![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் படி
படி
படியுடை
படிகாற்
படிமுழுதும்
படிறா
படியேறும்
படிவம்
படியில்
படியேறு
படிமிசை
படியுள்
படிமப்
1.087
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன,
கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை,
படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன்
அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.
3.093
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படியுள் ஆர் விடையினர், பாய் புலித்தோலினர், பாவநாசர்
பொடி கொள் மா மேனியர், பூதம் ஆர் படையினர், பூணநூலர்,
கடி கொள் மா மலர் இடும் அடியினர், பிடி நடை
மங்கையோடும்
அடிகளார் அருள் புரிந்து இருப்பு இடம் அம்பர்மாகாளம்
தானே.
3.112
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
படி கொள் மேனியர், கடி கொள் கொன்றையர், பட்டினத்து
உறை பல்லவனீச்சுரத்து
அடிகளாய் இருப்பார், இவர் தன்மை அறிவார் ஆர்?
7.033
7 st/nd Thirumurai
Song # 10
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
படி செய் நீர்மையின் பத்தர்காள்! பணிந்து ஏத்தினேன்; பணியீர், அருள்!
வடிவு இலான் திரு நாவலூரான்-வனப்பகை அப்பன், வன் தொண்டன்,
செடியன் ஆகிலும் தீயன் ஆகிலும் தம்மையே மனம் சிந்திக்கும்
அடியன்-ஊரனை ஆள்வரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
8.102
8 st/nd Thirumurai
Song # 16
மாணிக்க வாசகர்
திருவாசகம்
படிமப் பாதம் வைத்த அப் பரிசும்;
ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து,
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்;
திருவாஞ்சியத்தில் சீர் பெற இருந்து,
மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;
8.104
8 st/nd Thirumurai
Song # 43
மாணிக்க வாசகர்
திருவாசகம்
படி உறப் பயின்ற பாவக, போற்றி!
அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!
நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல்,
பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி!
ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி!
10.803
10 st/nd Thirumurai
Song # 24
திருமூலர்
திருமந்திரம்
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.
10.928
10 st/nd Thirumurai
Song # 31
திருமூலர்
திருமந்திரம்
படிகாற் பிரமன்செய் பாசம் அறுத்து
நெடியோன் குறுமைசெய் நேசம் அறுத்து
செடியார் தவ்ததினில் செய்தொழில் நீக்கி
அடியேனை உய்யவைத்(து) அன்புகொண் டானே.
11.005
11 st/nd Thirumurai
Song # 10
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
திருக்கோயில் திருவெண்பா சேத்திரத்
படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்
டோடேந்தி யுண்ப துறும்.
11.006
11 st/nd Thirumurai
Song # 13
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
படிறா யினசொல்லிப் பாழுடல்
ஓம்பிப் பலகடைச்சென்
றிடறா தொழிதும் எழு நெஞ்ச
மேயெரி ஆடியெம்மான்
கடல்தா யினநஞ்சம் உண்ட
பிரான்கழல் சேர்தல்கண்டாய்
உடல்தான் உளபயன் ஆவசொன்
னேனிவ் வுலகினுள்ளே.
11.023
11 st/nd Thirumurai
Song # 78
பரணதேவ நாயனார்
சிவபெருமான் திருவந்தாதி
படியேறும் பார்த்துப் பரத்தோடும் கூட்டி
படியேரு பார்த்துப் பரன்இப் படிஏனைப்
பாருடையாய் பைங்கண் புலியதளாய் பால்நீற்றாய்
பாருடையாய் யானுன் பரம்.
12.270
12 st/nd Thirumurai
Song # 30
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
படிவம் மாற்றிப் பழம்படியே
நிகழ்வுங் கண்டு பரமர்பால்
அடியேன் பிழையைப் பொறுத்தருள
வேண்டும் என்று பணிந்தருளால்
குடியும் திருவா ரூரகத்துப்
புகுந்து வாழ்வார் குவலயத்து
நெடிது பெருகுந் திருத்தொண்டு
நிகழச் செய்து நிலவுவார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 501
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
படியில் ஞானமுண் டருளிய
பிள்ளையைப் பணிதற்
கடியர் சென்றெதிர் கொளஎழுந்
தருளும்அஞ் ஞான்று
வடிகொள் சூலத்தர் மன்னிய
பொன்மதில் ஆரூர்க்
கடிகொள் பேரணிப் பொலிவையார்முடிவுறக் காண்பார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 94
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
படியேறு புகழ்ச்சேரர்
பெருமானும் பார்மிசைவீழ்ந்
தடியேனைப் பொருளாக
அளித்ததிரு முகக்கருணை
முடிவுஏதென் றறிந்திலேன்
எனமொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார்
முன்பரவிக் களிகூர்ந்தார்.
12.530
12 st/nd Thirumurai
Song # 1
சேக்கிழார்
கடல் சூழ்ந்த சருக்கம்
படிமிசை நிகழ்ந்த தொல்லைப்
பல்லவர் குலத்து வந்தார்
கடிமதில் மூன்றும் செற்ற
கங்கைவார் சடையார் செய்ய
அடிமலர் அன்றி வேறொன்
றறிவினில் குறியா நீர்மைக்
கொடிநெடுந் தானை மன்னர்
கோக்கழற் சிங்கர் என்பார்.
12.720
12 st/nd Thirumurai
Song # 2
சேக்கிழார்
வெள்ளானைச் சருக்கம்
படியில் நீடும் பத்திமுதல்
அன்பு நீரில் பணைத்தோங்கி
வடிவு நம்பி யாரூரர்
செம்பொன் மேனி வனப்பாகக்
கடிய வெய்ய இருவினையின்
களைகட் டெழுந்து கதிர்பரப்பி
முடிவி லாத சிவபோகம்
முதிர்ந்து முறுகி விளைந்ததால்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF