![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தாய
தாயும்
தாயவன்
தாயோங்கித்
தாய
தாயர்திரு
தாயானே!
தாயினும்
தாயத்தார்,
தாய்
தாயின்
தாயிற்
தாயின்நேர்
1.050
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்;
ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்;
மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!
1.113
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தாயவன் உலகுக்கு, தன் ஒப்பு இலாத்
தூயவன், தூ மதி சூடி, எல்லாம்
ஆயவன், அமரர்க்கும் முனிவர்கட்கும்
சேயவன், உறைவு இடம் திரு வல்லமே.
2.015
2 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே! ஆய நல் அன்பர்க்கு அணியானே!
சேயானே! சீர் திகழும் திருக்காறாயில்
மேயானே! என்பவர்மேல் வினை மேவாவே.
3.123
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
தாயினும் நல்ல தலைவர்! என்று அடியார் தம் அடி போற்று இசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர், காண் பலவேடர்,
நோயிலும் பிணியும் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடல் உடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே.
5.076
5 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
தாயத்தார், தமர், நன்நிதி, என்னும் இம்
மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல்!
காயத்தே உளன், கானூர் முளையினை
வாய்அ(த்)தால் வணங்கீர், வினை மாயவே!
5.085
5 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
தாயும் ஆய் எனக்கே, தலை கண்ணும் ஆய்,
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை;
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாயனார் என, நம் வினை நாசமே.
5.100
5 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர்-
ஆய உள்ளத்து அமுது அருந்தப் பெறார்-
பேயர், பேய்முலை உண்டு உயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.
6.033
6 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
தாய் அவனை, எவ் உயிர்க்கும்; தன் ஒப்பு இல்லாத் தகு தில்லை நடம் பயிலும் தலைவன் தன்னை;
மாயவனும், மலரவனும், வானோர், ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன் தன்னை;
மேயவனை, பொழில் ஆரூர் மூலட்டானம், விரும்பிய எம்பெருமானை; எல்லாம் முன்னே
ஆயவனை; அரநெறியில் அப்பன் தன்னை; அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.
6.064
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
தாய் அவன் காண், உலகிற்கு; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; மலை மங்கை பங்கா! என்பார்
வாயவன் காண்; வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண், வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்;
சேயவன் காண், நினையார்க்கு; சித்தம் ஆரத் திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
6.066
6 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை, மலையவனை, உலகம் எல்லாம்
ஆயவனை, சேயவனை, அணியான் தன்னை, அழலவனை, நிழலவனை, அறிய ஒண்ணா
மாயவனை, மறையவனை, மறையோர் தங்கள் மந்திரனை, தந்திரனை, வளரா நின்ற
தீ அவனை, திரு நாகேச்சுரத்து உளானை, சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
7.017
7 st/nd Thirumurai
Song # 7
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
தாய் அவளாய், தந்தை ஆகி, சாதல் பிறத்தல் இன்றி,
போய் அகலாமைத் தன் பொன் அடிக்கு என்னைப் பொருந்த வைத்த
வேயவனார்; வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளும் கொண்ட
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே.
8.101
8 st/nd Thirumurai
Song # 13
மாணிக்க வாசகர்
திருவாசகம்
தாயின் சிறந்த தயா ஆன தத்துவனே!
மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே!
தேசனே! தேன் ஆர் அமுதே! சிவபுரனே!
பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே!
நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
8.150
8 st/nd Thirumurai
Song # 5
மாணிக்க வாசகர்
திருவாசகம்
தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே;
தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தயா, நீ, என்பால் இல்லையே?
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ?
8.216
8 st/nd Thirumurai
Song # 11
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
தாயிற் சிறந்தன்று நாண்தைய
லாருக்கந் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் றோளிதிண்
கற்பின் விழுமிதன்றீங்
கோயிற் சிறந்துசிற் றம்பலத்
தாடும்எங் கூத்தப்பிரான்
வாயிற் சிறந்த மதியிற்
சிறந்த மதிநுதலே.
9.008
9 st/nd Thirumurai
Song # 3
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
தாயின்நேர் இரங்கும் தலைவஓ என்றும்
தமியனேன் துணைவஓ என்றும்
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி
நலம்புரி பரமர்தம் கோயில்
வாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர
வளரிளம் சோலைமாந் தளிர்செந்
தீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
11.010
11 st/nd Thirumurai
Song # 41
நக்கீரதேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் தீயோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.
11.033
11 st/nd Thirumurai
Song # 16
நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் திருவந்தாதி
தாயவன் யாவுக்கும் தாழ்சடை
மேல்தனித் திங்கள்வைத்த
தூயவன் பாதம் தொடர்ந்து
தொல்சீர்த்துளை யாற்பரவும்
வேயவன் மேல்மழ நாட்டு
விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவன் ஆனாய னென்னை
யுவந்தாண் டருளினனே.
12.130
12 st/nd Thirumurai
Song # 5
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
தாய னாரெனும் நாமந் தரித்துளார்
சேய காலந் தொடர்ந்தும் தெளிவிலா
மாய னார்மண் கிளைத்தறி யாதஅத்
தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 44
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தாயர்திரு மடித்தலத்தும்
தயங்குமணித் தவிசினிலும்
தூயசுடர்த் தொட்டிலினும்
தூங்குமலர்ச் சயனத்தும்
சேயபொருள் திருமறையும்
தீந்தமிழும் சிறக்கவரு
நாயகனைத் தாலாட்டு
நலம்பலபா ராட்டினார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 211
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
தாய ரோடும் தந்தையார்
பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்றிதுஎம்
பெருமா னீசன் திருவருளே
மேய வொருவர்க் குரிய தியான்
வேறென் விளையும் எனவெருவுற்று
ஆய வுணர்வு மயங்கிமிக
அயர்ந்தே அவனி மிசைவிழுந்தார்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF