சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தேவ
தேவி     தேவராயும்,     தேவா!     தேவர்     தேவனும்     தேவர்கள்     தேவரொ     தேவனு     தேவாதி     தேவனைப்     தேவுமால்     தேவ     தேவர்தொழுந்     தேவர்பிரா     தேவர்தந்     தேவியார்     தேவர்பிரான்     தேவரும்     தேவர்பெரு     தேவா     தேவர்,     தேவரும்(ம்),     தேவியை     தேவி,     தேவூர்த்     தேவரிற்     தேவியங்    
1.008   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவி ஒருகூறினர், ஏறு அது ஏறும் செல்வினர், நல்குரவு என்னை நீக்கும்
ஆவியர், அந்தணர், அல்லல் தீர்க்கும் அப்பனார், அங்கே அமர்ந்த ஊராம்
பூ இயலும் பொழில் வாசம் வீச, புரிகுழலார் சுவடு ஒற்றி, முற்றப்
பா இயல் பாடல் அறாத ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

1.053   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்
நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்
மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்
மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.

1.097   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவா! அரனே! சரண்! என்று இமையோர் திசைதோறும்,
காவாய்! என்று வந்து அடைய, கார்விடம் உண்டு,
பா ஆர் மறையும் பயில்வோர் உறையும் பதிபோலும்
பூ ஆர் கோலச் சோலை சுலாவும் புறவமே.

2.028   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவர், திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர், மும்மதில் எய்த வில்லியர்,
காவலார் கருவூருள் ஆன்நிலை,
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே!

2.064   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்! பெரியோனே!
ஆவா! என்று, அங்கு அடியார் தங்கட்கு அருள் செய்வாய்!
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய்! என்று ஏத்தி,
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே.

2.078   2 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவரும்(ம்), அமரர்களும், திசைகள் மேல் உள தெய்வமும்,
யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால் தழல் உருவினார்;
மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர்
என்னவும்,
மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது விளநகர் அதே.

2.096   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவர் தானவர் பரந்து, திண் வரை மால் கடல் நிறுவி,
நா அதால் அமிர்து உண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ! என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன்நகரே.

3.010   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவியை வவ்விய தென் இலங்கைத் தசமாமுகன்
பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற,
ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம்
மேவிய சிந்தையினார்கள் தம்மேல் வினை வீடுமே.

3.101   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தேவியை வவ்விய தென் இலங்கை அரையன் திறல் வாட்டி
ஏ இயல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை,
நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும்
பா இயல் மாலை வல்லார் அவர் தம் வினை ஆயின பற்று அறுமே.

7.040   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
தேவி, அம்பொன்மலைக்கோமன் தன் பாவை, ஆகத் தனது உருவம் ஓருபாகம்    சேர்த்துவித்த பெருமான்;
மேவிய வெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேத      முதலானை;
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப, துறைக் கெண்டை மிளிர்ந்து, கயல்      துள்ளி விளையாட,
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே .

8.102   8 st/nd Thirumurai   Song # 15   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும்;
தேன் அமர் சோலைத் திருவாரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்;
இடைமருது அதனில் ஈண்ட இருந்து,

8.103   8 st/nd Thirumurai   Song # 12   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேவரும் அறியாச் சிவனே காண்க!
பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க!
கண்ணால் யானும் கண்டேன் காண்க!
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க!
கருணையின் பெருமை கண்டேன் காண்க!

8.105.03   8 st/nd Thirumurai   Song # 30   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேவர் கோ அறியாத தேவ தேவன்;
செழும் பொழில்கள் பயந்து, காத்து, அழிக்கும்மற்றை
மூவர் கோனாய் நின்ற முதல்வன்; மூர்த்தி;
மூதாதை; மாது ஆளும் பாகத்து எந்தை;
யாவர் கோன்; என்னையும் வந்து ஆண்டுகொண்டான்;
யாம் ஆர்க்கும் குடி அல்லோம்; யாதும்அஞ்சோம்;
மேவினோம் அவன் அடியார் அடியாரோடு;
மேன் மேலும் குடைந்து ஆடி, ஆடுவோமே.

8.142   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,
மூவராலும் அறிஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,
யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறிஒணா மலர்ச் சோதியான்,
தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!

8.201   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேவரிற் பெற்றநஞ் செல்வக்
   கடிவடி வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
   பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம்
   பலமணி மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென்
   வாடிப் புலம்புவதே.

