சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் நந்தி
நந்தி     நந்தியை     நந்திமா     நந்திக்கும்    
3.049   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
நந்தி நாமம் நமச்சிவாய! என்னும்
சந்தையால்,-தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.

6.033   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன் தன்னை, நாகேச்சுரம் இடமா நண்ணினானை,
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை,
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம் கொண்ட பெருமானை, இமையோர் போற்றும்
அந்தணனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த வாறே!.

10.100   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
என்றிவர் என்னோ டெண்மரு மாமே.

10.100   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
நந்தி அருளாலே மூலனை நாடினேன்
நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.

10.100   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புத்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
நந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

10.100   10 st/nd Thirumurai   Song # 29   திருமூலர்   திருமந்திரம்  
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.

10.220   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே. 

10.318   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.

10.819   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
நந்தி யறிவும் நடுவில் அதீதமாம்
இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால்
நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும்
நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.

10.843   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான் கொள்ள
`எந்தைவந் தான்`என்(று) எழுந்தேன் எழுதலும்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

10.915   10 st/nd Thirumurai   Song # 40   திருமூலர்   திருமந்திரம்  
நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்(து)
அந்தர வானத்தின் அப்புரத் தப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

10.925   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியி னுள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தி னாலே புணர்ந்துகொண் டேனே.

11.008   11 st/nd Thirumurai   Song # 22   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப அந்தமில்சீர்

11.033   11 st/nd Thirumurai   Song # 33   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
நந்திக்கும் நம்பெரு மாற்குநல்
லாரூரில் நாயகற்குப்
பந்திப் பரியன செந்தமிழ்
பாடிப் படர்புனலில்
சிந்திப் பரியன சேவடி
பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்றொண்ட
னென்பரிவ் வையகத்தே.

12.280   12 st/nd Thirumurai   Song # 159   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நந்தி யெம்பிரான் முதற்கண
நாதர்கள் நலங்கொள்பன் முறைகூட
அந்த மில்லவர் அணுகிமுன்
தொழுதிரு அணுக்கனாந் திருவாயில்
சிந்தை யார்வமும் பெருகிடச்
சென்னியிற் சிறியசெங் கையேற
உய்ந்து வாழ்திரு நயனங்கள்
களிகொள்ள உருகுமன் பொடுபுக்கார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 373   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
நந்தி பிரானார் வந்தருள்
செய்ய நலமெய்தும்
சிந்தையு ளார்வங் கூர்களி
யெய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் தீரருள்
செய்யும் படிசெய்தீர்
எந்தைபி ரானே என்னினி
யென்பால் இடரென்றார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF