சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் துள
துளங்கும்     துளி     துள்ளும்     துள்யாதும்     துளிவளர்     துளைக்கைஅயிரா     துள     துளக்கம்     துளைக்கைவேழத்து     துள்ளு     துளை    
1.035   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துளங்கும் நெறியார் அவர் தொன்மை
வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை!
விளங்கும் பொழில் வீழி மிழலை
உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.

1.046   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துளங்கும் சுடர் அங்கைத் துதைய விளையாடி,
இளங்கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி,
வளம் கொள் புனல் சூழ்ந்த வயல் ஆர் அதிகையுள்,
விளங்கும் பிறைசூடி ஆடும், வீரட்டானத்தே.

1.081   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துளி வண் தேன் பாயும் இதழி, மத்தம்,
தெளி வெண் திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி,
ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே.

1.091   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே.

2.088   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன், நடம் மன்னு
துன்னு சுடரோன்,
ஒளி மண்டி உம்பர் உலகம் கடந்த உமைபங்கன், எங்கள்
அரன், ஊர்
களி மண்டு சோலை, கழனிக் கலந்த கமலங்கள் தங்கும்
மதுவின்
தெளி மண்டி உண்டு, சிறைவண்டு பாடு திரு முல்லை
வாயில் இதுவே.

3.018   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துள மதி உடை மறி தோன்று கையினர்
இளமதி அணி சடை எந்தையார், இடம்
உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய,
வள மதி தடவிய, மாடக்கோயிலே.

3.025   3 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துளக்கம் இல்லாதன; தூய தோற்றத்தன;
விளக்கம் ஆக்கு(வ்)வன வெறி வண்டு ஆரும் பொழில்
திளைக்கும் தேவன்குடி, திசைமுகனோடு மால்
அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே

3.044   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
துள்ளும் மான்மறி அம் கையில் ஏந்தி, ஊர்
கொள்வனார், இடு வெண்தலையில் பலி;
கள்வனார்; உறையும் கழிப்பாலையை
உள்ளுவார் வினை ஆயின ஓயுமே.

5.006   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துளைக்கைவேழத்து உரி உடல் போர்த்தவர்;
வளைக்கையாளை ஓர்பாகம் மகிழ்வு எய்தி
திளைக்கும் திங்கள் சடையின்திசைமுழுது
அளக்கும் சிந்தையர் போலும்-ஆரூரரே.

5.087   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
துள்ளு மான்மறி, தூ மழுவாளினர்;
வெள்ள நீர் கரந்தார், சடைமேல் அவர்;-
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார்; கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.

7.042   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில்-துளங்கும் படியாய்!
க(ள்)ளையே கமழும் மலர்க் கொன்றையினாய்! கலந்தார்க்கு அருள் செய்திடும் கற்பகமே!
பி(ள்)ளை வெண் பிறையாய்! பிறங்கும் சடையாய்! பிறவாதவனே! பெறுதற்கு அரியாய்!
வெ(ள்)ளை மால் விடையாய்! வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே.

11.008   11 st/nd Thirumurai   Song # 164   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து
கள்ஆவி நாறும் கருங்குழலாள் தெள்ளொளிய

12.290   12 st/nd Thirumurai   Song # 366   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
துளிவளர் கண்ணீர் வாரத்
தொழுதுவிண் ணப்பஞ் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம்
வருந்தஓர் இரவு மாறா
தளிவரும் அன்பர்க் காக
அங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீரு மானால்
என்செய்கேன் இசையா தென்றார்.
12.410   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
துளைக்கைஅயிரா வதக்களிறும்
துரங்கஅர சுந்திருவும்
விளைத்தஅமு துந்தருவும்
விழுமணியுங் கொடுபோத
உளைத்தகடல் இவற்றொன்று
பெறவேண்டி உம்பரூர்
வளைத்ததுபோன் றுஉளதங்கண்
மதில்சூழ்ந்த மலர்க்கிடங்கு.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3