![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் முந்தி
முந்தி
முந்திய
முந்திமூ
முந்திக்
முந்தினான்,
முந்தித்
முந்திச்
1.027
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முந்தி நின்ற வினைகள் அவை போகச்
சிந்தி, நெஞ்சே! சிவனார் திருப் புன்கூர்;
அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
கந்தம் மல்கு கமழ் புன் சடையாரே.
1.100
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முந்தி இவ் வையம் தாவிய மாலும், மொய் ஒளி
உந்தியில் வந்து இங்கு அருமறை ஈந்த உரவோனும்,
சிந்தையினாலும் தெரிவு அரிது ஆகித் திகழ்சோதி,
பந்து இயல் அம் கை மங்கை ஒர்பங்கன், பரங்குன்றே!
2.082
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முந்திக் கண்ணனும் நான்முகனும்(ம்) அவர் காணா
எந்தை, திண் திறல் இருங்களிறு உரித்த எம்பெருமான்,
செந்து இனத்து இசை அறுபதம் முரல் திருத் தேவூர்
அந்தி வண்ணனை அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே.
2.114
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்) முனிகள் பலர்,
எந்தைபெம்மான்! என நின்று இறைஞ்சும் இடம் என்பரால்
மந்தி பாய, சரேலச் சொரிந்து(ம்) முரிந்து உக்க பூக்
கெந்தம் நாற, கிளரும் சடை எந்தை கேதாரமே.
3.023
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முந்தினான், மூவருள் முதல்வன் ஆயினான்,
கொந்து உலாம் மலர்ப்பொழில் கூகம் மேவினான்,
அந்தி வான்பிறையினான், அடியர் மேல் வினை
சிந்துவான், உறைவு இடம் திரு விற்கோலமே.
3.092
3 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே
உந்தி, மா மலர் அடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்
கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர, மதுத் திவலை
சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர் தாமே.
4.015
4 st/nd Thirumurai
Song # 11
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை,
அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை,
சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி,
எந்தை பெம்மான், என் எம்மான் என்பார் பாவம் நாசமே.
4.056
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த;
நந்தி, மாகாளர் என்பார், நடு உடையார்கள் நிற்ப;
சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும்
அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே.
4.073
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்தி இவ் உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும்,
எம் தனி நாதனே! என்று இறைஞ்சி நின்று ஏத்தல் செய்ய,
அந்தம் இல் சோதி தன்னை அடி முடி அறியா வண்ணம்
செந்தழல் ஆனார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.
5.005
5 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்திச் சென்று முப்போதும் வணங்குமின்,
அந்திவாய் ஒளியான் தன் அண்ணாமலை!
சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும்,
கந்தமாமலர் சூடும் கருத்தனே.
5.025
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்தி மூ எயில் எய்த முதல்வனார்,
சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார்,
அந்திக்கோன்தனக்கே அருள்செய்தவர்-
பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே.
6.003
6 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்தி உலகம் படைத்தான் தன்னை, மூவா முதல் ஆய மூர்த்தி தன்னை,
சந்த வெண்திங்கள் அணிந்தான் தன்னை, தவநெறிகள் சாதிக்க வல்லான்தன்னை,
சிந்தையில்-தீர்வினையை, தேனை, பாலை, செழுங் கெடில வீரட்டம் மேவினானை,
எந்தை பெருமானை, ஈசன் தன்னை, -ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே!
6.029
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்திய வல்வினைகள் தீர்ப்பான்தன்னை, மூவாத மேனி முக்கண்ணினானை,
சந்திரனும் வெங்கதிரும் ஆயினானை, சங்கரனை, சங்கக் குழையான்தன்னை,
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்தன்னை, மறுமையும் இம்மையும் ஆனான்தன்னை,
அம் திரனை, ஆரூரில் அம்மான்தன்னை, -அறியாது அடிநாயேன் அயர்த்த ஆறே!.
6.041
6 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
முந்தி இருந்தாயும் நீயே என்றும், முன் கயிலை மேவினாய் நீயே என்றும்,
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும், நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும்,
பந்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும்,
சித்திப்ப(அ)ரியாயும் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே.
7.049
7 st/nd Thirumurai
Song # 10
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முந்தி வானவர் தாம் தொழும் முருகன் பூண்டி மா நகர்வாய்ப்
பந்து அணை விரல் பாவை தன்னை ஓர் பாகம் வைத்தவனைச்
சிந்தையில் சிவ தொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு
எந்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே.
7.060
7 st/nd Thirumurai
Song # 4
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய, மூர்க்கன் ஆகிக் கழிந்தன, காலம்;
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்; சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்;
அந்தி வெண்பிறை சூடும் எம்மானே! ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா!
எந்தை! நீ எனக்கு உய்வகை அருளாய் இடை மருது(வ்) உறை எந்தை பிரானே! .
8.120
8 st/nd Thirumurai
Song # 8
மாணிக்க வாசகர்
திருவாசகம்
முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
10.311
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வாய்வலம்
உந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.
12.210
12 st/nd Thirumurai
Song # 340
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
முந்திமூ வெயில்எய்த
முதல்வனார் எனவெடுத்துச்
சிந்தைகரைந் துருகுதிருக்
குறுந்தொகையும் தாண்டகமும்
சந்தநிறை நேரிசையும்
முதலான தமிழ்பாடி
எந்தையார் திருவருள்பெற்
றேகுவார் வாகீசர்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF