சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நீர்
நீர்     நீர்பணி     நீர்நாடு     நீர்இடைத்     நீர்த்திரளை    
1.001   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் பரந்த நிமிர் புன் சடை மேல் ஒர் நிலா வெண்மதி சூடி,
ஏர் பரந்த இன வெள் வளை சோர, என் உள்ளம் கவர் கள்வன்-
ஊர் பரந்த உலகின் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!

1.043   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து,
தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்
போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்
கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.

1.047   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய்,
ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னே
கார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப,
சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே?

1.050   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத்
தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!

1.071   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஆர் முடியர்; கறை கொள் கண்டர்; மறைகள் நிறை நாவர்
பார் ஆர் புகழால் பத்தர் சித்தர் பாடி ஆடவே,
தேர் ஆர் வீதி முழவு ஆர் விழவின் ஒலியும் திசை செல்ல,
சீர் ஆர் கோலம் பொலியும் நறையூர்ச் சித்தீச்சுரத்தாரே.

1.076   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான், நினைப்பவர் மனத்து
உளான், நித்தமா ஏத்தும்
ஊர் உளான், எனது உரை தனது உரை ஆக, ஒற்றை வெள் ஏறு
உகந்து ஏறிய ஒருவன்-
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அஞ்சிறை
வண்டு இனம் பாடும்
ஏர் உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்
  பேணி, என் எழில் கொள்வது இயல்பே?

1.100   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் இடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரை கொன்றை
சீர் இடம் கொண்ட எம் இறைபோலும், சேய்து ஆய
ஓர் உடம்புள்ளே உமை ஒருபாகம் உடன் ஆகி,
பாரிடம் பாட, இனிது உறை கோயில் பரங்குன்றே.

2.042   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஆர வார்சடையான், நீறு உடையான், ஏறு உடையான்,
கார் ஆர் பூங்கொன்றையினான், காதலித்த தொல் கோயில்
கூர் ஆரல் வாய் நிறையக் கொண்டு அயலே
கோட்டகத்தில்
தாரா இல்கு ஆக்கூரில் - தன் தோன்றி மாடமே.

2.054   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிரை ஆர் கழல் சேர் பாதத்தீர்!
ஊர் ஆர்ந்த சில்பலியீர்! உழைமான் உரி தோல் ஆடையீர்!
போர் ஆர்ந்த தெண்திரை சென்று அணையும் கானல் பூம் புகலி,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

2.056   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்!
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர்! பூதம் பாடலீர்!
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர்! இடைமருதில்,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

2.081   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம் பாம்பினொடும்
ஏர் கொண்ட கொன்றையினொடு எழில் மத்தம் இலங்கவே,
சீர் கொண்ட மாளிகைமேல் சேயிழையார் வாழ்த்து
உரைப்ப,
கார் கொண்ட வேணுபுரம் பதி ஆகக் கலந்தீரே.

2.104   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் கொள் நீள் சடை முடியனை, நித்திலத் தொத்தினை,
நிகர் இல்லாப்
பார் கொள் பார் இடத்தவர் தொழும் பவளத்தை,
பசும்பொன்னை, விசும்பு ஆரும்
கார் கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத்து உறையும்
கற்பகம் தன்னை,
சீர் கொள் செல்வங்கள் ஏத்த வல்லார் வினை தேய்வது
திணம் ஆமே.

2.105   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் உலாவிய சடை இடை அரவொடு, மதி, சிரம்
நிரைமாலை,
வார் உலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை
ஆர்க்க,
ஏர் உலாவிய இறைவனது உறைவு இடம் எழில் திகழ்
கீழ்வேளூர்
சீர் உலாவிய சிந்தை செய்து அணைபவர் பிணியொடு
வினை போமே.

3.006   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேர் அமண் செற்ற செல்வனை உள்க,
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்கும் ஆறு அருள் நம்பனே!

3.014   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் உடைப் போது உறைவானும் மாலும் ஆய்,
சீர் உடைக் கழல் அடி சென்னி காண்கிலர்;
பார் உடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவிய
தார் உடைக்கொன்றை அம் தலைவர், தன்மையே!

3.020   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் மல்கு மலர் உறைவானும், மாலும் ஆய்,
சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர்;
போர் மல்கு மழுவினன் மேய பூவணம்,
ஏர் மல்கு மலர் புனைந்து, ஏத்தல் இன்பமே.

3.033   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர்இடைத் துயின்றவன், தம்பி,நீள் சாம்புவான்,
போர்உடைச் சுக்கிரீவன்,அனு மான்தொழ;
கார்உடை நஞ்சுஉண்டு, காத்து;அருள் செய்தஎம்
சீர்உடைச் சேடர்வாழ் திருஉசாத் தானமே.

3.085   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் அணி மலர் மிசை உறைபவன், நிறை கடல் உறு துயில்
நாரணன், என இவர் இருவரும் நறுமலர் அடி முடி
ஓர் உணர்வினர் செலல் உறல் அரும் உருவினொடு ஒளி திகழ்
வீர(அ)ணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே.

3.096   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர் மல்கி உறைய வல்லீரே;
ஊர் மல்கி உறைய வல்லீர்! உமை உள்குதல்
பார் மல்கு புகழவர் பண்பே!

3.104   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நீர் புல்கு புன்சடை நின்று இலங்க, நெடு வெண்மதி சூடி,
தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து, தலை ஆர் பலி தேர்வார்
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பார் புல்கு தொல்புகழால் விளங்கும் பரிதி(ந்) நியமமே.

4.036   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் அவன்; தீயினோடு நிழல் அவன்; எழிலது ஆய
பார் அவன்; விண்ணின் மிக்க பரம் அவன்; பரமயோகி;
ஆரவன்; அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப்
பார் அகத்து அமுதம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

5.016   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் உலாம் நிமிர்புன்சடையா! எனா
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய,
வார் உலாம் வனமென்முலையாளொடும்,
பேர் உளார் அவர்-பேரெயிலாளரே.

5.087   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் பரந்த நிமிர் புன்சடையின்மேல்
ஊர் பரந்த உரகம் அணிபவர்-
சீர் பரந்த திரு மணஞ்சேரியார்;
ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே.

6.010   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் உலாம் சடைமுடிமேல்-திங்கள் ஏற்றார்;
 நெருப்பு ஏற்றார், அங்கையில் நிறையும் ஏற்றார்;
ஊர் எலாம் பலி ஏற்றார்;அரவம் ஏற்றார்;
 ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்;
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார்;
 மழு ஏற்றார்;மான்மறி ஓர் கையில் ஏற்றார்;
பார் உலாம் புகழ் ஏற்றார்;பைங்கண் ஏற்றார்;
 பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

6.019   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை, நிலம் மருவி நீர் ஓடக் கண்டான் தன்னை,
பால்-திரளைப் பயின்று ஆட வல்லான் தன்னை,
பகைத்து எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்தான் தன்னை,
கால்-திரள் ஆய் மேகத்தினுள்ளே நின்று கடுங் குரல் ஆய் இடிப்பானை, கண் ஓர் நெற்றித்
தீத்திரளை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே.

6.025   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் ஊரும் செஞ்சடையாய்! நெற்றிக்கண்ணாய்! நிலாத்திங்கள்-துண்டத்தாய்! நின்னைத் தேடி,
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம்   எலாம் திரிதந்து, நின்னைக் காண்பான்,
தேர் ஊரும் நெடுவீதி பற்றி நின்று, திருமாலும் நான்முகனும், தேர்ந்தும் காணாது,
ஆரூரா! ஆரூரா! என்கின்றார்கள்-அமரர்கள் தம் பெருமானே! ஆரூராயே!.

6.030   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் ஏறு சடைமுடி எம் நிமலன்தான்காண்; நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான்காண்;
வார் ஏறு வனமுலையாள் பாகத்தான்காண்;
வளர்மதி சேர் சடையான்காண்; மாதேவன்காண்;
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான்காண்; கல்லாலின்கீழ் அறங்கள் சொல்லினான்காண்-
சீர் ஏறு மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே.

6.039   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் ஆகி, நெடுவரைகள் ஆனான் கண்டாய்; நிழல்   ஆகி, நீள் விசும்பும் ஆனான் கண்டாய்;
பார் ஆகி, பௌவம் ஏழ் ஆனான் கண்டாய்; பகல் ஆகி, வான் ஆகி, நின்றான் கண்டாய்;
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய்; அணு ஆகி, ஆதி ஆய், நின்றான் கண்டாய்;
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே.

6.083   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் ஆரும் செஞ்சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி, நீதியாலே
சீர் ஆரும் மறை ஓதி, உலகம் உய்யச் செழுங் கடலைக் கடைந்த கடல் நஞ்சம் உண்ட
கார் ஆரும் கண்டனை; கச்சி மேய கண்ணுதலை; கடல் ஒற்றி கருதினானை;
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர்ப் பரஞ்சுடரை; கண்டு அடியேன் உய்ந்த ஆறே!.

6.094   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் ஆகி, நீள் அகலம் தானே யாகி, நிழல் ஆகி, நீள் விசும்பின் உச்சி யாகி,
பேர் ஆகி, பேருக்கு ஓர் பெருமை யாகி, பெரு   மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி,
ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்
பார் ஆகி, பண் ஆகி, பாடல் ஆகி, பரஞ்சுடர் ஆய், சென்று அடிகள் நின்ற வாறே!.

6.099   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நீர் ஏறு செஞ்சடை மேல் நிலா வெண் திங்கள்
நீங்காமை வைத்து உகந்த நீதியானே!
பார் ஏறு படுதலையில் பலி கொள்வானே!
பண்டு அநங்கற் காய்ந்தானே! பாவநாசா!
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே!
கருங்கைக் களிற்று உரிவை கதறப் போர்த்த
போர் ஏறே! உன் அடிக்கே போதுகின்றேன்
பூம் புகலூர் மேவிய புண்ணியனே!.

7.003   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனைத்
தேர் ஊர் நெடுவீதி நல் மாடம் மலி தென் நாவலர் கோன்-அடித்தொண்டன், அணி
ஆரூரன்-உரைத்தன நல்-தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார்
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர்-அவர் ஆகி, ஓர் விண்முழுது ஆள்பவரே .

7.082   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீர் ஊர் தரு நிமலன், திருமலையார்க்கு அயல் அருகே
தேர் ஊர் தரும் அரக்கன் சிரம் நெரித்தான், திருச் சுழியல்
பேர் ஊர் என உறைவான், அடிப்பெயர் நாவலர்கோமான்
ஆரூரன-தமிழ்மாலைபத்து அறிவார் துயர் இலரே.

7.092   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நீர் ஏற ஏறும் நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியை-
போர் ஏறு அது ஏறியை, புக்கொளியூர் அவிநாசியை,
கார் ஏறு கண்டனை,-தொண்டன் ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை, துன்பமே.

8.136   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நீர் இன்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சம் கொண்டீர்;
பார் இன்ப வெள்ளம் கொள, பரி மேற்கொண்ட பாண்டியனார்,
ஓர் இன்ப வெள்ளத்து உருக் கொண்டு, தொண்டரை உள்ளம் கொண்டார்;
பேர் இன்ப வெள்ளத்துள், பெய் கழலே சென்று பேணுமினே.

10.413   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்இரீம் உன்சிரீம் ஈறாம்
தாரணி யும்புகழ்த் தையல்நல் லாளைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் வீரே.

12.280   12 st/nd Thirumurai   Song # 628   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நீர்நாடு கடந்தருளி
நெடும்புறவிற் குறும்புதல்கள்
கார்நாடு முகைமுல்லைக்
கடிநாறு நிலங்கடந்து
போர்நாடுஞ் சிலைமறவர்
புன்புலவைப் பிடைபோகிச்
சீர்நாடு தென்பாண்டி
நன்னாடு சென்றணைவார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D