![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் பரிய
பரியங்க
பரியா
பரியானை
பரிய
பரியர்;
பரியது
2.095
2 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரிய மாசுணம் கயிறா, பருப்பதம் அதற்கு மத்து ஆக,
பெரிய வேலையைக் கலங்க, பேணிய வானவர் கடைய,
கரிய நஞ்சு அது தோன்றக் கலங்கிய அவர் தமைக் கண்டு,
அரிய ஆர் அமுது ஆக்கும் அடிகளுக்கு இடம்
அரசிலியே.
3.068
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
பரிய திரை பெரிய புனல், வரிய புலி உரி அது உடை, பரிசை உடையன்,
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர், பிரிவு இல் நகர்தான்-
பெரிய எரி உருவம் அது தெரிய, உரு பரிவு தரும் அருமை அதனால்,
கரியவனும், அரிய மறை புரியவனும், மருவு கயிலாயமலையே.
5.027
5 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
பரியர்; நுண்ணியர்; பார்த்தற்கு அரியவர்;
அரிய பாடலர்; ஆடலர்; அன்றியும்
கரிய கண்டத்தர்; காட்சி பிறர்க்கு எலாம்
அரியர்; தொண்டர்க்கு எளியர்-ஐயாறரே.
6.028
6 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
பரியது ஓர் பாம்பு அரைமேல் ஆர்த்தார்போலும்; பாசுபதம் பார்த்தற்கு அளித்தார்போலும்;
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார்போலும்; காபாலம் கட்டங்கக் கொடியார்போலும்;
பெரியது ஓர் மலை வில்லா எய்தார்போலும்; பேர் நந்தி என்னும் பெயரார்போலும்;
அரியது ஓர் அரணங்கள் அட்டார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.
10.319
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் யோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.
11.006
11 st/nd Thirumurai
Song # 96
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
பரியா தனவந்த பாவமும்
பற்றும்மற் றும்பணிந்தார்க்
குரியான் எனச்சொல்லி உன்னுட
னாவன் எனவடியார்க்
கரியான் இவனென்று காட்டுவன்
என்றென் றிவையிவையே
பிரியா துறையுஞ் சடையான்
அடிக்கென்றும் பேசுதுமே.
11.022
11 st/nd Thirumurai
Song # 7
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
பரியானை ஊராது பைங்கண் ஏறூரும்
பரியானைப் பாவிக்க லாகாப் பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF