![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நீதி
நீதி
நீதியின்
நீதியார்,
நீதியர்,
நீதியால்
நீதியால்வாழ
நீதியை,
நீதியைக்
நீதிஆய்,
நீதியில்
1.016
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீதி அறியாத அமண்கையரொடு மண்டைப்
போதியவர் ஓது உரை கொள்ளார் புளமங்கை
ஆதி அவர் கோயில் திரு ஆலந்துறை தொழுமின்!
சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே.
1.096
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச்
சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!
2.028
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீதியார், நினைந்து ஆய நால்மறை
ஓதியாரொடும் கூடலார், குழைக்
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியார், அடியார்தம் அன்பரே.
2.033
2 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை
பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை
வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும்
ஓதி, அரன்நாமமும் உணர்த்திடும் நள்ளாறே.
2.079
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீதியால் வாழ்கிலை; நாள் செலா நின்றன, நித்தம்
நோய்கள்
வாதியா; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே?
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண்
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!
3.902
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நீதி யுற்றிடும் நான்முகன் நாரணன்
பேத முற்றுப் பிரிந்தழ லாய்நிமிர்
நாதன் உற்றன நன்மலர் பாய்இருக்
கீதம் ஏற்ற கிளியன்ன வூரனே.
4.025
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக;
பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை,
சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி
ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே.
4.026
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்;
ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்;
சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான்,
ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே!
4.074
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை,
சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர்
சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா
ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே!
5.002
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீதியை, நிறைவை, மறைநான்கு உடன்
ஓதியை, ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
சோதியை, சுடர்ச் செம்பொனின் அம்பலத்து
ஆதியை, அடியேன் மறந்து உய்வனோ?
5.013
5 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீதி வானவர் நித்தல் நியமம் செய்து
ஓதி வானவரும்(ம்) உணராதது ஓர்
வேதியா! விகிர்தா! திரு வீழியுள்
ஆதியே!-அடியேனைக் குறிக்கொளே!
5.057
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீதியால் - தொழுவார்கள் தலைவனை,
வாதை ஆன விடுக்கும் மணியினை,-
கோதி வண்டு அறையும் திருக்கோளிலி
வேதநாயகன் பாதம் விரும்புமே!
5.058
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீதியைக் கெட நின்று அமணே உணும்
சாதியைக் கெடுமா செய்த சங்கரன்,
ஆதியை, பழையாறை வடதளிச்
சோதியை, தொழுவார் துயர் தீருமே.
6.026
6 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீதிஆய், நிலன் ஆகி, நெருப்பு ஆய், நீர் ஆய், நிறை கால் ஆய், இவையிற்றின் நியமம் ஆகி,
பாதிஆய், ஒன்று ஆகி, இரண்டு ஆய், மூன்று ஆய், பரமாணு ஆய், பழுத்த பண்கள் ஆகி,
சோதி ஆய், இருள் ஆகி, சுவைகள் ஆகி. சுவை கலந்த அப்பால் ஆய், வீடு ஆய், வீட்டின்
ஆதி ஆய் அந்தம் ஆய், நின்றான் தன்னை- ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.
7.073
7 st/nd Thirumurai
Song # 5
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நீதியில் ஒன்றும் வழுவேன்; நிட்கண்டகம் செய்து வாழ்வேன்;
வேதியர் தம்மை வெகுளேன்; வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்;
சோதியில் சோதி எம்மானை, சுண்ண வெண் நீறு அணிந்திட்ட
ஆதி, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!
8.126
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நீதி ஆவன யாவையும் நினைக்கிலேன்; நினைப்பவரொடும் கூடேன்;
ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன் தனை என் அடியான்' என்று,
பாதி மாதொடும் கூடிய பரம்பரன், நிரந்தரமாய் நின்ற
ஆதி ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
10.737
10 st/nd Thirumurai
Song # 13
திருமூலர்
திருமந்திரம்
நீதி யிலோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்தறி வார்இல்லை
ஆதி அயனென் றமரர் பிரானென்று
நாதியே வைத்தது நாடுகின் றேனே
11.037
11 st/nd Thirumurai
Song # 41
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
நீதி நிலையுணர்வார் நீள் நிலத்துள் ஐம்புலனும்
காதல் விடுதவங்கள் காமுறு வார் ஆதி
11.038
11 st/nd Thirumurai
Song # 64
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
நீதியின் நிறைபுகழ்
மேதகு புகலிமன்
மாதமிழ் விரகனை
ஓதுவ துறுதியே. 38
பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
12.000
12 st/nd Thirumurai
Song # 322
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
நீதி மாதவர் நெஞ்சிற் பொலிந்தன
வேதி யாதவர் தம்மைவே திப்பன
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய
ஆதி மாலயன் காணா வளவின.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF