியு
உண்டுபோலும் என வைத்து உகந்த(வ்) ஒருவற்கு இடம்
கண்டல் வேலி கழி சூழ் கடல் நாகைக்காரோணமே.

2.122   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு வாழும் குழல் மங்கை ஓர் கூறு உகந்தார், மதித்
துண்டம் மேவும் சுடர்த் தொல்சடையார்க்கு இடம் ஆவது
கெண்டை பாய மடுவில்(ல்), உயர் கேதகை, மாதவி,
புண்டரீகம்மலர்ப் பொய்கை நிலாவும் புகலியே.

3.022   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின;
பண்டை இராவணன் பாடி உய்ந்தன;
தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே.

3.066   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரி அரவம்
கண்டு இரைக்கும் பிறைச் சென்னிக் காபாலி கனை கழல்கள்
தொண்டு இரைத்துத் தொழுது இறைஞ்ச, துளங்கு ஒளி நீர்ச் சுடர்ப் பவளம்
தெண்திரை(க்)கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக் குடியாரே.

3.081   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம் வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி; பழி தீரக்
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்; ஊர்
தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே.

3.083   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி,
பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே
நண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம்
தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே.

4.006   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே! என்கின்றாளால்;
விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால்;
உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன் என்கின்றாளால்-
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

4.085   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும்,
கொண்டு அணைந்து ஏறு முடி உடையான், குரை சேர் கழற்கே
தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல்
வெண் தலை மாலை அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

5.007   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு உலாம் மலர்கொண்டு வளர்சடைக்கு
இண்டைமாலை புனைந்தும், இராப்பகல்
தொண்டர் ஆகி, தொடர்ந்து விடாதவர்க்கு
அண்டம் ஆளவும் வைப்பர்-ஆரூரரே.

5.014   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்,
எண் திசைக்கும் இடைமருதா! என,
விண்டுபோய் அறும், மேலைவினைகளே.

5.015   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்திசைக்கும் இடைமருதா! என,
விண்டுபோய் அறும், மேலைவினைகளே.

5.053   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு ஆர் கொன்றையும் மத்தம்,-வளர்சடைக்
கொண்டான்,-கோல மதியோடு அரவமும்;
விண்டார் மும்மதில் எய்தவன்; வீரட்டம்
கண்டால் அல்லது, என் கண் துயில் கொள்ளுமே?

5.073   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி,
விண்ட தாதையைத் தாள் அற வீசிய
சண்ட நாயகனுக்கு அருள்செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.

5.083   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு அலம்பிய வார்சடை ஈசனை,
விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை,
கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை,
கண்டலும், வினை ஆன கழலுமே.

6.045   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மதமத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி,
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று, திசை சேர நடம் ஆடி, சிவலோக(ன்)னார்
உண்டார் நஞ்சு, உலகுக்கு ஓர் உறுதி வேண்டி; ஒற்றியூர் மேய ஒளி வண்ண(ன்)னார்;
கண்டேன், நான் கனவு அகத்தில்; கண்டேற்கு என்
தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்ட(வ்)வே.

6.081   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
வண்டு ஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்; மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்;
பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்;   பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்;
செண்டு ஆடி அவுணர் புரம் செற்றான் கண்டாய்;   திரு ஆரூர்த் திருமூலட்டானன் கண்டாய்;
கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

7.020   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர் பங்கு உடையாய்!
விண்டவர் தம் புரம் மூன்று எரி செய்த எம் வேதியனே!
தெண்திரை நீர் வயல் சூழ் திருக்கோளிலி எம்பெருமான்!
அண்டம் அது ஆயவனே, அவை அட்டித்தரப் பணியே! .

7.037   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வண்டுகாள்! கொண்டல்காள்! வார் மணல் குருகுகாள்!
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரைக்
கண்ட ஆறும், காமத்தீக் கனன்று எரிந்து மெய்
உண்ட ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .

7.052   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
வண்டு ஆர் குழலி உமை நங்கை பங்கா! கங்கை மணவாளா!
விண்டார் புரங்கள் எரி செய்த விடையாய்! வேத நெறியானே!
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா! பழையனூர் மேய
அண்டா! ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே.

11.008   11 st/nd Thirumurai   Song # 104   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் குண்டலங்கள்

12.160   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
வண்டு பாடப் புனல்தடத்து
மலர்ந்து கண்ணீர் அரும்புவன
கொண்ட வாச முகையவிழ்ந்த
குளிர்பங் கயங்க ளேயல்ல
அண்டர் பெருமான் திருப்பாட்டின்
அமுதம் பெருகச் செவிமடுக்குந்
தொண்டர் வதன பங்கயமுந்
துளித்த கண்ணீர் அரும்புமால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 364   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
வண்டு லாங்குழல் மலைமக
ளுடன்வட கயிலை
அண்டர் நாயகர் இருக்கும்அப்
பரிசவர் அடியேன்
கண்டு கும்பிட விருப்பொடுங்
காதலின் அடைந்தேன்
கொண்ட என்குறிப் பிதுமுனி
யேஎனக் கூற.
12.290   12 st/nd Thirumurai   Song # 380   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
வண்டுலாங் குழலார் முன்பு
வன்தொண்டர் வந்து கூடக்
கண்டபோ துள்ளங் காதல்
வெள்ளத்தின் கரைகா ணாது
கொண்டநாண் அச்சங் கூர
வணங்கஅக் குரிசி லாரும்
தண்டளிர்ச் செங்கை பற்றிக்
கொண்டுமா ளிகையுள் சார்ந்தார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81