![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நாம
நாமமொ
நாமாலை
நாமத்தி
நாமே
நாமம்
நாமுகந்
நாம
நாமார்க்குங்
நாமகர
நாமறியோம்
நாம்இங்
நாம்
நாமகள்
3.102
3 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன் ஓங்கு நாரையூர்
தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில,
ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில்,
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.
6.098
6 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;
இன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;
தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மை ஆன
சங்கரன்,
நல் சங்க வெண்குழை ஓர் காதின்
கோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள் ஆய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே.
8.114
8 st/nd Thirumurai
Song # 13
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம் நெரித் துந்தீபற
தொல்லை வினைகெட உந்தீபற.
10.928
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
நாமமொ ராயிரம் ஓதுமின் நாதனை
ஏமமொ ராயிரத் துள்ளே யிசைவீர்கள்
ஓமமொ ராயிரம் ஓதவல் லாரவர்
காமமோ ராயிரங் கண்டொழிந் தாரே.
11.004
11 st/nd Thirumurai
Song # 87
காரைக்கால் அம்மையார்
அற்புதத் திருவந்தாதி
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினால் எற்றே தடுமே
எறிவினையே என்னும் இருள்.
11.026
11 st/nd Thirumurai
Song # 14
பட்டினத்துப் பிள்ளையார்
கோயில் நான்மணிமாலை
நாமத்தி னால்என்தன் நாத்திருத்
தேன்நறை மாமலர்சேர்
தாமத்தி னாலுன் சரண்பணி
யேன்சார்வ தென்கொடுநான்
வாமத்தி லேயொரு மானைத்
தரித்தொரு மானைவைத்தாய்
சேமத்தி னாலுன் திருத்தில்லை
சேர்வதோர் செந்நெறியே.
11.028
11 st/nd Thirumurai
Song # 15
பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
நாமே இடையுள்ள வாறறி
வாமினி நாங்கள்சொல்லல்
ஆமே மருதன் மருத
வனத்தன்னம் அன்னவரைப்
பூமேல் அணிந்து பிழைக்கச்செய்
தாரொரு பொட்டுமிட்டார்
தாமே தளர்பவ ரைப்பாரம்
ஏற்றுதல் தக்கதன்றே.
11.028
11 st/nd Thirumurai
Song # 20
பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
நாமம் நவிற்றாய்மனனே நாரியர்கள் தோள்தோய்ந்து
காமம் நவிற்றிக் கழிந்தொழியல் ஆமோ
பொருதவனத் தானையுரி போர்த்தருளும் எங்கள்
மருதவனத் தானை வளைந்து.
11.034
11 st/nd Thirumurai
Song # 59
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
நாமுகந் தேத்திய ஞானசம்
பந்தனை நண்ணலர்போல்
ஏமுக வெஞ்சரஞ் சிந்திவல்
இஞ்சி யிடிபடுக்கத்
தீமுகந் தோன்றிகள் தோன்றத்
தளவம் முகையரும்பக்
காமுகம் பூமுகங் காட்டிநின்
ரார்த்தன காரினமே.
12.160
12 st/nd Thirumurai
Song # 2
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
நாம மூதூர் மற்றதனுள்
நல்லோர் மனம்போல் அவரணிந்த
சேம நிலவு திருநீற்றின்
சிறந்த வெண்மைத் திருந்தொளியால்
யாம இருளும் வெளியாக்கும்
இரவே யல்ல விரைமலர்மேற்
காமர் மதுவுண் சிறைவண்டுங்
களங்க மின்றி விளங்குமால்.
12.210
12 st/nd Thirumurai
Song # 93
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
நாமார்க்குங் குடியல்லோம்
என்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன்
குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின்
செழுந்திருத்தாண் டகம்பாடி
ஆமாறு நீரழைக்கும்
அடைவிலமென் றருள்செய்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 41
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
நாமகர ணத்தழகு நாள்பெற நிறுத்திச்
சேமவுத யப்பரிதி யில்திகழ் பிரானைத்
தாமரை மிசைத்தனி முதற்குழவி யென்னத்
தூமணி நிரைத்தணிசெய் தொட்டில்அமர் வித்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 46
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
நாமறியோம் பரசமயம்
உலகிலெதிர் நாடாது
போமகல என்றங்கை
தட்டுவதும் புனிதன்பால்
காமருதா ளம்பெறுதற்
கொத்துவதுங் காட்டுவபோல்
தாமரைச்செங் கைகளினால்
சப்பாணி கொட்டினார்.
12.360
12 st/nd Thirumurai
Song # 80
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
நாம்இங் குண்ப தவன்வந்தால்
நாடி யழையு மெனநம்பர்
தாமங் கருளிச் செயத்தரியார்
தலைவ ரமுது செய்தருள
யாமிங் கென்செய் தாலாகும்
என்பார் விரைவுற் றெழுந்தருளால்
பூமென் குழலார் தம்மோடும்
புறம்போ யழைக்கப் புகும்பொழுது.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE