![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மாறு
மாறு
மாறும்
மாறுமுதற்
மாறுபெறல்
மாறுற்
மாறுபட்ட
மாறுபட்டு
1.055
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாறு இலா மணியே! என்று வானவர்
ஏறவே மிக ஏத்துவர்
கூறனே! குலவும் திரு மாற்பேற்றில்
நீறனே! என்றும் நின்னையே.
1.057
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாறு இலா மலரானொடு மால் அவன்
வேறு அலான் உறை வேற்காடு
ஈறு இலா மொழியே மொழியா எழில்
கூறினார்க்கு இல்லை, குற்றமே.
1.106
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாறு இல் அவுணர் அரணம் அவை மாய, ஓர் வெங்கணையால், அன்று,
நீறு எழ எய்த எங்கள் நிமலன் இடம் வினவில்
தேறல் இரும் பொழிலும், திகழ் செங்கயல் பாய் வயலும், சூழ்ந்த
ஊறல்; அமர்ந்த பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே.
1.112
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாறு எதிர்வரு திரிபுரம் எரித்து,
நீறு அது ஆக்கிய நிமலன் நகர்
நாறு உடை நடுபவர் உழவரொடும்
சேறு உடை வயல் அணி சிவபுரமே.
1.115
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாறு இலா மாது ஒருபங்கன், மேனி
நீறு அது ஆடலோன், நீள்சடைமேல்
ஆறு அது சூடுவான், அழகன், விடை
ஏறவன், இராமன தீச்சரமே.
2.103
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
மாறு தன்னொடு மண்மிசை இல்லது வருபுனல் மாகாளத்து
ஈறும் ஆதியும் ஆகிய சோதியை, ஏறு அமர் பெருமானை,
நாறு பூம் பொழில் காழியுள் ஞானசம்பந்தன தமிழ் மாலை
கூறுவாரையும் கேட்க வல்லாரையும் குற்றங்கள் குறுகாவே.
5.086
5 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாறு கொண்டு வளைத்து எழு தூதுவர்
வேறு வேறு படுப்பதன் முன்னமே,
ஆறு செஞ்சடை வைத்த வாட்போக்கியார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.
6.014
6 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார்; மணி முடிமேல் அர வைத்தார்; அணி கொள் மேனி
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார்;
நெற்றிமேல் கண் வைத்தார்; நிலையம் வைத்தார்;
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார்; ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்;
நாறு மலர்த்திருவடி என் தலைமேல்
வைத்தார்-நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே!.
6.036
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
மாறு இல் மதில் மூன்றும் எய்தார் தாமே; வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார் தாமே;
நீறு சேர் திருமேனி நிமலர் தாமே; நெற்றி நெருப்புக் கண் வைத்தார் தாமே;
ஏறு கொடுஞ் சூலக் கையார் தாமே; என்பு ஆபரணம் அணிந்தார் தாமே;
பாறு உண் தலையில் பலியார் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.
7.006
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றைப்
பீறி, இட்டம் ஆகப் போர்த்தீர்; பெய் பலிக்கு என்று இல்லம் தோறும்
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி, ஏற்றை அடர ஏறி,
வேறுபட்டுத் திரிவது என்னே? வேலை சூழ் வெண்காடனீரே! .
8.105.10
8 st/nd Thirumurai
Song # 91
மாணிக்க வாசகர்
திருவாசகம்
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை,
வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்;
ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும்,
கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.
8.106
8 st/nd Thirumurai
Song # 11
மாணிக்க வாசகர்
திருவாசகம்
மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப, யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்? வினையேன் மனத்தே
ஊறும் மட்டே, மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
நீறு பட்டே ஒளி காட்டும் பொன் மேனி நெடுந்தகையே.
10.108
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே.
10.321
10 st/nd Thirumurai
Song # 32
திருமூலர்
திருமந்திரம்
மாறும் மதியும்ஆ தித்தனும் மாறின்றித்
தாறு படாமல்தண் டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.
11.024
11 st/nd Thirumurai
Song # 2
இளம்பெருமான் அடிகள்
சிவபெருமான் திருமும்மணிக்கோவை
மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.
12.140
12 st/nd Thirumurai
Song # 24
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
மாறுமுதற் பண்ணின்பின்
வளர்முல்லைப் பண்ணாக்கி
ஏறியதா ரமும்உழையும்
கிழமைகொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடைமுடியார்
அஞ்செழுத்தி னிசைபெருகக்
கூறியபட் டடைக்குரலாங்
கொடிப்பாலை யினில்நிறுத்தி.
12.190
12 st/nd Thirumurai
Song # 89
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
மாறுபெறல் அருங்கனக மாடம் நீடு
மணிமறுகும் நெடுந்தெருவும் வளத்தில் வந்த
ஆறுபயில் ஆவணவீ திகளும் மற்றும்
அமைந்தநகர் அணிவரைகள் நடுவு போக்கிக்
கூறுபடு நவகண்ட மன்றி மல்கக்
கொண்டஅனே கங்கண்ட மாகி யன்ன
வேறொருமண் ணுலகுதனில் உளதாம் என்ன
விளங்கியமா லோகநிலை மேவிற் றன்றே.
12.410
12 st/nd Thirumurai
Song # 29
சேக்கிழார்
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
மாறுற் றவிறற் படைவாள் அதிகன்
ஊறுற் றபெரும் படைநூ ழில்படப்
பாறுற் றஎயிற் பதிபற் றறவிட்டு
ஏறுற் றனன்ஓ டியிருஞ் சுரமே.
12.520
12 st/nd Thirumurai
Song # 1
சேக்கிழார்
கறைக் கண்டன் சருக்கம்
மாறு கடிந்து மண்காத்த
வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளில்
நனைவாய் திறந்து பொழிசெழுந்தேன்
ஆறு பெறுகி வெள்ளமிடு
மள்ளல் வயலின் மள்ளருழும்
சேறு நறுவா சங்கமழுஞ்
செல்வ நீடூர் திருநீடூர்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81