சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் மன்னவ
மன்னவ     மன்னவன்தன்     மன்னவர்     மன்னவன்     மன்னவற்குத்     மன்னவனை     மன்னவனார்     மன்னவரும்     மன்னவன்பால்     மன்னவனே,    
8.106   8 st/nd Thirumurai   Song # 43   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
மன்னவனே, ஒன்றும் ஆறு அறியாச் சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே, விட்டிடுதி கண்டாய்? மிக்க வேத மெய்ந் நூல்
சொன்னவனே, சொல் கழிந்தவனே, கழியாத் தொழும்பர்
முன்னவனே, பின்னும் ஆனவனே, இம் முழுதையுமே.

8.219   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
மன்னவன் தெம்முனை மேற்செல்லு
   மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல்
   லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலத்
   தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற்
   றோர்தெய்வ முன்னலளே.

12.000   12 st/nd Thirumurai   Song # 105   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னவ னதனைக் கேளா
வருந்திய பசுவை நோக்கி
என்னிதற் குற்ற தென்பான்
அமைச்சரை இகழ்ந்து நோக்க
முன்னுற நிகழ்ந்த எல்லாம்
அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்
தொன்னெறி யமைச்சன் மன்னன்
தாளிணை தொழுது சொல்வான்.
12.000   12 st/nd Thirumurai   Song # 118   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னவன்தன் மைந்தனையங்
கழைத்தொருமந் திரிதன்னை
முன்னிவனை அவ்வீதி
முரண்தேர்க்கா லூர்கவென
அன்னவனும் அதுசெய்யா
தகன்றுதன்ஆ ருயிர்துறப்பத்
தன்னுடைய குலமகனைத்
தான்கொண்டு மறுகணைந்தான்.,
12.000   12 st/nd Thirumurai   Song # 154   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
மன்னவர் திருவுந் தங்கள்
வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள
நம்பியா ரூரர் நாதன்
தன்னடி மனத்துள் கொண்டு
தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னணி மணியார் யோகப்
புரவிமேற் கொண்டு போந்தார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 40   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மன்னவன் தன்னை நோக்கி
வானவர் ஈசர் நேசர்
சென்னியித் துங்க வேழஞ்
சிவகாமி யாண்டார் கொய்து
பன்னகா பரணர்ச் சாத்தக்
கொடுவரும் பள்ளித் தாமம்
தன்னைமுன் பறித்துச் சிந்தத்
தரைப்படத் துணித்து வீழ்த்தேன்.
12.110   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
மன்னவன் வருத்தங் கேட்டு
மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தாம்
நாதனை நேரே காணும்
அந்நெறி தலைநின் றான்என்
றரசனை விரும்பித் தாமும்
மின்னெறித் தனைய வேணி
விகிர்தனை வணங்க வந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 690   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் உரைப்ப தின்றி
இருக்கமா தேவி யார்தாம்
என்னுயிர்க் குயிராய் உள்ள
இறைவநீ உற்ற தென்னோ
முன்னுள மகிழ்ச்சி இன்றி
முகம்புலர்ந் திருந்தாய் இன்று
பன்னிய உள்ளத் தெய்தும்
பருவரல் அருள்செய் என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 693   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் உரைப்பக் கேட்டு
மங்கையர்க் கரசி யார்தாம்
நின்னிலை யிதுவே யாகில்
நீடிய தெய்வத் தன்மை
அன்னவர் வாது செய்தால்
வென்றவர் பக்கஞ் சேர்ந்து
துன்னுவ துறுதி யாகும்
சுழிவுறேல் மன்ன என்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 722   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் அவரை நோக்கி
மற்றிவர் செய்கை எல்லாம்
இன்னவா றெய்தும் நோய்க்கே
ஏதுவா யினஎன் றெண்ணி
மன்னிய சைவ நீதி
மாமறைச் சிறுவர் வந்தால்
அன்னவர் அருளால் இந்நோய்
அகலுமேல் அறிவேன் என்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 725   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் இடும்பை தீர
மற்றவன் பணிமேற் கொண்டே
அன்னமென் டையி னாரும்
அணிமணிச் சிவிகை யேறி
மின்னிடை மடவார் சூழ
வேற்படை அமைச்ச னாரும்
முன்னணைந் தேகச் சண்பை
முதல்வனார் மடத்தைச் சார்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 762   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் மாற்றங் கேட்டு
வடிவுபோல் மனத்து மாசு
துன்னிய அமணர் தென்னர்
தோன்றலை நோக்கி நாங்கள்
உன்னுடம்பு அதனில் வெப்பை
ஒருபுடை வாம பாகம்
முன்னம்மந் திரித்துத் தெய்வ
முயற்சியால் தீர்த்து மென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 768   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் மொழிவான் என்னே
மதித்தஇக் காலம் ஒன்றில்
வெந்நர கொருபா லாகும்
வீட்டின்பம் ஒருபா லாகும்
துன்னுநஞ் சொருபா லாகும்
சுவையமு தொருபா லாகும்
என்வடி வொன்றி லுற்றேன்
இருதிறத் தியல்பும் என்பான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 853   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
மன்னவன் மாறன் கண்டு
மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித்
தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால்
அநுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற
முறைசெய்க என்று கூற.
12.360   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னவற்குத் தண்டுபோய்
வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகத்
துளைநெடுங்கை வரையுகைத்துப்
பன்மணியும் நிதிக்குவையும்
பகட்டினமும் பரித்தொகையும்
இன்னனஎண் ணிலகவர்ந்தே
இகலரசன் முன்கொணர்ந்தார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னவனை விடைகொண்டு
தம்பதியில் வந்தடைந்து
பன்னுபுகழ்ப் பரஞ்சோதி
யார்தாமும் பனிமதிவாழ்
சென்னியரைக் கணபதீச்
சரத்திறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமை யில்வழுவா
முறையன்பிற் செய்கின்றார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 160   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
மன்னவனார் அதுமொழிய
வன்றொண்டர் எதிர்மொழிவார்
என்னுயிருக் கின்னுயிராம்
எழிலாரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன்
மறந்திரேன் மதியணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர்
நீரிருப்பீர் எனவிறைஞ்ச.
12.470   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
மன்னவரும் பணிசெய்ய
வடநூல்தென் தமிழ்முதலாம்
பன்னுகலை பணிசெய்யப்
பார்அளிப்பார் அரசாட்சி
இன்னல்என இகழ்ந்ததனை
எழிற்குமரன் மேல்இழிச்சி
நன்மைநெறித் திருத்தொண்டு
நயந்தளிப்பார் ஆயினார்.
12.570   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
மன்னவன்பால் பெறுஞ்சிறப்பின்
வளமெல்லாம் மதிஅணியும்
பிஞ்ஞகர்தங் கோயில்தொறுந்
திருவமுதின் படிபெருகச்
செந்நெல்மலைக் குவடாகச்
செய்துவருந் திருப்பணியே
பன்னெடுநாள் செய்தொழுகும்
பாங்குபுரிந்து ஓங்குநாள்.
12.570   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
மன்னவன்தன் தெம்முனையில்
வினைவாய்த்து மற்றவன்பால்
நன்னிதியின் குவைபெற்ற
நாட்டியத்தான் குடித்தலைவர்
அந்நகரில் தமர்செய்த
பிழையறிந்த தறியாமே
துன்னினார் சுற்றமெலாம்
துணிப்பனெனுந் துணிவினராய்.
12.650   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
மன்னவன் உரைப்பக் கேட்ட
அன்பர்தாம் மருண்டு நோக்கி
என்னையோர் பொருளாக் கொண்டே
எம்பிரான் அருள்செய் தாரேல்
முன்வரு நிதியி லாமை
மனத்தினால் முயன்று கோயில்
இன்னதாம் என்று சிந்தித்
தெடுத்தவா றெடுத்துச் சொன்னார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5