8.225   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேவா சுரரிறைஞ் சுங்கழ
   லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
   நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன்
   தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
   தேனரும் பாவியனே.

8.225   8 st/nd Thirumurai   Song # 33   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
தேவியங் கண்திகழ் மேனியன்
   சிற்றம் பலத்தெழுதும்
ஓவியங் கண்டன்ன வொண்ணு
   தலாள் தனக் கோகையுய்ப்பான்
மேவியங் கண்டனை யோவந்
   தனனென வெய்துயிர்த்துக்
காவியங் கண்கழு நீர்ச்செவ்வி
   வௌவுதல் கற்றனவே.

10.101   10 st/nd Thirumurai   Song # 28   திருமூலர்   திருமந்திரம்  
தேவர் பிரான்நம் பிரான் திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருல கேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருள் பாடலு மாமே. 

10.124   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே. 

10.401   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றும்
தேவர் உறைகின்ற திருவம் பலம்என்றும்
தேவர் உறைகின்ற தென்பொது ஆமே.

10.601   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

10.706   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
யாவர் பிரான்என் றிறைஞ்சுவார் அவ்வ
ஆவர் பிரான்அடி அண்ணலும் ஆமே.

10.711   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

10.725   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
தேவர் பிரான்திசை பத்துத யம்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய்உரை யாநிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.

10.911   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
தேவர் அசுரர்நரர் சித்தர்வித் யாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சாத்தர் சமயம் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்இறை ஆடவே. 12,

10.914   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப்பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.

10.929   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
தேவனு மாகுந் திசைதிசை பத்துளும்
ஏவனு மாய்விரி நீருல கேழையும்
ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும்
நாவனு மாகி நவிற்றுகின் றானே.

11.008   11 st/nd Thirumurai   Song # 6   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான் ஓவாதே

11.008   11 st/nd Thirumurai   Song # 170   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது போவானேல்

11.021   11 st/nd Thirumurai   Song # 22   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை  
தேவனைப் பூதப் படையனைக் கோதைத் திருஇதழிப்
பூவனைக் காய்சினப் போர்விடை தன்னொடும் போற்றநின்ற
மூவனை ஈருரு வாயமுக் கண்ணனை முன்னுமறை
நாவனை நான்மற வேன் இவை நான்வல்ல ஞானங்களே.

12.100   12 st/nd Thirumurai   Song # 120   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
தேவுமால் கொண்டான் இந்தத்
திண்ணன்மற் றிதனைத் தீர்க்கல்
ஆவதொன் றறியோந் தேவ
ராட்டியை நாக னோடு
மேவிநாங் கொணர்ந்து தீர்க்க  
வேண்டும்அவ் வேட்டைக் கானில்
ஏவலாட் களையுங் கொண்டு  
போதுமென் றெண்ணிப் போனார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
தேவ தேவனும் அதுதிரு வுள்ளஞ்
செய்து தென்திசை மிக்கசெய் தவத்தால்
யாவ ருந்தனை யடைவது மண்மேல்
என்று முள்ளது காஞ்சிமற் றதனுள்
மாஅ மர்ந்தநம் இருக்கையி லணைந்து
மன்னு பூசனை மகிழ்ந்துசெய் வாயென்
றேவ வெம்பெரு மாட்டியும் பிரியா
விசைவு கொண்டெழுந் தருளுதற் கிசைந்தாள்.
12.210   12 st/nd Thirumurai   Song # 136   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தேவர் பிரான்திரு மாணி
குழியுந் தினைநகரும்
மேவினர் சென்று விரும்பிய
சொன்மலர் கொண்டிறைஞ்சிப்
பூவலர் சோலை மணமடி
புல்லப் பொருள்மொழியின்
காவலர் செல்வத் திருக்கெடி
லத்தைக் கடந்தணைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 239   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தேவர் பிரானைத் தென்புக
லூர்மன் னியதேனைப்
பாவியல் மாலைச் செந்தமிழ்
பாடிப் பரிவோடும்
மேவிய காலந் தோறும்
விருப்பிற் கும்பிட்டே
ஓவுதல் ஓவு திருப்பணி
செய்தங் குறைகின்றார்.

12.210   12 st/nd Thirumurai   Song # 376   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தேவர் தானவர் சித்தர்விச்
சாதரர் இயக்கர்
மேவு மாதவர் முனிவர்கள்
புடையெலாம் மிடையக்
காவி வாள்விழி அரம்பையர்
கானமும் முழவும்
தாவில் ஏழ்கடல் முழக்கினும்
பெருகொலி தழைப்ப.
12.210   12 st/nd Thirumurai   Song # 409   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தேவர்தொழுந் தனிமுதலைத்
திருவிரா மேச்சுரத்து
மேவியசங் கரனைஎதிர்
நின்றுவிருப் புறுமொழியால்
பாவுதிரு நேரிசைகள்
முதலான தமிழ்பாடி
நாவரசர் திருத்தொண்டு
நலம்பெருகச் செய்தமர்ந்தார்.
12.270   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
தேவர் பெருமான் எழுச்சிதிரு
மணலிக் கொருநாள் எழுந்தருள
யாவ ரென்னா துடன்சேவித்
தெல்லாக் குலத்தில் உள்ளோரும்
மேவ அன்பர் தாமுமுடன்
சேவித் தணைந்து விண்ணவர்தம்
காவ லாளர் ஓலக்கம்
அங்கே கண்டு களிப்புற்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 229   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவர் தம்பிரான் திருவரத்
துறையினில் இறைஞ்சி
மேவு நாள்களில் விமலனார்
நெல்வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம்முடன்
தொழுதுபின் சண்பைக்
காவ லார்அருள் பெற்றுடன்
கலந்துமீண் டணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 400   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவர்பிரா னமர்ந்ததிரு
இரும்பூளை சென்றெய்தக்
காவணநீள் தோரணங்கள்
நாட்டியுடன் களிசிறப்பப்
பூவணமா லைகள்நாற்றிப்
பூரணபொற் குடநிரைத்தங்கு
யாவர்களும் போற்றிசைப்பத்
திருத்தொண்டர் எதிர்கெண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 522   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவர்தந் தலைவனார் கோயில்புக் கனைவரும்
சீர்நிலத் துறவ ணங்கிப்
பாவருந் தமிழிசைப் பதிகமும் பாடிமுன்
பரவுவார் புறம்ப ணைந்தே
தாவில்சீர் முருகனார் திருமனைக் கெய்திஅத்
தனிமுதல் தொண்டர் தாமே
யாவையுங் குறைவறுத் திடஅமர்ந் தருளுவார்
இனிதின்அங் குறையு நாளில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 691   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவியார் தம்மை நோக்கித்
தென்னவன் கூறு கின்றான்
காவிநீள் கண்ணி னாய்கேள்
காவிரி நாட்டின் மன்னும்
தாவில்சீர்க் கழும லத்தான்
சங்கர னருள்பெற் றிங்கு
மேவினான் அடிகள் மாரை
வாதினில் வெல்ல என்று.
12.280   12 st/nd Thirumurai   Song # 898   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவர்பிரான் அமர்ந்ததிருக் கொள்ளம் பூதூர்
எதிர்தோன்றத் திருவுள்ளம் பணியச் சென்று
மேவுதலால் ஓடங்கள் விடுவா ரின்றி
ஒழிந்திடவும் மிக்கதோர் விரைவால் சண்பைக்
காவலனார் ஓடத்தின் கட்ட விழ்த்துக்
கண்ணுதலான் திருத்தொண்டர் தம்மை ஏற்றி
நாவலமே கோலாக அதன்மே னின்று
நம்பர் தமைக் கொட்டமென நவின்று பாட.
12.280   12 st/nd Thirumurai   Song # 974   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவர் முனிவர்க்கு ஓத்தளித்த
திருவோத் தூரில் திருத்தொண்டர்
தாவில் சண்பைத் தமிழ்விரகர்
தாம்அங் கணையக் களிசிறந்து
மேவுங் கதலி தோரணங்கள்
விளக்கு நிரைத்து நிறைகுடமும்
பூவும் பொரியுஞ் சுண்ணமும்முன்
கொண்டு போற்றி எதிர்கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1078   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவ தேவனைத் திருக்கபா
லீச்சரத் தமுதைப்
பாவை பாகனைப் பரிவுறு
பண்பினால் பரவி
மேவு காதலின் விரும்பிய
விரைவினால் விழுந்து
நாவின் வாய்மையால் போற்றினார்
ஞானசம் பந்தர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1093   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவரும் முனிவர் தாமும்
திருவருட் சிறப்பு நோக்கிப்
பூவரு விரைகொள் மாரி
பொழிந்தனர் ஒழிந்த மண்ணோர்
யாவரும் இருந்த வண்ணம்
எம்பிரான் கருணை என்றே
மேவிய கைகள் உச்சி
மேற்குவித் திறைஞ்சி வீழ்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1118   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவர்பிரான் அமர்ந்தருளும்
