![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் முத்து
முத்து
முத்துடன்
முத்தும்,
முத்தும்
2.072
2 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண் நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும் சோலை சூழ்ந்த
அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி,
தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.
3.036
3 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்தும், மா மணிகளும், முழுமலர்த்திரள்களும்,
எத்து மா முகலியின் கரையினில், எழில் பெற,
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன் தன் காளத்தி அணைவது கருமமே.
3.046
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே,
மத்தயானை மறுக(வ்), உரி வாங்கி, அக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர்; வண்ணம்(ம்) அழலும்(ம்) அழல்வண்ணமே.
3.091
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி,
எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை,
மத்த மாமலரொடு மதி பொதி சடைமுடி அடிகள் தம்மேல்
சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே.
4.013
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்தப்
பத்தர் பலர் நீர் மூழ்கிப் பலகாலும் பணிந்து ஏத்த,
எத்திசையும் வானவர்கள், எம்பெருமான் என இறைஞ்சும்
அத் திசை ஆம் ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
4.021
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!
5.061
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப்
புத்தூரன்(ன்) அடி போற்றி! என்பார் எலாம்
மொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய
மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே.
5.094
5 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து ஒப்பானை, முளைத்து எழு கற்பக-
வித்து ஒப்பானை, விளக்கு இடை நேர் ஒளி
ஒத்து ஒப்பானை, ஒளிர் பவளத்திரள்-
தொத்து ஒப்பானை-கண்டீர்-தொழல்பாலதே.
6.053
6 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும்; மொய் பவளக்கொடி அனைய சடையார் போலும்;
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும்; இரு-நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்;
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
7.007
7 st/nd Thirumurai
Song # 11
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
முத்து நீற்றுப் பவள மேனிச் செஞ்சடையான் உறையும்
பத்தர் பந்தத்து எதிர்கொள்பாடிப் பரமனையே பணியச்
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்-சடையன் அவன் சிறுவன்,
பத்தன், ஊரன்-பாடல் வல்லார் பாதம் பணிவாரே.
8.107
8 st/nd Thirumurai
Song # 3
மாணிக்க வாசகர்
திருவாசகம்
முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, என்
அத்தன், ஆனந்தன், அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!
8.109
8 st/nd Thirumurai
Song # 1
மாணிக்க வாசகர்
திருவாசகம்
முத்து நல் தாமம், பூ மாலை, தூக்கி, முளைக்குடம், தூபம், நல் தீபம்,வைம்மின்!
சத்தியும், சோமியும், பார் மகளும், நா மகளோடு பல்லாண்டு இசைமின்!
சித்தியும், கௌரியும், பார்ப்பதியும், கங்கையும், வந்து, கவரி கொள்மின்!
அத்தன், ஐயாறன், அம்மானைப் பாடி, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
8.109
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருவாசகம்
முத்து அணி கொங்கைகள் ஆட ஆட, மொய் குழல் வண்டு இனம் ஆட ஆட,
சித்தம் சிவனொடும் ஆட ஆட, செம் கயல் கண் பனி ஆட ஆட,
பித்து எம்பிரானொடும் ஆட ஆட, பிறவி பிறரொடும் ஆட ஆட,
அத்தன் கருணையொடு ஆட ஆட, ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!
9.019
9 st/nd Thirumurai
Song # 1
பூந்துருத்தி நம்பி காடநம்பி
திருவிசைப்பா
முத்து வயிரமணி
மாணிக்க மாலைகண்மேல்
தொத்து மிளிர்வனபோல்
தூண்டு விளக்கேய்ப்ப
எத்திசையும் வானவர்கள்
ஏத்தும் எழில்தில்லை
அத்தனுக்கும் அம்பலமே
ஆடரங்கம் ஆயிற்றே.
10.408
10 st/nd Thirumurai
Song # 40
திருமூலர்
திருமந்திரம்
முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதுரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுள்ளம் மேவிநின் றாளே.
10.702
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81