சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பாவ
பாவிக்கும்     பாவை     பாவியேன்     பாவுங்     பாவக்கொடு     பாவின     பாவுற்ற     பாவம்     பாவமும்     பாவமே     பாவ     பாவியை     பாவார்ந்த    
2.097   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
பாவம் மேவும் உள்ளமோடு, பத்தி இன்றி, நித்தலும்
ஏவம் ஆன செய்து, சாவதன் முனம் இசைந்து நீர்,
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி, நம்
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே!

5.099   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல்
மேவராய், மிகவும் மகிழ்ந்து உள்குமின்!
காவலாளன் கலந்து அருள்செய்யுமே.

7.064   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
பாவமே புரிந்து, அகலிடம் தன்னில் பல பகர்ந்து, அலமந்து, உயிர் வாழ்க்கைக்கு
ஆவ! என்று உழந்து அயர்ந்து வீழாதே, அண்ணல் தன் திறம் அறிவினால் கருதி;
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை, மணியை, மைந்தனை, வானவர்க்கு அமுதை,
தேவ தேவனை, திருத் தினை நகருள் சிவக் கொழுந்தினை, சென்று அடை, மனனே!.

8.128   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
பாவ நாசா, உன் பாதமே அல்லால், பற்று நான் மற்று இலேன் கண்டாய்;
தேவர் தம் தேவே, சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
மூ உலகு உருவ, இருவர் கீழ் மேலாய், முழங்கு அழலாய், நிமிர்ந்தானே!
மா உரியானே! வாழ்கிலேன் கண்டாய்; வருக' என்று, அருள்புரியாயே.

8.224   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
பாவியை வெல்லும் பரிசில்லை
   யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
   போழ்தத்தி னம்பலத்துக்
காவியை வெல்லும் மிடற்றோ
   னருளிற் கதுமெனப்போய்
மேவிய மாநிதி யோடன்பர்
   தேர்வந்து மேவினதே.

9.021   9 st/nd Thirumurai   Song # 10   வேணாட்டடிகள்   திருவிசைப்பா  
பாவார்ந்த தமிழ்மாலை
   பத்தரடித் தொண்டனெடுத்(து)
ஓவாதே அழைக்கின்றான்
   என்றருளின் நன்றுமிகத்
தேவேதென் திருத்தில்லைக்
   கூத்தாடீ நாயடியேன்
சாவாயும் நினைக்காண்டல்
   இனியுனக்குத் தடுப்பரிதே.
   
11.006   11 st/nd Thirumurai   Song # 82   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
பாவிக்கும் பண்டையள் அல்லள்
பரிசறி யாள்சிறுமி
ஆவிக்கும் குற்குலு நாறும்
அகம்நெக அங்கமெங்கும்
காவிக்கண் சோரும்பொச் சாப்புங்
கறைமிடற் றானைக் கண்ணில்
தாவிக்கும் வெண்ணகை யாளம்மெல்
லோதிக்குச் சந்தித்தவே.

11.011   11 st/nd Thirumurai   Song # 10   நக்கீரதேவ நாயனார்   திருவலஞ்சுழி மும்மணிக்கோவை  
பாவை ஆடிய துறையும் பாவை
மருவொடு வளர்ந்த வன்னமும் மருவித்
திருவடி அடியேன் தீண்டிய திறனும்
கொடியேன் உளங்கொண்ட சூழலுங் கள்ளக்
கருங்கண் போன்ற காவியும் நெருங்கி
அவளே போன்ற தன்றே தவளச்
சாம்பல் அம்பொடி சாந்தெனத் தைவந்து
தேம்பல் வெண்பிறை சென்னிமிசை வைத்த
வெள்ளேற் றுழவன் வீங்குபுனல் வலஞ்சுழி
வண்டினம் பாடுஞ் சோலைக்
கண்ட அம்மஅக் கடிபொழில் தானே.

11.037   11 st/nd Thirumurai   Song # 50   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள்
மேவும் ஒலியும் வியன்நகரங் காவலர்கள்

12.100   12 st/nd Thirumurai   Song # 169   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
பாவியேன் கண்ட வண்ணம்  
பரமனார்க் கடுத்த தென்னோ
ஆவியின் இனிய எங்கள்  
அத்தனார்க் கடுத்த தென்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க் கடுத்த தென்னோ
ஆவதொன் றறிகி லேன்யான்
என்செய்கேன் என்று பின்னும்.
12.200   12 st/nd Thirumurai   Song # 18   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
பாவுங் கலைகள் ஆகமநூல்
பரப்பின் தொகுதிப் பான்மையினால்
மேவும் பெருமை அருமறைகள்
மூல மாக விளங்குலகில்
யாவுந் தெளிந்த பொருளின்நிலையே
எய்த உணர்ந்த உள்ளத்தால்
ஆவின் பெருமை உள்ளபடி
அறிந்தார் ஆயற் கருள்செய்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 114   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
பாவக்கொடு வினைமுற்றிய
படிறுற்றடு கொடியோர்
நாவுக்கர செதிர்முற்கொடு
நணுகிக்கரு வரைபோல்
ஏவிச்செறு பொருகைக்கரி
யினையுய்த்திட வெருளார்
சேவிற்றிகழ் பவர்பொற்கழல்
தெளிவுற்றனர் பெரியோர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 238   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாவின திசைவழி பாடி அங்ககன்
றியாவருந் தொழுதுட னேத்த எய்தினார்
மூவுல குய்யநஞ் சுண்ட மூர்த்தியார்
மேவிய பெருந்திரு விசய மங்கையில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 841   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
பாவுற்ற பாராழி வட்டத் திருப்பாட்டி னுண்மை
காவல் தொழிலான் எனும் கண்ணனும் காவல்பெற்ற
தியாவர்க்கு மேலாய ஈசன் அருள்ஆழி பெற்று
மேவுற்ற சீருற் றதுவென்றனர் வேத வாயர்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5