சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நாய
நாயக     நாயோட்டு     நாயனைய     நாய     நாயனார்உமக்     நாயனார்     நாயனை     நாயினும்     நாயேன்     நாயேனைத்     நாயின்     நாய்வயி    
4.076   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நாயினும் கடைப்பட்டேனை நன்நெறி காட்டி ஆண்டாய்;
ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே! அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய்; நிலாவி நிற்க,
நோய் அவை சாரும் ஆகில், நோக்கி நீ அருள் செயாயே!

7.001   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை,
பேய் ஆய்த் திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்;
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .

8.110   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை,
பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை,
சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும்
தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!

8.113   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து,
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்,
மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின்
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ!

8.133   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து, நீயே ஆட்கொண்டாய்;
மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி,
ஆயக் கடவேன், நானோ தான்? என்னதோ, இங்கு, அதிகாரம்?
காயத்து இடுவாய்; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய்; கண் நுதலே!

8.224   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
நாய்வயி னுள்ள குணமுமில்
   லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம்
   பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும்
   பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத்
   தக்க துன் சிக்கனவே.

10.311   10 st/nd Thirumurai   Song # 52   திருமூலர்   திருமந்திரம்  
நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்
போயக மான புவனங்கள் கண்டுபின்
பேயக மாகிய பேரொளி காணுமே. 

10.909   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
நாயோட்டு மந்திரம் நான்மறை நால்வேதம்
நாயோட்டு மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த மாம்சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமே.

11.026   11 st/nd Thirumurai   Song # 25   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாயருளும் தம்பிரான் தூயவிரை
மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.

12.000   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
நாய கன்கழல் சேவிக்க நான்முகன்
மேய காலம் அலாமையின் மீண்டவன்
தூய மால்வரைச் சோதியின் மூழ்கியொன்
றாய அன்னமும் காணா தயர்க்குமால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 527   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாயனார்உமக் களித்தருள்
செய்தஇந் நலங்கிளர் ஒளிமுத்தின்
தூய யானத்தின் மிசை யெழுந்
தருளுவீர் என்றலும் சுடர்த்திங்கள்
மேய வேணியார் அருளும்இவ்
வாறெனில் விரும்புதொண் டர்களோடும்
போய தெங்குநீர் அங்குயான்
பின்வரப் போவதென் றருள்செய்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 127   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாயனார் முதுகுன்றர்
நமக்களித்த நன்னிதியம்
தூயமணி முத்தாற்றில்
புகவிட்டேம் துணைவரவர்
கோயிலின்மா ளிகைமேல்பால்
குளத்தில்அவ ரருளாலே
போய்எடுத்துக் கொடுபோதப்
போதுவாய் எனப்புகல.
12.290   12 st/nd Thirumurai   Song # 328   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாய னீரே நான்உமக்கிங்
கடியே னாகில் நீர்எனக்குத்
தாயி னல்ல தோழருமாந்
தம்பி ரானா ரேயாகில்
ஆய வறிவும் இழந்தழிவேன்
அயர்வு நோக்கி அவ்வளவும்
போயிவ் விரவே பரவையுறு
புலவி தீர்த்துத் தாருமென.
12.290   12 st/nd Thirumurai   Song # 384   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நாயனை அடியான் ஏவும்
காரியம் நன்று சாலம்
ஏயுமென் றிதனைச் செய்வான்
தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க வொண்ணாப்
பிழையினைச் செவியால் கேட்ப
தாயின பின்னும் மாயா
திருந்ததென் னாவி யென்பார்.
12.460   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
நாய னார்தொண் டரைநலங் கூறலார்
சாய நாவரி சத்தியார் தாள்பணிந்து
ஆய மாதவத் தையடி கள்ளெனும்
தூய காடவர் தந்திறஞ் சொல்லுவாம்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF