![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நாட
நாட
நாட்டுக்கு
நாடோறும்
நாட்டம்
நாடும்
நாடியின்
நாடவல்
நாடிகள்
நாடறி
நாடொறும்
நாடிய
நாடும்,
நாட்டமிட்ட
நாடக
நாடே
நாடுமின்
நாட்டு
நாடு
நாடியகழல்
நாட்டார்
நாட்டுமறை
நாடினார்
நாடி
நாடினர்
நாடினார்,
நாடி,
நாடகம்
நாடகத்தால்
1.027
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாட வல்ல மலரான், மாலும் ஆய்த்
தேட நின்றார், உறையும் திருப் புன்கூர்
ஆட வல்ல அடிகள் அவர் போலும்
பாடல் ஆடல் பயிலும் பரமரே.
2.026
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாடினார் மணிவண்ணன், நான்முகன்,
கூடினார் குறுகாத கொள்கையா
நீடினார் அ நெல்வாயிலார்; தலை
ஓடினார், எமது உச்சியாரே.
2.049
2 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாடு எலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு வார் பொழில்
காடு எலாம் மலர் தேன் துளிக்கும் கடல் காழி,
தோடு உலாவிய காது உளாய்! சுரிசங்க வெண்குழையாய்! என்று என்று உன்னும்
வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றாரே.
2.072
2 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி,
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் இலை சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.
3.016
3 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாடி நின்று, அறிவு இல் நாண் இலிகள், சாக்கியர்
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல;
பாடுவர், நால்மறை; பயின்ற மாதொடும்
கூடுவர், திரு உரு; கொள்ளிக்காடரே.
3.104
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த,
கூடலர் ஆடலர் ஆகி, நாளும் குழகர் பலி தேர்வார்
ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம்போலும்
பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதி(ந்) நியமமே.
4.020
4 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
நாடினார், -கமலம்மலர் அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன்,
நாடிக் காணமாட்டாத் தழல் ஆய நம்பானை,
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடிக் கண்டு கொண்டேன்; திரு ஆரூர் அம்மானே!
4.059
4 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர் கோனை,
ஓடு, மிக்கு! என்று சொல்லி, ஊன்றினான், உகிரினாலே;
பாடு மிக்கு உய்வன் என்று பணிய, நல்-திறங்கள் காட்டி
ஆடு மிக்கு அரவம் பூண்டார்-அவளி வணல்லூராரே.
5.001
5 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
நாடி, நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும், திரிந்தும், காண வல்லரோ-
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து-
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே?
5.063
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்!
ஆடுமின்(ன்)! அழுமின்! தொழுமின்(ன்)! அடி
பாடுமின்! பரமன் பயிலும்(ம்) இடம்,
கூடுமின், குரங்காடுதுறையையே!
5.078
5 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
நாடி நாரணன், நான்முகன், வானவர்
தேடி ஏசறவும், தெரியாதது ஓர்
கோடிகாவனைக் கூறாத நாள் எலாம்
பாடிகாவலில் பட்டுக் கழியுமே.
5.086
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
நாடி வந்து, நமன் தமர் நல் இருள்
கூடி வந்து, குமைப்பதன் முன்னமே,
ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை
வாடி ஏத்த, நம் வாட்டம் தவிருமே.
6.071
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
நாடகம் ஆடி(இ)டம் நந்திகேச்சுரம், மா காளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்கு ஆன
கோடீச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், கூறுங்கால்
ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அம் தண் கானல்
ஈடு திரை இராமேச்சுரம், என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே.
7.090
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நாடு உடைய நாதன் பால் நன்று என்றும் செய், மனமே! நம்மை நாளும்,
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்;
மோடு உடைய சமணர்க்கும், முடை உடைய சாக்கியர்க்கும், மூடம் வைத்த,
பீடு உடைய-புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!
8.105.02
8 st/nd Thirumurai
Song # 11
மாணிக்க வாசகர்
திருவாசகம்
நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப் பெரிதும் விரைகின்றேன்;
ஆடகச் சீர் மணிக் குன்றே! இடை அறா அன்பு உனக்கும் என்
ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள்; எம் உடையானே!
10.105
10 st/nd Thirumurai
Song # 11
திருமூலர்
திருமந்திரம்
நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.
10.116
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே.
10.308
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவன்அவன் ஆமே.
10.311
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயா சித்திகள்பே தத்தின்
நீடுந் தூரங்கேட்டல் நீள்முடி வீராறே.
10.311
10 st/nd Thirumurai
Song # 18
திருமூலர்
திருமந்திரம்
நாடியின் ஓசை நயனம் இருதயம்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.
10.311
10 st/nd Thirumurai
Song # 28
திருமூலர்
திருமந்திரம்
நாடியின் உள்ளெழு நாதத் தொனியுடன்
தேடியுடன் சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.
அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.
10.314
10 st/nd Thirumurai
Song # 25
திருமூலர்
திருமந்திரம்
நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே.
10.402
10 st/nd Thirumurai
Song # 9
திருமூலர்
திருமந்திரம்
நாடும் பிரணவம் நடு இரு பக்கமும்
ஆடும்அவர் வா அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுஉள் முகம்ந மசிவாய
வாடும் சிவாயநம புறவட்டத் தாயதே.
10.406
10 st/nd Thirumurai
Song # 32
திருமூலர்
திருமந்திரம்
நாடிகள் மூன்றுள் நடுவெழு ஞாளத்துக்
கூடி யிருக்கும் குமரி குலக்கன்னி
பாடகச் சீறடி பைம்பொற் சிலம்பொலி
ஊடகம் மேவி உறங்குகின் றேனே.
10.411
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
நாடறி மண்டலம் நல்லஇக் குண்டத்துள்
கோடற வீதி கொணர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நெடுவீதி
ஈடற நாலைந் திடவகை ஆமே.
10.505
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.
10.607
10 st/nd Thirumurai
Song # 10
திருமூலர்
திருமந்திரம்
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல
வீடு மளவும் விடுகின் றிலேனே. 8,
10.731
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
நாடொறும் ஈசன் நடத்து தொழில் உன்னார்
நாடொறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடொறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கல்தான்
நாடொறும் நாடார்கள் நாள்வினை யாளரே. 32,
10.804
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலின் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குறிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.
10.805
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
நாடிய மண்டலம் மூன்றும் நலம்தெரிந்(து)
ஓடும் அவரோ(டு) உள்இருபத் தைந்தும்
கூடினர் கூடிக் குறிவழி யேசென்று
தேடினர் தேடித் திகைத்திருந் தார்களே.
10.816
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமா நித்த நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.
10.901
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
தேட அரிய சிறப்பில்லி எம்மிறை
ஓடும் உலகுயி ராகிநின் றானே.
11.002
11 st/nd Thirumurai
Song # 8
காரைக்கால் அம்மையார்
திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1
நாடும், நகரும் திரிந்து சென்று,
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்ட மாடே,
முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்
காடும், கடலும், மலையும், மண்ணும்,
விண்ணும் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.
11.033
11 st/nd Thirumurai
Song # 81
நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் திருவந்தாதி
நாட்டமிட்ட டன்ரி வந்திப்ப
வெல்படை நல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற் றவனென்பர்
சைவத் தவரரையில்
கூட்டுமக் கப்படம் கோவணம்
நெய்து கொடுத்துநன்மை
ஈட்டுமக் காம்பீலிச் சாலிய
நேசனை இம்மையிலே.
11.037
11 st/nd Thirumurai
Song # 32
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
நாடக சாலையும் நன்பொற் கபோதகம் சேர்
பீடமைத்த மாடத்தின் பெற்றியும் கேடில்
11.038
11 st/nd Thirumurai
Song # 73
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
நாடே றும்புகழ்
ஞானசம் பந்தன்வண்
சேடே றுங்கொச்சை
நேர்வளஞ் செய்துனை
மாடே றுந்தையல்
வாட மலர்ந்தனை
கேடே றுங்கொடி
யாய்கொல்லை முல்லையே. 47
பதிக வகை: எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
12.000
12 st/nd Thirumurai
Song # 268
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
நாடுமின் பொற்பு வாய்ப்பு
நாளுநாள் வளர்ந்து பொங்க
ஆடுமென் கழங்கும் பந்தும்
அம்மனை ஊச லின்ன
பாடுமின் னிசையுந் தங்கள்
பனிமலை வல்லி பாதங்
கூடுமன் புருகப் பாடுங்
கொள்கையோர் குறிப்புத் தோன்ற.
12.000
12 st/nd Thirumurai
Song # 290
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
நாட்டு நல்லிசை நாவலூ ரன்சிந்தை
வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
காட்டு வன்கட லைக்கடைந் தென்பபோற்
பூட்டு மேழ்பரித் தேரோன் கடல்புக.
12.070
12 st/nd Thirumurai
Song # 33
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
நாடு மன்பொடு நாயன்மார்க் களிக்கமுன் வைத்த
நீடு கோவண மடையநே ராகவொன் றொன்றாக்
கோடு தட்டின்மீ திடஇடக் கொண்டெழுந் ததுகண்
டாடு சேவடிக் கடியரு மற்புத மெய்தி.
12.100
12 st/nd Thirumurai
Song # 89
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
நாடியகழல் வயவர்களவர்
நாணனும்நெடு வரிவில்
காடனும்எனும் இருவருமலை
காவலரொடு கடிதில்
கூடினர்விடு பகழிகளொடு
கொலைஞமலிகள் வழுவி
நீடியசரி படர்வதுதரு
நீழலின்விரை கேழல்.
12.270
12 st/nd Thirumurai
Song # 33
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
நாட்டார் அறிய முன்னாளில்
நன்னாள் உலந்த ஐம்படையின்
பூட்டார் மார்பிற் சிறியமறைப்
புதல்வன் தன்னைப் புக்கொளியூர்த்
தாள்தா மரைநீர் மடுவின்கண்
தனிமா முதலை வாய்நின்றும்
மீட்டார் கழல்கள் நினைவாரை
மீளா வழியின் மீட்பனவே.
12.280
12 st/nd Thirumurai
Song # 1156
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
நாட்டுமறை முறையொழுக்கம்
ஞானபோ னகருக்கும்
கூட்டுவது மனங்கொள்வார்
கோதில்மறை நெறிச்சடங்கு
காட்டவரும் வேள்விபல
புரிவதற்கோர் கன்னிதனை
வேட்டருள வேண்டுமென
விண்ணப்பம் செய்தார்கள்.
12.340
12 st/nd Thirumurai
Song # 8
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
நாடோறும் சிவலிங்கங்
கண்டுண்ணு மதுநயந்து
மாடோர்வெள் ளிடைமன்னும்
சிவலிங்கங் கண்டுமனம்
நீடோடு களியுவகை
நிலைமைவரச் செயலறியார்
பாடோர்கல் கண்டதனைப்
பதைப்போடும் எடுத்தெறிந்தார்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F