சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் தழை
தழை     தழைக்கின்ற     தழைம     தழைத்தது     தழைதவழ்    
1.012   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தழை ஆர் வடவிடவீதனில் தவமே புரி சைவன்,
இழை ஆர் இடை மடவாளொடும், இனிதா உறைவு இடம் ஆம்
மழை வான் இடை முழவ, எழில் வளை வாள் உகிர், எரி கண்,
முழை வாள் அரி குமிறும் உயர் முதுகுன்று அடைவோமே.

1.115   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தழை மயில் ஏறவன் தாதையோ தான்,
மழை பொதி சடையவன், மன்னு காதில்
குழை அது விலங்கிய கோல மார்பின்
இழையவன், இராமன தீச்சரமே.

2.119   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும், சாதியின்
பழமும், உந்திப் புனல் பாய் பழங்காவிரித் தென்கரை,
நழுவு இல் வானோர் தொழ, நல்கு சீர் மல்கு நாகேச்சுரத்து
அழகர் பாதம் தொழுது ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.

4.049   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ்த் தாபரம் மணலால் கூப்பி,
அழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்து கொண்டு ஆட்ட, கண்டு
பிழைத்த தன் தாதை தாளைப் பெருங் கொடு மழுவால் வீச,
குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

9.010   9 st/nd Thirumurai   Song # 7   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
தழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும்
    சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
    குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியநீர்ப் பழனம்
    கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும்
    மைந்தர்தம் வாழ்வுபோன் றனவே.
10.108   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

11.036   11 st/nd Thirumurai   Song # 18   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
தழைக்கின்ற சீர்மிகு ஞானசம்
பந்தன் தடமலைவாய்
அழைக்கின்ற மஞ்சைக் கலர்ந்தன
கோடலம் பெய்திடுவான்
இழைக்கின்ற தந்தரத் திந்திர
சாபம்நின் னெண்ணமொன்றும்
பிழைக்கின்ற தில்லைநற் றேர்வந்து
தோன்றிற்றுப் பெய்வளையே.

12.280   12 st/nd Thirumurai   Song # 505   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
தழைம லர்த்தடஞ் சாலைகள்
தெற்றிகள் சதுக்கம்
குழைமு கத்தவர் ஆடரங்
கிமையவர் குழாமும்
விழைசி றப்பின வியலிடம்
யாவையு மிடைந்து
மழைமு ழக்கென இயம்பின
மங்கல இயங்கள்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88