திருக்கபா லீச்சரத்து
மேவியஞா னத்தலைவர்
விரிஞ்சன்முதல் எவ்வுயிர்க்கும்
காவலனார் பெருங்கருணை
கைதந்த படிபோற்றிப்
பாவலர்செந் தமிழ்பாடிப்
பன்முறையும் பணிந்தெழுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1245   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவர்கள் தேவர் தாமும்
திருவருள் புரிந்து நீயும்
பூவையன் னாளும் இங்குன்
புண்ணிய மணத்தின் வந்தார்
யாவரும் எம்பாற் சோதி
இதனுள்வந் தெய்தும் என்று
மூவுல கொளியால் விம்ம
முழுச்சுடர்த் தாணு வாகி.
12.290   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவ ரொதுங்கத் திருத்தொண்டர்
மிடையுஞ் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளுங்
கடவுட் பெருமான் கழல்வணங்கி
நாவ லூர ரருள் பெற்று
நம்பர் பதிகள் பிறநண்ணிப்
பாவை பாகர் தமைப்பணிந்து
பாடும் விருப்பிற் சென்றணைவார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 71   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவர் பெருமான் கண்டியூர்
பணிந்து திருவை யாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி
விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம்
பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத் தமர்ந்தருளிப்
பள்ளி கொள்ளக் கனவின்கண்.
12.290   12 st/nd Thirumurai   Song # 148   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவர்பெரு மான்தன்னைத்
திருச்சாய்க்காட் டினிற்பணிந்து
பாவலர்செந் தமிழ்மாலைத்
திருப்பதிகம் பாடிப்போய்
மேவலர்தம் புரமெரித்தார்
வெண்காடு பணிந்தேத்தி
நாவலர்கா வலரடைந்தார்
நனிபள்ளித் திருநகரில்.
12.290   12 st/nd Thirumurai   Song # 332   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தேவா சிரியன் முறையிருக்குந்
தேவ ரெல்லாஞ் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார்
போத ஒழிந்தார் புறத்தொழிய
ஓவா அணுக்கச் சேவகத்தில்
உள்ளோர் பூத கணநாதர்
மூவா முனிவர் யோகிகளின்
முதலா னார்கள் முன்போக.
12.370   12 st/nd Thirumurai   Song # 69   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
தேவர் முனிவர் வந்திறைஞ்சுந்
தெய்வப் பெருமாள் கழல்வணங்கி
மூவர் தமக்கு முதலாகும்
அவரைத் திருமும் மணிக்கோவை
நாவ லூரர் தம்முன்பு
நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார்
தம்பி ரானார் தாம்கொண்டார்.
12.450   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
தேவர்பிரான் திருவிளக்குச்
செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார்
கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனாது அரனடியார்
தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார்
திருத்தொண்டின் நலமுரைப்பாம்.
12.680   12 st/nd Thirumurai   Song # 11   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
தேவி புதல்வன் பெற்றிறக்கச்
செங்கோல் சோழன் சுபதேவன்
ஆவி அனைய அரும்புதல்வன்
தன்னை வளர்த்தங் கணிமகுடம்
மேவும் உரிமை முடிகவித்துத்
தானும் விரும்பு பெருந்தவத்தின்
தாவில் நெறியைச் சென்றடைந்து
தலைவர் சிவலோ கஞ்சார்ந்தான்.
12.680   12 st/nd Thirumurai   Song # 17   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
தேவர்பிரான் திருத்தொண்டில்
கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொதுநீக்கி
யாண்டருளிப் புவனியின்மேல்
ஏவியநல் தொண்டுபுரிந்
திமையவர்கள் அடிபோற்ற
மேவினார் திருத்தில்லை
வேந்தர்திரு வடிநிழற்கீழ்.
12.720   12 st/nd Thirumurai   Song # 33   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
தேவர் தங்குழாம் நெருங்கிய
வாய்தனில் திருநாவ லூரர்தம்
காவல் மன்னரும் புறப்பட
எதிர்கொண்டு கயிலைவீற் றிருக்கின்ற
பூவ லம்புதண் புனற்சடை
முடியவர் அருளிப்பா டெனப்போற்றி
ஏவல் என்றபின் செய்வதொன்று
இலாதவர் பணிந்தெழுந் தெதிரேற்றார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5