சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் திருவா
திருவாய     திருவாக்கும்     திருவார்     திருவாளன்     திருவா     திருவான்மி     திருவாலங்     திருவால     திருவாறை     திருவாரூர்     திருவார்ந்த    
10.601   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் வராவிடில் ஓரவொண் ணாதே.

11.020   11 st/nd Thirumurai   Song # 1   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை  
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

12.060   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
திருவார் பெருமை திகழ்கின்ற
தேவா சிரிய னிடைப்பொலிந்து
மருவா நின்ற சிவனடியார்
தம்மைத் தொழுது வந்தணையா
தொருவா றொதுங்கும் வன்றொண்டன்
புறகென் றுரைப்பச் சிவனருளாற்
பெருகா நின்ற பெரும்பேறு
பெற்றார் மற்றும் பெறநின்றார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 67   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
திருவாளன் திருநீறு
திலகவதி யார்அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப்
பெருந்தகையார் பணிந்தேற்றங்
குருவார அணிந்துதமக்
குற்றவிடத் துய்யுநெறி
தருவாராய்த் தம்முன்பு
வந்தார்பின் தாம்வந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 322   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
திருவா யிலினைப் பணிந்தெழுந்து
செல்வத் திருமுன் றிலைஅணைந்து
கருவார் கச்சி ஏகம்பர்
கனக மணிமா ளிகைசூழ்ந்து
வருவார் செம்பொன் மலைவல்லி
தழுவக் குழைந்த மணிமேனிப்
பெருவாழ் வினைமுன் கண்டிறைஞ்சிப்
பேரா அன்பு பெருகினார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 331   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
திருவான்மி யூர்மருந்தைச்
சேர்ந்துபணிந் தன்பினொடும்
பெருவாய்மைத் தமிழ்பாடி
அம்மருங்கு பிறப்பறுத்துத்
தருவார்தங் கோயில்பல
சார்ந்திறைஞ்சித் தமிழ்வேந்தர்
மருவாரும் மலர்ச்சோலை
மயிலாப்பூர் வந்தடைந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 342   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
திருவாலங் காடுறையுஞ்
செல்வர்தாம் எனச்சிறப்பின்
ஒருவாத பெருந்திருத்தாண்
டகம்முதலாம் ஓங்குதமிழ்ப்
பெருவாய்மைத் தொடைமாலை
பலபாடிப் பிறபதியும்
மருவார்வம் பெறவணங்கி
வடதிசைமேல் வழிக்கொள்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 406   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
திருவால வாய்அமர்ந்த
செஞ்சுடரைச் செழும்பொருள்நூல்
தருவானை நேரிசையும்
தாண்டகமும் முதலான
பெருவாய்மைத் தமிழ்பாடிப்
பேணுதிருப் பணிசெய்து
மருவார்தம் புரம்எரித்தார்
பூவணத்தை வந்தடைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 390   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருவாறை மேற்றளியில்
திகழ்ந்திருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி
உருகியஅன் பொடுபோற்றி
மருவாரும் குழல்மலையாள்
வழிபாடு செய்யஅருள்
தருவார்தந் திருச்சத்தி
முற்றத்தின் புறஞ்சார்ந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1121   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
திருவான்மி யூர்மன்னும்
திருத்தொண்டர் சிறப்பெதிர
வருவார்மங் கலஅணிகள்
மறுகுநிரைத் தெதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி
அவர்வணங்கத் தொழுதன்பு
தருவார்தங் கோயில்மணித்
தடநெடுங்கோ புரம்சார்ந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 93   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
திருவால வாய்அமர்ந்த
செஞ்சடையார் கோயில்வலம்
வருவார்முன் வீழ்ந்திறைஞ்சி
வன்றொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றிசைத்துத்
தாழ்ந்தெழுந்து வாழ்ந்ததமிழ்ப்
பெருவாய்மை மலர்புனைந்து
பெருமகிழ்ச்சி பிறங்கினார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 157   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
திருவாரூர் தனைநினைந்து
சென்றுதொழு வேன்என்று
மருவுஆர்வத் தொண்டருடன்
வழிக்கொண்டு செல்பொழுதில்
ஒருவாநண் புள்ளுருக
வுடனெழுந்து கைதொழுது
பெருவான வரம்பனார்
பிரிவாற்றார் பின்செல்வார்.
12.680   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   மன்னிய சீர்ச் சருக்கம்  
திருவார்ந்த செம்பொன்னின்
அம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமானை அடிவணங்கிப்
பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் றுளங்களிப்பத்
தொழுதேத்தி உறையும் நாள்
வருவாய்மை மறையவர்க்கு
மாளிகைகள் பலசமைத்தார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE