![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் துடி
துடிகளோடு
துடிக்குற
துடியடியன
துடியிடையாள்
துடி
துடிக்கின்ற
துடித்த
1.028
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துடிகளோடு முழவம் விம்மவே,
பொடிகள் பூசி, புறங்காடு அரங்கு ஆக,
படி கொள் பாணி பாடல் பயின்று ஆடும்
அடிகள் சோற்றுத்துறை சென்று அடைவோமே.
3.086
3 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
துடி படும் இடை உடை மடவரல் உடன் ஒரு பாகமா,
இடிபடு குரல் உடை விடையினர்; படம் உடை அரவினர்;
பொடி படும் உருவினர்; புலி உரி பொலிதரும் அரையினர்
செடி படு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
4.102
4 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து, துளங்கா மதி அணிந்து,
முடித் தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி,
பொடிக்கொண்டு பூசிக் புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன், ஆரூர் அமுதினுக்கே.
5.032
5 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
துடித்த தோள் வலி வாள் அரக்கன்தனைப்
பிடித்த கைஞ் ஞெரிந்து உற்றன, கண் எலாம்
பொடிக்க ஊன்றிய, பூந்துருத்தி(ந்) நகர்ப்
படிக் கொள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
6.015
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்;
சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்;
படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால்
நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்;
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்;
கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்;
கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே.
8.129
8 st/nd Thirumurai
Song # 5
மாணிக்க வாசகர்
திருவாசகம்
துடி கொள் நேர் இடையாள், சுரி குழல் மடந்தை துணை முலைக்கண்கள் தோய் சுவடு,
பொடி கொள் வான் தழலில், புள்ளி போல், இரண்டு பொங்கு ஒளி தங்கு மார்பினனே!
செடி கொள் வான் பொழில் சூழ் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவியசீர்
அடிகளே! அடியேன் ஆதரித்து அழைத்தால், அதெந்துவே?' என்று, அருளாயே!
8.140
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
துடி ஏர் இடுகு இடைத் தூ மொழியார் தோள் நசையால்
செடி ஏறு தீமைகள் எத்தனையும் செய்திடினும்,
முடியேன்; பிறவேன்; எனைத் தன தாள் முயங்குவித்த
அடியேன் குலா தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
12.100
12 st/nd Thirumurai
Song # 24
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
துடிக்குற டுருட்டி யோடித்
தொடக்குநாய்ப் பாசஞ் சுற்றிப்
பிடித்தறுத் தெயினப் பிள்ளைப்
பேதையர் இழைத்த வண்டல்
அடிச்சிறு தளிராற் சிந்தி
அருகுறு சிறுவ ரோடும்
குடிச்சிறு குரம்பை யெங்கும்
குறுநடைக் குறும்பு செய்து.
12.100
12 st/nd Thirumurai
Song # 86
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
துடியடியன மடிசெவியன
துறுகயமுனி தொடரார்
வெடிபடவிரி சிறுகுருளைகள்
மிகைபடுகொலை விரவார்
அடிதளர்வுறு கருவுடையன
அணைவுறுபிணை அலையார்
கொடியனஎதிர் முடுகியும்உறு
கொலைபுரிசிலை மறவோர்.
12.280
12 st/nd Thirumurai
Song # 875
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
துடியிடையாள் தன்னோடும்
தோணியில் வீற்றிருந்தபிரான்
அடிவணங்கி அலர்சண்பை
அதனின்றும்வழிக்கொண்டு
படியின்மிசை மிக்குளவாம்
பரன்கோயில் பணிந்தேத்தி
வடிநெடுவேல் மீனவன்தன்
வளநாடு வந்தணைந்தார்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF