![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மேல்
மேல்
மேல்கீழ்
மேல்வரும்
மேல்வைத்த
மேல்உண
மேல்ஏறி
மேல்கொண்ட
1.082
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள்
ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி
ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன்
வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.
1.130
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து, மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில் நின்று
சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.
2.073
2 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மேல் ஓதும் கழுமலம், மெய்த்தவம் வளரும் கொச்சை,
இந்திரன் ஊர், மெய்ம்மை
நூல் ஓதும் அயன் தன் ஊர், நுண் அறிவார் குரு, புகலி,
தராய், தூ நீர்மேல்
சேல் ஓடு தோணிபுரம், திகழ் புறவம், சிலம்பன் ஊர்,
செருச் செய்து அன்று
மாலோடும் அயன் அறியான் வண் காழி, சண்பை
மண்ணோர் வாழ்த்தும் ஊரே.
2.088
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மேல் ஓடி நீடு விளையாடல் மேவு விரிநூலன்;
வேதமுதல்வன்,
பால் ஆடு மேனி கரியானும், முன்னியவர் தேட நின்ற
பரன்; ஊர்
கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல்
வயலில்
சேலோடு வாளை குதிகொள்ள, மல்கு திரு முல்லை
வாயில் இதுவே.
3.039
3 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீப்
போலியைப் பணிய(க்)கிலாது, ஒரு பொய்த்தவம் கொடு, குண்டிகை
பீலி கைக்கொடு, பாய் இடுக்கி, நடுக்கியே, பிறர் பின் செலும்
சீலிகட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
6.056
6 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
மேல் வைத்த வானோர் பெருமான், போற்றி!
மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய், போற்றி!
சீலத்தான் தென் இலங்கை மன்னன் போற்றிச்
சிலை எடுக்க, வாய் அலற வைத்தாய், போற்றி!
கோலத்தால் குறைவு இல்லான் தன்னை, அன்று,
கொடிது ஆகக் காய்ந்த குழகா, போற்றி!
காலத்தால் காலனையும் காய்ந்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.
10.305
10 st/nd Thirumurai
Song # 9
திருமூலர்
திருமந்திரம்
மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி உந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
10.409
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
மேல்வரும் விந்துவும் அவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின்
மேல்வரு சக்கர மாய்வரும் ஞாலமே.
10.602
10 st/nd Thirumurai
Song # 10
திருமூலர்
திருமந்திரம்
மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.
10.714
10 st/nd Thirumurai
Song # 15
திருமூலர்
திருமந்திரம்
மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன்
மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன்
மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள்
மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே. 15,
11.008
11 st/nd Thirumurai
Song # 69
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
மேல்ஏறி நின்று தொழுவார் துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் நூலேறு
12.080
12 st/nd Thirumurai
Song # 14
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
மேல்கொண்ட பாகர் கண்டு
விசைகொண்ட களிறு சண்டக்
கால்கொண்டு போவார் போலக்
கடிதுகொண் டகலப் போக
நூல்கொண்ட மார்பின் தொண்டர்
நோக்கினர் பதைத்துப் பொங்கி
மால்கொண்ட களிற்றின் பின்பு
தண்டுகொண் டடிக்க வந்தார்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D